பஞ்சவர்ணக்கிளியே
Published September 24, 2002 • By
உத்ராடன்
உத்ராடன்

வானத்திலிருந்தே
மழை
பூமியிலிருந்தே
போகம்
காற்றாய்
உயிர்
தீயாய்
கவித்துவம்
நீர்தான்
அமிழ்தம்
பஞ்சபூதங்களாலாய
பிரபஞ்சம்
மொழியே
பஞ்சபூதஸ்வரூபம்தான்
எங்கே கொண்டுபோய்
வாழ/ தாழ வைக்கப் போகிறாய் பஞ்சவர்ணக்கிளியே
***