போய் வா நண்பனே
Published March 20, 2008 • By
அனுராதா
அனுராதா

போய் வா நண்பனே
எந்த உறவுகளும் நிரந்தரமில்லை
கடந்து போகும் ஒவ்வொரு நிழலின்
வண்ணத்திலும் பல நினைவுகள்
சுமந்து போய் வா
வார்த்தைகள் மட்டும்
வாழ்க்கை ஆகிவிடுவதில்லை
எனக்கு முன் நடந்து போகும்
உன் காலடிகள் ஒவ்வொரு நாளும்
ஆழப்பதிந்துபோன பயணங்கள்
உள்ளில் நிலைத்திருக்கும்
போகவேண்டிய தூரம் மட்டும்
மிச்சமாய் பாதை பார்த்தபடி
ஒவ்வொரு மைல்கல்லின்
முடிவிலும் ஏதோ ஒரு
மனதின் காயம்
இருட்டு வேர்வையில்
மடிந்த உதடுகளின் இரத்ததில்
முடிந்து போன கணங்கள்
எனினும் கடப்போம்
போய் வா நண்பனே
வலிக்க வலிக்க பிரிவின்
இன்பம் தாங்குவோம்
anuradan@gmail.com