கே.பாலமுருகன்

இறந்தவர்களெல்லாம்
பள்ளத்தில் விழுந்து
மீண்டுமொருமுறை
மரணிக்க முயற்சிக்கிறார்கள்!
அவர்களின் தற்கொலைகள்
தோல்வியில் முடிகின்றன!
இந்தப் பள்ளங்கள்
ஒருவரை ஒருமுறைதான்
இரட்சிக்கும்!
நிலத்தின்
சதைப் பிடிப்பில்
விழுந்த காயங்களைச்
சுமந்து கொண்டு
மரணம் நெளியும்
பள்ளங்கள்!
வீட்டுக்கொரு
பள்ளம் உருவாகி
உயிரோடிருப்பவர்களுக்காகக்
காத்திருக்கின்றன!
அவர்கள்
பள்ளத்தில் விழும்
கணங்களை
அங்குலம் அங்குலமாக
அளவெடுத்து
நீண்டுருக்கிறது அவர்களுக்கான
மரணங்கள்!
நிலம்தோறும்
வளர்ந்திருக்கும் பள்ளங்கள்
மரணத்தைக் கண்டு ஓடுபவர்களை
மிக அலட்சியமாகக்
கொன்று குவிக்க
கடவுள் ஏற்படுத்தியிருக்கும்
பலவீனம்!
bala_barathi@hotmail.com
- வார்த்தை – ஜூலை 2008 இதழில்
- ஓர் மெல்லிய வன்முறையிலிருந்து தொடங்கிய அதிகாரப் பூர்வக் கணக்கு!
- புதுக்கவிதைகளில் செம்மொழித் தமிழ் மரபுகள்
- சிட்டுக்குருவி
- தாகூரின் கீதங்கள் – 38 புயலுடன் வந்தார் வேந்தர் !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 14 (சுருக்கப் பட்டது)
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! முதிய விண்மீன்கள் மூலகக் களஞ்சியம் !(Abundance of Elements in Old Stars) (கட்டுரை: 33)
- கே.எஸ்.சுதாகரின் எங்கே போகிறோம்
- “இலக்கிய உரையாடல்” “காலம் சஞ்சிகை” 2008,மே இதழ்
- எழுத்துக்கலைபற்றி இவர்கள் – 26 ரா.ஸ்ரீ.தேசிகன்
- எமிலி ஸோலா
- மனேக் ஷா – ஓர் பட அஞ்சலி
- நாய்வால் திரைப்பட இயக்கம் – அடுத்த நிகழ்வு
- வாசிப்போம் சிங்கப்பூர் நிகழ்விற்கு தமிழக எழுத்தாளர் திரு.எஸ்.இராமகிருஸ்ணன்
- நாகரத்தினம் கிருஷ்ணாவின் இரு நூல்கள் வெளியீட்டு விழா
- மந்திரியின் நலத்திட்டங்கள்
- மாய உலகம்
- தேடலின் தொடக்கம்
- குடிமகன்
- தாக்கரேக்கள் மராட்டிய மண்ணின் மைந்தர்களா?
- பள்ளத்தில் நெளியும் மரணம்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 26 சூடான நள்ளிரவுக் கண்ணீர் !
- அசோகவனங்கள்
- தைக்காமுற்றத்தின் அதிசய செடிகள்
- கவிதைகள்
- கடிதம்
