பட்டினம் பாலையான கதை
தெரு மாவளவன்

வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி
வான்பொய்ப்பினும் தான்பொய்யா
மலைத்தலைய கடற்காவிரி
சொன்னான் அன்றொரு கவிஞன்
பட்டினப்பாலையில், இன்றோ
புனல்பரந்து பொன்கொழிக்கவில்லை
புழுதிபரந்து பஞ்சம்கொழிக்கிறதே
இப்பட்டினத்தில்
(பட்டினப்பாலையின் மரூஉ)
msksam@hotmail.com