அலறி
நீ ஒளியிழந்தபோது
ஒரு கோடி நட்சத்திரங்கள் உதிா;ந்தன
உன் தோப்புக் குயில்கள்
குரலொடிந்தன.
கடலெனக் கிடந்தாய்
செல்வங்கள் கொட்டி
சமுத்திரமென பறந்தாய்
உன்னை நம்பிய
எங்கள் ஓடங்கள் கரை சோ;ந்தன
குடும்பக் குயில்கள் பாட்டிசைத்தன.
அதிகாலை போலவே
அன்றும் நீ
சிாித்துக் கொண்டுதான்
கடல் வாய்க்குள் போனாய்
கயல்மீன்கள் தேடி
திரும்பாத சேதி தொியாமல்
அந்திக் கருக்கல் வரைக்கும்
உன் குளத்துக் கொக்குகள்
ஒற்றைக் காலில் நின்றன.
நீ
உயிருடன் திரும்புவாயென
ஆறு கடல் நீந்திக் கடந்தவன்
ஏழு மலைகள் ஏறிக்குதித்தவன்
நீயென்பதால்.
உச்சிவெயில் கொழுத்திய
மறுபொழுது
நீ மீட்கப்பட்டாய்
ஓடைக்குள்ளிருந்து
கொடுகிய கோழி;க்குஞ்சுபோல
உன்வெற்றுடல் கண்டு
செம்பூக்கள் கதறின
வண்ணாத்தி பூச்சிகளும் பதறின.
ஆழிப்பேரலைக்குள் அகப்பட்டு
மூச்சடங்கும்போதும்
கண்ணுக்குள் வைத்து
காக்கச் சொன்னாய்
கண்மணி மகளையல்லவா
மாமா!
அலறி, இலங்கை
- பெரியபுராணம்- 38
- விஸ்வாமித்ராவுக்குப் பதில்
- சுகுமாரனின் ‘ திசைகளும் தடங்களும் ‘ – வெளிச்சம் தரும் விளக்குகள்
- நடைமுறை வாழ்க்கை எழுப்பும் சிந்தனை அலைகள் – ( தீராத பசிகொண்ட விலங்கு- வாசிப்பனுபவம்)
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-8
- பாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி
- பூரணம் எய்திய இந்தியாவின் முதல் பூதக் கனநீர் அணுமின் நிலையம் (540 MWe)
- ருசி
- எவர் மீட்பார் ?
- கீதாஞ்சலி (20) – என் பணி இந்த உலகுக்கு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- நிழல்களைத் தேடி..
- முந்தைய சூழல் ஒன்றுக்காய்
- மாமா ஞாபகங்களுக்காக
- பின் சீட்
- புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்
- எண்ணச் சிதறல்கள் – காஷ்மீர்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 2
- மதச்சார்பின்மை என்ற அறிவியல் தன்மையற்ற அறிவியல்
- வெறும் பூக்களுடன் சில ராஜகுமாரர்கள்
- அவளும் பெண்தானே
- மழுங்கடிக்கப்பட்ட விதைகள்
- ஆத்மா
- குழந்தைத் திருமணம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தின் தழுவல் (முதல் காட்சியின் தொடர்ச்சி -2)
- புதிய தொடர்கதை – ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன்