தீபச்செல்வன்

இன்னும் பலிபீடங்களுக்காய்
நமது ஆடுகள்
அழைத்துச்செல்லப்படுகின்றன
அவர்களின்
அதிகாரம் நிரம்பிய
சிலுவைகளின் முன்னால்
சனங்கள் ஜெபித்தனர்.
போர் நடக்கும் தேசத்தில்
சிலுவைகளை
சுமந்து திரியும் சனங்களோடு
அடிகளார் போனார்
யேசுவோடு பல ஆயிரம்
சனங்கள்
இங்கு சிலுவையில்
அறையப்பட்டனர்.
சவப்பெட்டிகள் நிரம்பிய
தேவாலயத்தில்
அவரின் ஜெபபிரசங்கம்
அதிகாரத்தின் முகத்தை
குத்தியபடியிருந்தது.
கனிகள் இல்லாத தேசத்தில்
தோட்டம்
கருகிக் கிடந்தது
சருகுகளின் மத்தியில்
அடிகளார் மரக்கன்றுகளுக்காய்
விதைகளை தேடினார்.
குழந்தைகள் வந்தனர்.
யுத்தத்தில் பதுங்கியிருந்த
சனங்களின் மத்தியில்
அடிகளார் உயிர்களை
தேடிப் பொறுக்கினார்
நசிந்து உடைந்து சிதறிய
சிலுவைகளின் கீழாய்
சனங்களின்
அழுகை கிடக்கக்கண்டார்.
அழிந்துபோன தேவாலயத்தில்
தொங்கிய
சிலுவையுடனிருந்தார்
சனங்கள் திருப்பலியாகினர்.
சிலுவை பொறிக்கப்பட்ட
வண்டியில்
நிரம்பியிருந்தது பிரார்த்தனைகள்.
அடிகளாரும் அவரது சிலுவையும்
சனங்களின் தெருவில்
பலியாகி கிடக்கக் கண்டேன்..
20.04.2008
——————————————————————————-
20.04.2008 மல்லாவி வவுனிக்குளத்தில் இலங்கை இராணுவம் ஆழஊடுறுவி நடத்திய கிளைமோர் தாக்குதலில் மனித உரிமைப் பணியாளர்( வடக்கு கிழக்கு மனித உரிமைகள் செயலக பணிப்பாளர்) அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் பலிகொள்ளப்பட்டுள்ளார்.
deebachelvan@gmail.com
- கன்று
- புறநானூறு உ.வே.சா முதற்பதிப்பு உழைப்பும் ஆராய்ச்சியும்
- பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூகோளத்தில் பேரளவு நீர் வெள்ளம் எப்படி உண்டானது ?(கட்டுரை: 26)
- சிகரத்தில் நிற்கும் ஆளுமை
- காற்றினிலே வரும் கீதங்கள் – 16 பெண்ணாய் ஏன் பிறக்க வேண்டும் ?
- தட்டிக் கேட்க ஆளில்லாதவர்கள்
- தாகூரின் கீதங்கள் – 27 புல்லாங்குழலை ஏன் கொடுத்தாய் ?
- திண்ணை
- சிங்கப்பூர் பெண் எழுத்தாளர்களின் சிறுகதை தொகுப்பு ஏப்ரல் 30 அன்று வெளியீடு
- தமிழில் உலகளாவிய தகுதித் தேர்வு – அவசியம்
- பந்தல்
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் அத்தியாயம் 8
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 4 (சுருக்கப் பட்டது)
- உலகப் புத்தக நாள் (அ) நான் ஏன் புத்தகம் வாங்குவதை குறைத்துவிட்டேன்
- அகரம்.அமுதாவின் வெண்பாக்கள்!
- எனது (முழுமையற்ற) பதில் !
- திராவிட இயக்க திருக்குறள் பார்வைகள் குறித்து
- Tamilnadu Thiraippada Iyakkam
- தினமணி’, ‘திண்ணை’யில் வந்த கட்டுரை பற்றிய இருவரின் எழுத்துக்கள் பற்றி …!
- பாரதி தமிழ்ச் சங்கம் – புத்தாண்டு திருவிழா
- புறநகர் காண்டா வாளிகளின் கதைகள்
- கடற்கரை
- “ஞாபகம் வருதே, ஞாபகம் வருதே” – குமரி முனை விவேகானந்தர் நினைவாலயம்: அண்ணா அளித்த ஆதரவு
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்: 2
- தேசம் என்ன செய்யும்
- நினைவுகளின் தடத்தில் – (8)
- ஒன்பது கவிதைகள்
- சு.மு.அகமது கவிதைகள்
- திருப்பலி:கருணாரட்ணம் அடிகளார்
- வீடு வாடகைக்கு
- Last Kilo byte 12 : (தொலைபேசி} மெளனம் பேசியது
- திருமண அழைப்பு
- ம அருணாதேவி கவிதைகள்
- மலேசிய-கெடா மாநில எழுத்தாளர் இயக்கத்தின் புதிய செயலவை(2008/09)
