மண் தின்னும் மண்

This entry is part [part not set] of 16 in the series 20011104_Issue

கோகுல கிருஷ்ணன்


மலர்ந்து புல்லாக
மாறி நிற்கிறது மண்.
மண் தின்று
அசை போடுகின்றன மாடுகள்.
மாடுகளின் மடியில்
மண் கறந்து குடிக்கின்றனர் மனிதர்கள்.
மனிதர்களைச் சிதைத்து,
மண் தின்று
மறுபடியும் மலர்கிறது மண்.

Series Navigation

author

கோகுல கிருஷ்ணன்.

கோகுல கிருஷ்ணன்.

Similar Posts