This entry is in the series 20090813_Issue

நட்சத்ரவாசி


நிலவொளியில்
மல்லாந்து
படுத்துக்கொண்டு
சுயமைதுனத்தில்
ஆள்கிறான் அவன்
தரையில்
ஆங்காங்கே
விந்து துளிகள்
நிலவொளியாய்

நீ பெண்மையை எழுதினாய்
வாசிக்க முடிந்தது
மௌனத்தை எழுதினாய்
வாசிக்க முடிந்தது
என்னொரு நீயை எழுதிய போது
வார்த்தைகள் கலைந்தன
ஒரு சொல் கவிதை.

ஒரு பொழுதில்
கடலலை சீறும்
பின் தணியும்
உள்வாங்கும்
எப்போதும்
இப்படியாக தான்
போகுமோ
பொழுது

mujeebu2000@yahoo.co.in

Series Navigation