ப.மதியழகன்
மிருகஜாதி
சுற்றமும், நட்பும்
எனது ஊனச்சிறகுகளை
அவ்வப்போது
தங்களது கொடிய கரங்களால்
உடைத்தெறிந்துவிட்டு
நினைத்ததை முடித்ததில்
மனநிறைவு கொள்கின்றனர்
நிலை மாறும உலகில்
சற்றே தாழப்பறக்க நேர்ந்தாலும்
என் தலைக்கு மேலே
அவர்களின் உயரம் இருக்கும்படி
கவனமாய் பார்த்துக்கொள்கின்றனர்.
———————–
கானல்நீர்
அடர்ந்த இருள் கவிந்த
வாழ்க்கைப் பாதையில்
நிலைச்சுடரின் பிரகாசம்
கூப்பிடு தொலைவில்
கண்ணில் தெரிந்தது
அதை நோக்கி
எனது கால்கள் குதூகலமாய்
விரைந்து நடக்கத் தொடங்க,
அந்தச் சுடரை நெருங்க நெருங்க
அந்த பேரொளி வெள்ளம்
பின்னோக்கி தனது
கிரணங்களை இழுத்துக்கொண்டது
எனது கஷ்டங்களுக்கு
ஒரு தீர்வென்பது
பாலைவனக் கானல் நீரானது.
mail id:mathi2k9@gmail.com
- தமிழ் அறிஞர்கள் பங்கேற்க முடியாமல் போனது யார் பிழை?
- கட்டுக்கதையான ஹூசேனின் மாசற்றதன்மை!
- கண்ணுக்குட்டி
- ‘திருக்குறளும் உலகமும்’ – தமிழ்த்தந்திப் புலவர் அ.சிவலிங்கம் புத்தகங்கள்
- நினைவுகளின் தடத்தில் – 36
- நிறுத்தக் குறிகளும் பயன்படுத்தமும்
- “தமிழ் நாடகத்தந்தை பம்மல் சம்பந்தமுதலியார்”
- MEOW! Presented by Agni Kootthu (Theatre of Fire)
- சாகித்ய அகாடமி பஞ்சாபி மற்றும் தமிழ்க் கவிஞர்கள் சந்திப்பு
- பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு
- உதயன் (துரம் – மன்னார்) எழுதிய “லோமியா” நாவல் விமர்சன ஒன்றுகூடல்
- “முகம்மது இஸ்மாயில்- இபுராஹீம் பிவி நினைவு” சிறுகதை-கவிதை போட்டி
- வாழும் தமிழ் நூற்காட்சி மாயமீட்சி-மிலான் குந்தேரா தமிழாக்கம்
- நியூஜெர்ஸி தமிழ்ச்சங்கத்தின் இருபதாவது ஆண்டுவிழா மலர் ! படைப்புகள் வரவேற்கப்படுகின்றன
- தூக்கணாங் குருவிக்கூடு!
- பச்சைத் தோட்டத்திலிருந்து அறிவுக்கனிதேடி அலைந்த பறவை
- விண்வெளிக் கப்பலில் பணிசெய்த பாரத வீராங்கனை கல்பனா செளலா (1962-2003)
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << என் உள்ளொளி நோக்கம் >> (My Vision) கவிதை -18
- சின்னராஜு
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -4
- முள்பாதை 2
- வார்த்தை அக்டோபர் 2009 இதழில்…
- 750ஆவது ‘எபிஸோட் !
- மெளனமான கொடூரம்
- மிருகஜாதி
- அப்படியொன்றும்
- நினைவின் கணங்கள்
- முன்னாள் சிநேகிதிகள்
- பாய்ச்சல் எதுவரையாகிலும்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 57 << என் விழியில் நீ >>
- கடல்
