புதியமாதவி
இலையுதிர்க்காலம்
நிழலில்லாத நாட்கள்
மொட்டைமரங்களின் உடைந்த நிழல்கள்
ஒட்டுப்போட்ட ஆகாயப்புடவை
காற்றில் அசைகிறது
கிழிசலை மறைத்து.
இழுத்துப்போர்த்தினால்
இத்துப்போய்க் கிழிந்திடுமோ ?
இழுக்காமல் மூடிக்கொண்டால்
இழுக்காகி முடிந்திடுமோ ?
அரைநிர்வாணத்தில்
அனாதையாய்
அலைகிறது நிழல்.
காதல் அணைப்பில்
கண்மூடியப் புணர்ச்சியில்
காணாமல் போய்விடுகிறது
காதலர்களின் நிழல்.
காதலை நிஜமாக்க
நிழல்தேடி அலைகிறது
வானம்.
கோடிக்கணக்கில் உயிர்த்துளிகள்
நிழல்முட்டைக்காக
தவமிருக்கின்றன.
நிழல் தன் உயிர்த்துளியைத் தேடி..
இரத்தவெள்ளத்தில்…
குறிதவறிய வேலின்
ஆறாதக் காயங்களுடன்
மீண்டும் மீண்டும்
போர்க்களத்தில்
இரத்த வெள்ளத்தில்.
மழையில் இடியில்
மடியில் விழலாம்.
நிழல்தேடிய உயிர்த்துளி..
அந்த ஒற்றைத்துளியின்
ஓரணுவிற்காக
எத்தனைமுறை ரத்தம் சிந்துகிறது
நிழலின் நாட்கள்.
இப்போதோ எப்போதோ
எப்போதாவது-
நிழல்தேடிய உயிர்த்துளி
மண்ணில் விழலாம்.
அப்போது பிறக்கும்
நிழல்களின் புணர்ச்சியில்
மெய்யெழுத்துகள் பிரசவித்த
உயிரெழுத்தின் கதை.
அதுவரை-
ஆயுத எழுத்தின்
அசையாதப் புள்ளிகளில்
கோடுகளும் தீண்ட மறுக்கும்
குடிசைகளில்
நிழல்தேடி அலைகிறது
எங்கள் நிஜங்களின் பயணம்.
—-
puthiyamaadhavi@hotmail.com
- பெரியபுராணம்- 38
- விஸ்வாமித்ராவுக்குப் பதில்
- சுகுமாரனின் ‘ திசைகளும் தடங்களும் ‘ – வெளிச்சம் தரும் விளக்குகள்
- நடைமுறை வாழ்க்கை எழுப்பும் சிந்தனை அலைகள் – ( தீராத பசிகொண்ட விலங்கு- வாசிப்பனுபவம்)
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-8
- பாரதி இலக்கிய சங்கம் – நிகழ்ச்சி
- பூரணம் எய்திய இந்தியாவின் முதல் பூதக் கனநீர் அணுமின் நிலையம் (540 MWe)
- ருசி
- எவர் மீட்பார் ?
- கீதாஞ்சலி (20) – என் பணி இந்த உலகுக்கு! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- நிழல்களைத் தேடி..
- முந்தைய சூழல் ஒன்றுக்காய்
- மாமா ஞாபகங்களுக்காக
- பின் சீட்
- புலம் பெயர்ந்த தமிழர்களுக்கு ஒரு வேண்டுகோள்
- எண்ணச் சிதறல்கள் – காஷ்மீர்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – யாஸர் அராஃபாட்- பாகம் 2
- மதச்சார்பின்மை என்ற அறிவியல் தன்மையற்ற அறிவியல்
- வெறும் பூக்களுடன் சில ராஜகுமாரர்கள்
- அவளும் பெண்தானே
- மழுங்கடிக்கப்பட்ட விதைகள்
- ஆத்மா
- குழந்தைத் திருமணம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் பெர்னாட்ஷா எழுதிய செயின்ட் ஜோன் நாடகத்தின் தழுவல் (முதல் காட்சியின் தொடர்ச்சி -2)
- புதிய தொடர்கதை – ஆகாயத்தில் முட்டிக் கொண்டேன்