பவளமணி பிரகாசம்
அரும்பாய் இருக்கும் கொடியிலே
அந்தியில் அவிழும் நொடியிலே
அதிசயம் இல்லா வாடிக்கை
அதிலேயென்ன வேடிக்கை
நேராய் அந்த வாசம் பரப்பும்
நெஞ்சில் ஒரு வித பரவசம்
நிலையாய் அதிலே ஒரு சுகம்
நித்தம் நடக்கும் நாடகம்
புதிது இல்லா போதிலும்
புதுமையானதோர் மயக்கம்
தோன்றத் தவறுவதில்லை
ஏனென்று தெரிவதில்லை
ஈராறு மாதங்கள் முடிவதும்
அடுத்த ஆண்டு பிறப்பதும்
இயல்பானதோர் சரித்திரம்
சுழன்றிடும் காலச் சக்கரம்
முதல் நாளுக்கோர் கவர்ச்சி
முழுமையான மன மகிழ்ச்சி
அலையாய் புதிய ஆசைகள்
வெற்றியின் தூர ஓசைகள்
நேற்று கண்ட சோதனை
மாற்றும் புதிய சாதனை
கனவுகள் எட்டும் சாத்தியம்
கண்ணில் தெரிவது சத்தியம்
இரண்டாயிரத்தாண்டுத் தருவின்
மூன்றாண்டு முடிகின்ற தளிரே
புத்தாண்டே வருகவே
புது வலிமை தருகவே
பன்னீராய் மணக்கவே
பல நன்மை தருகவே
சந்தனமாய் குளிர்கவே
சந்ததிகள் திளைக்கவே
அகக்கண்கள் திறக்கவே
அருமருந்தாய் வருகவே
அகிலமெலாம் தழைக்கவே
அமைதியினை தருகவே
———————————————————
pavalamani_pragasam@yahoo.com
- கலைஞருக்குக் கடிதம் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 92 -மனிதர்களை மதிப்பிடும் கலை -கல்கியின் ‘கேதாரியின் தாயார் ‘
- பூரணி,க்ருஷாங்கினி,நீரஜா நாகராஜன் :மூன்று தலைமுறைப் பெண்கள் படைப்பு வெளியீட்டு நிகழ்ச்சி
- கதைமொழியும் மொழிபெயர்ப்பும்- (மெளனப்பனி ரகசியப்பனி-மொழிபெயர்ப்புக் கதைத்தொகுதி அறிமுகம்)
- மனத்தின் மறுபக்கம்-த்வீபா -கன்னடப்படத்தை முன்வைத்துச் சில குறிப்புகள்
- கனவும் குரூர யதார்த்தமும் – ஜெயமோகனின் புதிய நாவல் ‘காடு ‘
- மாலதி மைத்ரியின் ‘சங்கராபரணி ‘ கவிதைகள் – ஒரு வாசக ரசனைப் பதிவு
- பூரணி அம்மாளும் இண்டெர்நெட்டும்
- நாற்பது வருட தாபம்
- சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு-சக்தி 2003 இலக்கிய விருது
- ஸ்தலபுரம்
- டாக்டர் மொஹம்மது மொஸாடெக்- ஈரானிய தேசிய இயக்கத்தின் தலைவர்
- கடவுள் போருக்குப் போகும்போது
- கலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்
- இறைவா..எனக்கொன்றும் புரியவில்லை..!
- நிழல்கள்.
- நதி
- எனக்கு வேண்டும் வரம்
- இரயில் நிறுத்தமும், கடைசி இருக்கையும்.
- பல சமயம் நம் வீடு
- வரம் கொடு தாயே!..
- ‘எனக்குள் இப்படியொரு கிராமத்தானா ? ‘ – ‘ஸண்டியர் ‘ கமல்
- விளக்கு விருது – சி மணிக்கு வழங்கும் நிகழ்ச்சி
- சி. மணி பற்றிய சில கனிந்த நினைவுகள்
- மானிடக் கவியான பாரதி ஒரு மகாகவியே [1882-1921]
- வாரபலன் – ஆலப்புழைக்கருகில் – பணிமுடக்கு – தமிழை இசைக்க மறந்த தமிழ்நாடு
- விடியும்!(நாவல் – 29))
- பிச்சிப்பூ
- ஆசாரப் பூசைப் பெட்டி
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -5)
- எமன் – அக்காள்- கழுதை
- நீலக்கடல் – புதினம் ( தொடர் ) – முன்னுரை
- ‘காய்கறிக்காரி ‘(என்னுடைய அம்மா அவர்களின் நினைவாக)
- உத்தரவிடு பணிகிறேன்
- பாரம்பரிய இந்தியக் கல்வி: 19-ம் நூற்றாண்டில்
- கடிதங்கள் – 01 ஜனவரி,2004
- வலுக்கும் எதிர்ப்பு
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தொன்பது
- முன்னேற்றமா! சீரழிவா!!
- ‘ஆர்.எஸ்.எஸ் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது ‘
- புத்தாண்டே வருகவே
- மரக்கொலைகள்
- அன்பே மருந்தானால்…
- அன்புடன் இதயம் – 1
- எழுதாக் கவிதை
- குப்பைத்தொட்டி கவிதைகள்
- காவு , மெளனத்தின் குரல் , நிலைப்பாடு
- அடங்கோ… அடங்கு!
- கலைச்சொற்கள்,இன்றைய தமிழ்- சில கேள்விகளும்,குறிப்புகளும்