வானவன்
என்ன தான் நடக்கிறது
என் நாட்டில் ?
உரிமைக்குப் போராடும்
முயல்களைப் பிடித்து
முதலை வாயில் போட
யாரிவர்க்கு
அதிகாரம் அளித்தது.
சுதந்திரம் எதற்கு வந்தது ?
எழுந்து கேட்கவா
எலும்பு உடைக்கவா ?
பதவி இருக்கையின்
கால்கள் கொண்டு
இரக்கத்தின் கழுத்தை நெரித்து
நம்பிக்கைப் படுகொலை
செய்வதற்காகவா ?
போராட்டம் என்ன
தீண்டாமையா ?
வெறுப்போடு நொறுக்க ?
விரலில் காயம் என்று
விண்ணப்பம் அனுப்பியவனுடைய
கையைக் கொய்து சென்றது
ஜனநாயக நாகரீகமா ?
செத்துப் போனவர்களின்
புள்ளி விவரங்களை
பொறுக்கிச் சொல்வது தான்
பத்திரிகைகளின் பணியா ?
தேசம் எங்கே போகிறது
சுதந்திரத்தின் தெருக்களை
எரித்து விட்டு
மீண்டும் அடிமையின் குகைகளுக்கா ?
மனித நேயத்தின்
நீர் வளையங்களை நிறுத்தி
மரணத்தின்
மலர்வளையங்கள் வாங்கவா ?
அவசரச் சட்டங்கள்
அரசவையில் கொட்டுகின்றன.
போராடுகிறானா
கூட்டை மட்டுமல்ல
காட்டையும் சேர்த்தே வெட்டு.
வந்தனை செய்தால் பாராட்டு
சிந்தனை செய்தால்
சிறையில் தள்ளு,
பாதம் பணிந்தால்
பதவியில் அமர்த்து,
இது பாவம் என்பவனை
பாடையில் கிடத்து,
தலை நீட்டும் ஒட்டகங்களை
நாடுகடத்து
தலையாட்டும் ஓணான்களை
பட்டியலில் இருத்து.
சட்டங்கள்
ஹிட்லரின் கல்லறைகளிலிருந்து
இரத்தமும் சதையுமாய்
எழுந்து வருகின்றன.
பாவம் மக்கள்,
உள்ளே எரியும் நெருப்பை
வெளியே காட்டினால்
மரத்தை எரிக்கிறான் என்று
மரண தண்டனை விதிக்கப்படலாம்
என்று
சாம்பல் கூட்டுக்குள்
கூடு கட்ட ஆயத்தமாகிறார்கள்.
வருந்தாதீர்கள்
வரலாறு
இதைவிடப் பெரிய வல்லூறுகளை
சந்தித்திருக்கிறது.
துக்கப்படாதீர்கள்.
வேண்டுமானால்
இந்த விரலில் ஒருமுறை
நம்பிக்கை
வாக்கு-மை வைத்துக் கொண்டதற்காய்
வெட்கப்படுங்கள்
***
tamil400@yahoo.com
- கோழிச் சண்டையும், சந்தைக் கடையும்
- அணு உலைக் கதிர்வீச்சுக் கழிவுகள் புதைபடும் பாதுகாப்புக் கிடங்குகள் [Safe Storage of Radioactive Wastes]
- நூல் பகிர்தல்: கனவின் ஆழங்களுக்குள் ஒரு பயணம் பிரெட் ஆலன் வூல்ப்பின் ‘The Dreaming Universe ‘
- உயிர்த்திருத்தலுக்கான போர்களின் பாதையில் ( அம்மன் நெசவு – நாவல் அறிமுகம்)
- தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- தன்னிலையாக பெண்ணின் உடல் – மாலதிமைத்ாியின் சங்கராபரணி கவிதைகள் குறித்து
- உயிரின் போராட்டம் (தெளிவத்தை ஜோசப்பின் ‘மீன்கள் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் 70)
- இனக்குழு அழகியலின் முன்னோடி: கி.ராஜநாராயணன் படைப்புகள்
- அரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்
- யதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்
- குறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு
- சென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)
- கேள்வி -1 சண்டியர் தப்பு ! சாமி சரியா ?
- மடந்தையொடு எம்மிடை நட்பு
- காற்றாடி
- காதல் காதல் தான்
- ஆனாலும்…..
- சூழலைக் கெடுக்கும் ஊழலர்கள்
- முதல் சந்திப்பு
- என்னம்மா அவசரம் ?
- ஒற்றைவண்ணத்தில் ஒரு பூச்சி!
- சின்னச் சின்னதாய்…
- இது உன் கவிதை
- பைத்தியமானேன் வைத்தியமுண்டா
- மனம் தளராதே!
- காதலுடன் ஒரு சொற்றாடல்
- கரடி பொம்மை
- அரியும் சிவனும் ஒண்ணு
- என் கவிதைக்குக் காயமடி!
- ஒரு சொட்டு இரும்பு
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பதினாறு
- விடியும்! நாவல் – (6)
- கடிதங்கள்
- தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா
- பசுமை,சிவப்பு,காவி-பசுமை அரசியல்-நட்பு முரணும், பகை முரணும்
- சாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2
- அரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்
- வசிட்டர் வாக்கு.
- ஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்
- வாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)
- தேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல
- போராடாதே … பிச்சையெடு
- ஆசி
- பெண்ணே
- தவறிய செயல்கள்
- சார்புநிலைக் கோட்பாடு
- அரசியல்
- வெண் புறா
- என் ஜீவன் போகும்…