- அக்டோபர் 2008 வார்த்தை இதழில்…
- புறம்போக்கு
- பெண்மை விலங்கில்
- நூல் வெளியீட்டு, அறிமுக விழா
- ’எண்’ மகன். நாடகம்- பரீக்ஷா
- சிங்கப்பூர் வீரபத்திரகாளியம்மன் கோவில் எதிரில் தீபாவளி பட்டிமன்றம்
- “கந்தர்வன் நினைவு தமுஎச சிறுகதைப் போட்டி-2008” முடிவுகள்:
- புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல் – 2
- புலம்பெயர்ந்த ஈழத்தமிழரின் உலகளாவிய இலக்கியத் தேடல்
- தா.இராமலிங்கத்தின் கவிதைகள் காமம், இனவுணர்வு, ஆன்மீகம்-மானிட முழுமையின் செழுமையான வெளிப்பாடு
- யமுனா ராஜேந்திரனின் ஆறு நூல்கள் விமர்சன அரங்கு :
- நேற்றிருந்தோம் 12-10-2008 , மாலை 4:30 க்குத் துவங்க இருக்கும் கூட்டத்திற்கான அழைப்பு:
- பெண் படைப்புலகம் இன்று- சமகால கருத்தரங்கம்
- வரவேற்பின்மை
- நறுக் கவிதைகள்
- அப்பாவி நாவுகள்
- தாகூரின் கீதங்கள் – 52 அச்சம் எனக்கில்லை இனி !
- என்னோடு வா ! பாப்லோ நெருடாவின் கவிதைகள் -7
- உங்களை என்னைத் திரும்பிப் பார்க்க வைக்கும் கவிதை…
- காதல் வழிப்போக்கனோடு நடந்துவரும் இயற்கை
- தப்பூ சங்கர்களின் தப்பு தாளங்கள்
- விட்டுவிடுங்கள்
- வின்சென்டின் அனுபவக் குதிர்
- இந்திய இலக்கியம் – வாழ்க்கைக் கூறுகளும் பண்பும் – (2)
- பிரதியின் உள்ளர்த்தமும்,வெளியர்த்தமும்: மாற்றிலக்கணத்தின் புரிதலில்
- மெக்கா மசூதி ஆக்கிரமிப்பு- பகுதி 5
- அண்ணா நூற்றாண்டு: ஒரு வரலாற்றுப் பார்வை
- தமிழ்நாட்டின் சித்தர்களும் சூஃபியர்களும்
- நம்பிக்கை இயந்திரங்கள்(Belief Engines)
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்று நாடகம்) காட்சி -1 பாகம் -1
- இழப்பு
- கறுத்த நாயும் பாத்றூமும்
- இழப்பு
- என் கேள்வி இங்கே ! உன் பதில் எங்கே ?
- கடவுளின் காலடிச் சத்தம் – 1
- சந்திப்புக்கு அடுத்து பிரிவு
- எனது வாழ்க்கையின் 3 தவறுகள் ( பிசினஸ்- கிரிக்கெட்-மதம்)The Three mistake of my life – By chetan Bhagat
- கழுதை ஏர் உழவு!
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! இரு கருந்துளைகள் மோதினால் என்ன நேரிடும் ? [கட்டுரை: 43]
- திருமணம்
- ரத்தக் கோபம் / கொப்பரைசில் /பிறந்தபோது
- வேதவனம் விருட்சம் 7
- விரிக்கும் நிழலில் தேவதையின் சிறகு
- ஆக்ரமிப்பு…,
- விஸ்வரூபம் – அத்தியாயம் பதினொன்று
கவிதா நோர்வே
என்னிடம் பெண்மையில்லை
மன்னித்துவிடுங்கள்!
வளையல் குலுங்க
கொழுசொலியுடன் வளையவரும்
பெண்மை
காலை முழுகி
குங்குமத்துடன் கணவனை தட்டியெழுப்பும்
பெண்மை
நாற்சுவரில் தூசிதட்டி
நல்ல பெயர்வாங்க
முடியவில்லை என்னால்
கண்முடி நின்று
கணவனுக்கும் குழந்தைக்குமாய் மட்டும்
பிரார்திக்க விருப்பமில்லை எனக்கு
அதற்கும் மேல
சிந்திக்க முடிகிறது என்னால்…
சமுகத்தின் வக்கிர வார்த்தைகளை
வெல்ல
மொழியும் வழியும்
புரிந்து போனதில்
மௌணித்திருக்க மறுக்கிறது
அது தாயோ
என்னை தனதாக்கிக் கொண்டவனோ
தொங்கப்போடும் தாலியில்
எனது கண்ணியத்தையும்
பெண்மையையும் நிரூபிக்க
இஸ்டமில்லை
நிமிர்ந்தே நடக்கிறேன்.
எந்த ஆணிடமும்
சிரித்து பேச முடிகிறது என்னால்
அவர்களையும் மனிதர்களாகத்தான்
பார்க்க முடிகிறது
மன்னித்து விடுங்கள்.
தாய்மை என்ற பாத்திரத்தில்
விழுவதில் பலதும்
எதிர்பாலி;ன்
சோம்பேறித்தனமும்
சொற்பத்தனமும் என்பது
தெரிந்த பின்
எழுதுகிறேன்.
உங்களின் சுகவாழ்விற்காய்
எமக்கு அளித்த பட்டம்
தாய்மை
வெட்கத்தின் வரைமுறை
தெரியவில்லை எனக்கு
அடக்கம் என்பதன் பொருள்
வித்தியாசமாயிருக்கிறது
எனது அகராதியில்
பொறுமை என்பதன்
அளவுகோல்
அவர்களதும் எனதும்
ஒரே அளவில் இல்லை
மரபுகளை முறித்துக்கொண்டு
மனிதனாக இருக்கச் சொல்கிறது
எனது சுயம்
நீங்கள் நினைக்கும் பெண்மை
என்னிடம் இல்லை.
மன்னித்துவிடுங்கள்!
– கவிதா நோர்வே
