கவியோகி வேதம்
பட்டாபிஷேகம் நடக்கிறது!- இதோ!-கம்பன்
..பந்தியிலை போட்டாச்சு!
பட்டாடைக் கவியுடுத்தும்-நண்பர்களே!
..பருகஒரு விருந்தாச்சு!-நீங்கள்
..பருக ஒரு விருந்தாச்சு!
..
வால்மீகி சொத்துதந்தான்!-நம்கம்பன்
..வாரிசாக தனைவரித்தான்!
கால்தொட்டு கும்பிட்டான்!-தனிவழி!
..கனஜோராய் விருந்துவைத்தான்!(பட்டாபி..)
..
தசரதச் சக்ரவர்த்தி-பாயசத்தால்
..தான்,பாத்தி ரம்படைத்தான்!-நான்கு
.தான்,பாத்தி ரம்படைத்தான்!
அசல்கம்பச் சக்ரவர்த்தி-பல-பாத்திரம்
..அவன்திறத்தால் படைத்துவிட்டான்!-அவற்றை
..அழகாய்-வ-ளர்த்தும்விட்டான்!(பட்டாபி..)
..
தசரதன்ஓர் பாத்திரத்தை-காட்டுக்கே
..தாரைஎன வார்த்துவிட்டான்!
நிசமாயோர் மனைவிசெய்யும்-சில
..நித்தியக் கடமைக்காய்..-உணர்ச்சி
வசப்பட்டான்,வரம்தந்தான்!-பெண்ணிடம்
..வசமாக மாட்டிநின்றான்!
..
அவனிழந்த பாத்திரத்தில்-கவிராஜா
..அங்கமெல்லாம் ஒப்படைத்தான்!
சுவைசேர்த்து,அமுதம்கலந்து,-அவனுக்காய்ச்
..சொல்லாலே கோவில்சமைத்து,
நவநவமாய் அணிவித்து,-இ இழைத்திழைத்து,
..நாட்டுக்குள் கூட்டிவந்தான்!-ஆம்!காவ்ய
..நாட்டுக்குள் கூட்டிவந்தான்!(பட்டாபிஷேகம்)
..
யாருக்காய் வரம்தொலைத்து,-சக்ரவர்த்தி
..யமன்தனையும் வரவழைத்து,
சீர்பலவும் இ ழந்தானோ-அப்பாத்திரம்
..சீர்-ஏற்க மறுத்துவிட்டு,
ஓர்உயர்ந்த பாதுகையைச்-செங்கோலாய்
..உயரத்தில் வைத்ததனால்,-நம்ராஜா
..ஓர்-சிம்மா சனம்தந்தான்!–காவ்யத்தில்
..உயர்த்திவைத்தே பதவிதந்தான்!(பட்டாபி..)
..
இ இப்போது சொல்லுங்கள்-நண்பர்களே!
..எந்தராஜா மனம்கவர்ந்தார் ?
தப்பாமல் நமக்கெல்லாம்-தன்வரத்தால்
..தனிவழியில் கவிவிருந்து-நம்நாட்டுக்கு
அப்பாலும் மகிழ்ந்துதந்து–தமிழுக்கே
..அரியணையைப் பெற்று(உ)வந்த,-நம்நெஞ்சில்
எப்போதும் வீற்றிருக்கும்- இவரா ?அவரா ?
..ம்ம்!அயோத்தியா ? தேரழுந்தூரா ?
..
பட்டாபிஷேகம் நடக்கிறது!- இதோ,கம்பன்
..பந்தியிலை போட்டாச்சு!
பட்டாடைக் கவியுடுத்தும்-கவிஞர்-நீங்கள்!
..பருகஒரு விருந்தாச்சு!
^^(கவியோகி வேதம்)23-09-03
sakthஇa@eth.net
- முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [தொடர்ச்சி ]
- சில சீனத் திறமைகள்
- பஸ்கால் கிஞ்ஞார் (Pascal Qignard)
- நியூயார்க்கில் இந்திய இலக்கியச் சந்திப்புகள்
- தேவை இன்னும் கொஞ்சம் தாகம்
- அடையாளத் தழும்புகள் (சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன் – நாவல் அறிமுகம்)
- மனத்தில் படியும் ஞாபகங்கள் – சுரேஷ்குமார் இந்திரஜித்தின் ‘அலையும் சிறகுகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 79)
- சூரியனைச் சுற்றி வந்து தகவல் அனுப்பும் யுலிஸிஸ் விண்ணாய்வுச் சிமிழ் [Ulysses Spacecraft Exploring the Sun (1990-2007)]
- மெளனம் பற்றி ஏறி
- இணையக் காவடிச் சிந்து
- மாயமான்.
- ‘யார் ? ‘என்றா கேட்கின்றாய் ?
- வலை
- வைரமுத்துக்களின் வானம்-4 (குமுதம் 29-9-03 இதழ்)
- ‘ஒரு கிராமத்துப் பெண்ணின் தலைப் பிரசவம் ‘ – 4
- பட்டாபிஷேகம் நடக்கிறது…
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்தாறு
- குறிப்புகள் சில அக்டோபர் 2, 2003 ( கனாடா, மருந்துகள்,அறிவுசார் சொத்துரிமை-அமெரிக்க அரசும் ஒபன் சோர்ஸ் குறித்த சர்ச்சையும்- சமூக
- கருத்தும். சுதந்திரமும்.
- வாரபலன் – இந்த வாரம் (பி.ஏ) கிருஷ்ண ஜெயந்தி
- நூல் வெளியீட்டுவிழா
- குமரிஉலா 5
- தமிழ்ச் சினிமா – இன்னும் சில குறிப்புகள்
- கல்யாண வினாயகர் (கல்லூரிக் காலம்-2)
- கடிதங்கள்
- பயணம் – ஒரு மைக்ரோ கதை
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 4 – சென்ற இதழ் தொடர்ச்சி
- இன்னுமொரு உலகம்…….
- கனடாவில் நாகம்மா
- வடிகால்
- விடியும்! நாவல் – (16)