This entry is in the series 20100523_Issue

யூசுப் ராவுத்தர் ரஜித்


மீசையில்லா பாரதி
தாடியில்லா வள்ளுவன்
தமிழனுக்குத் தெரியாது

அகம் பேசும் புறமே
ஆராதிக்கப்படும்

முள்ளில்லா வாழை
முள்ளுள்ள தாழை
அகம் புரிந்ததால்
புறத்தில் தவறில்லை

அவன்
அன்பில் கமலம்
வீரத்தில் அமிலம்
உழைப்பில் ஆறு
பணிவில் நாணல்
பணியில் பம்பரம்
வாங்கி அறியா ரேகை
வாழும் கலையில் தோகை
என்று விளக்கும்
புறத்தோற்றம்

காகிதப்பூவுக்கு
காதல் ஏது?
முலாம்களுக்கு
குலங்கள் ஏது?
கீரைகள்தானோ
மருக் கொழுந்து?
என்றும் கேட்கும்
புறத் தோற்றம்

புலிக்கு வரிகள்
மான்களுக்குப் புள்ளிகள்
கருவிலேயே
கடவுள் தந்தது
ஆனால் மனிதனுக்கு?
இரட்டையாய்ப் பிறந்தாலும்
இரவும் பகலுமாய்
இயல்புகள்

மனிதன் விளக்கு
சமூகம் மின்சாரம்
இணைப்பாய் இருக்கட்டும்
புறத்தோற்றம்

20100523_Issue

யாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு