This entry is in the series 20040212_Issue

காளிதாஸ்


என்
பிறப்பில் நான்
அழுது
காட்டினேனே
மறந்துவிட்டாயா
உலகமே

நான்
இறக்கும் போது
எப்படி
அழவேண்டும்
என்று
உங்களுக்குச்
சொல்லித்தரவே
நான் அழுதேன்
என் பிறப்பில்

நான்
இறக்கும்போது
எல்லோரும்
அழ
நான் மட்டும்
அழாமல்
கிடப்பேனல்லவா

அதற்காகத்தான்
இப்படி
முன்னதாகவே
அழுதுவிட்டேன்

எனக்கே
நான்
கடன்படலாமோ

எனக்கான
ஒப்பாரியை
நானே
செய்யாதிருக்கலாமா

ஆம்
நானென்
கடைசி
அழுகையைத்தான்
முதலிலேயே
அழுது வைத்தேன்

kaalidas@hotmail.com

Series Navigation