காசிகணேசன் ரங்கநாதன்.

1.
மனிதம் மனிதம் மனிதம் என்று
மனிதன் காக்கும் மனிதர்காள்!
மிருகம் காக்கும் காப்பிலும்
மனிதம் உண்டு அறிகுமே!
வானமீதில் தாவிப்பறக்கும்
வண்ணப்பறவை தன்னிலும்,
பூமிதன்னில் ஊருகின்ற
நத்தை புழுக்கள் தன்னிலும்,
நாய் நரிகள் தன்னிலும்,
அணில் குரங்கு தன்னிலும்,
வலிகள் உண்டு அறிகுமே!
வலிகள் உண்டு அறிகுமே!
2.
கண்டேன் கண்டறியாதன கண்டேன்!
கொண்டேன் பெருங்கவலை கொண்டேன்!
ஓங்கி வளர்ந்ததோர் நகரத்திடை மருங்கினில்
செயற்கைக் கானத்தே,
உழைத்துக் களைத்ததோர் கழுதை ஊர்ந்து
நகர்தல் கண்டேன்.
கண்டேனதன் தோளும் விலாவும் துவண்டுபோய்
வீழ்தல் கண்டேன்.
வெந்த முகத்தோடு கண் அவிந்து சருகுகளைக்
குச்சிகளை கற்களை உணவென்றே கருதி
சகஜமாய் உண்ணக்கண்டேன். (கண்டேன்..)
வனத்தின்று வெளிப்போந்த போழ்திலே
வீங்கிய முகத்தொடொருநாய் அழுகிய உணவினை
முகர்ந்து நகர்தல் கண்டேன்.
விபத்தில் சிக்கிய மனிதனின் வீங்கிய முகத்தின்மேல்
ஆயிரம் கேமராக்கள் மின்னுதல் கண்டேன். (கண்டேன்..)
3.
கண்டேன் கழிப்பறைகள் கண்டேன்!
கழிவுகளால் நிரம்பியிருக்கக் கண்டேன்.
இது அல்ல.. இது அல்ல..
என்று ஒதுக்கியபின் கடைசிக்
கழிப்பறையும் கழிவாய்… (கண்டேன்..)
கழிந்தன என் கழிவுகள்…
கழிப்பறையின் கழிவுகளோ கழியாமல். (கண்டேன்..)
—-
ranganath73@yahoo.co.uk
- ஐயம், சந்தேகம், அயிர்ப்பு! (இலக்கிய நாடகம் – பகுதி இரண்டு)
- கீதாஞ்சலி (61) ஏழையின் வரவேற்பு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- முற்றும் இழத்தல்
- இப்போதாவது புரிகிறதா
- கவிதைகள்
- விண்வெளி ஊர்திகள் கண்கண்ட செவ்வாய்க் கோளின் தளங்கள் [Rover Explorations on Planet Mars-2 (2006)]
- நான் கண்ட சிஷெல்ஸ் – 10. சேவை அமைப்புகள்
- மெட்டாபிக்சனின் ஆழ அகலங்கள்
- தமிழில் பின்நவீனகவிதை முயற்சிகள்
- Looking for Comedy in the Muslim World – திரைப்படம்
- புதுமைப் பித்தன் நூற்றாண்டு விழா – கருத்தரங்கு
- நீங்க எப்படிங்க ? கொஞ்சம் சொல்லுங்க
- ஹெச்.ஜி.ரசூல் அவர்கலின் “வஹாபிசம்—- ‘ கட்டுரை மற்றும் விளக்கம் குறித்து
- கடிதம்- ஆங்கிலம்
- கடிதம்: மதிவழி படைப்பு திட்டத்தை மறுக்கும் டார்வினியம் – பகுதி 2
- பெரியபுராணம் – 76 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- மனிதம்
- ப லா த் கா ர ம் ( வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் )
- விடுமுறையின் முதல் நாள்
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-9) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 8
- ப்ரியமுள்ள வாலண்டைனிடமிருந்து….!
- ‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் இரண்டு: நல்லூரும் யாழ்ப்பாணமும்!
- எல்லோரும் இன்புற்றிருக்க வேறொன்றறியேன் பராபரமே…
- தர்கா பண்பாட்டு அரசியல்
- குருஜி கோல்வல்கர்: சில தகவல்கள்
- இளந்தலைமுறைக்குத் தலை வணக்கம்
- பாலாற்றில் இனி கானல் நீர்தானா ?
- மண்டைக்காடும் இந்து எழுச்சியும்
- சொல்ல மறந்த கதைகள் – கோல்வல்கர் பற்றி…
- அய்யா வைகுண்டரும் அரவிந்தன் நீலகண்டரும்
- நேசிப்பாளர்கள் தினம் (VALENTINE ‘S DAY )
