நளாயினி தாமரைச்செல்வன்.
என் மார்பின்
பால் வாசனையில்
கண்வளர்ந்தவளே!
இன்று நீ அகதியாய்
அன்னிய தேசத்தில்.
தொப்பிள் கொடி
இன்னமும் பச்சையாய்.
உன்னை நினைக்கும்
போதெல்லாம் -என்
கருப்பைச் சுவர் கூட
விம்மி எழுகிறது.
வயசு தான் போட்டுது
ஆனால் இன்னமும்
கருப்பைச்சுவர் உன்
ஸ்பாிசத்தை மறக்கவில்லை.
உன் உணர்வைச்
சுமந்து வரும் கடிதம் பாக்க
கண் கூட இசைவதில்லை.
உன் புகைப்படத்தைக் கூட
பள்ளிக்கப்போகும் போது
உன்னை அழைத்துச்சென்ற
விரல்கள் தான் தடவிப்பார்த்து
மகிழ்ந்து கொள்கிறது.
படலைக்குள் அரவம் கேட்டால்
நீ வந்து நிப்பதாய்
ஓர் பிரமை.
பிறகென்ன கேக்கவே வேணும்.
கண்ணின் வில்லை கூட
உன் வருவுக்காய்
ஒருமுறை சுருங்கி விாியும்.
அன்று முழுவதும்
சொட்டுத் தண்ணி கூட
நாவிறங்கா.
ஊாில் எல்லாரும்
மகளின் வெளிநாட்டுக்காசில்
கிழடுக்கு உல்லாச வாழ்வு எண்டு
போற்றுவதாய் உமிழ்ந்து மெல்வர்.
முகம்மலர கேட்டுவிட்டு
உன் நினைவால் மனம்
பித்த்துப்பிடித்ததை யார் அறிவர். ?
சாவோ
என் வாசலில்
தலைவிாித்த நிக்கிறது.
உன் ஸ்பாிசம் பட்டால் தான்
இந்த அம்மா உயிர்போகுமம்மா.
ஓடோடி வந்து என்
பால்கடனைத்தீர்த்துவிடு.
—-
nalayiny@hotmail.com
- காவல் பூனைகள்
- அஸ்காரிக்கு மற்றுமொரு வழி
- ஞானப்பழத்துதி…
- எடுப்பார் கைப்பிள்ளை
- விசும்பல்
- ஹரிக்கேன் பாதுகாப்புக் கரைமதிலைத் தகர்த்து நியூ ஆர்லியன்ஸ் நகரை நிர்மூலமாக்கிய கேட்ரினா (Breaking of Levees By Hurricane Katrina
- தொட்டி ஜெயா : விமர்சனம்
- சொன்னார்கள்
- கடிதம்
- வடக்கு வாசல் வெளியீடு
- கடிதம்
- கடிதம்
- கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி
- காலம் இலக்கிய மாலை – ஒக்டோபர் 8 சனிக்கிழமை – மாலை 6.00 மணி
- உயிருள்ள அதிசயம்..
- ராண்டி நியூமானின் கவிதை
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-7)
- நினைவெல்லாம் நித்யா !
- நிழல் நிஜமாகிறது…
- தொன்மமும், குழந்தை மரணமும் அல்லது ஆண்களுக்கு காது குத்துதல்
- மத்ரீதில் பீஹார்
- ஏ.வி.எம்-ரஜினி-ஷங்கர் கூட்டணியில் ‘சிவாஜி ‘
- தலாய் லாமா: அறிவியல், மதம், அரசியல்
- முதலாளித்துவ சூழலியற் சிக்கல் (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 2 – கண்டல் காடுகள் (Mangroves)
- சே குவாரா – புகைப்படம், பதிப்புரிமை, உலகமயமாதல்
- நடை – பகுதி – 4 – திருப்பதி பெருமாள்
- பெரியபுராணம் – 55 – ( திருநாவுக்கரச நாயனார் புராணம் தொடர்ச்சி )
- கீதாஞ்சலி (39) புனிதனே ஒளிமயமாய் வா! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ‘மற்றவர்கள் நரகம்…. ‘ ‘
- பால் கடன்