அறிவிப்பு
;
பலர் இலக்கியத்தைப் புறம்பாகவும் வாழ்வைப் புறம்பாகவும் வைத்திருக்கிறபோது, தன் வாழ்வையே இலக்கியமாக்கிக் கொண்டவர் ஏ.ஜே. நல்ல படிப்பாளி, புலமையாளர், அறிவுஜீவி, நூல் மதிப்பீட்டாளர், ஆங்கில-தமிழ் எழுத்தாளர், விமர்சகர், ஆங்கில-தமிழ், தமிழ்-ஆங்கில மொழிபெயர்ப்பாளர், பத்திரிகையாளர், பத்திரிகை ஆசிரியர், ஆங்கில ஆசிரியர், உலக இலக்கியத்துடன் இறுதிவரை தன்னைப் பரிச்சயப்படுத்திக் கொண்டு வாழ்ந்து வந்தவர். எந்த அறிவுப் புலமும் அவருக்கு அந்நியமானதல்ல. அவற்றில் தன் தனி ஆளுமையை வெளிப்படுத்தியவர்.
ஈழத் தமிழ் இலக்கியத்தில் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வந்த திரு ஏ.ஜே.கனகரட்னா நேற்று 10-10-2006 இல் கொழும்பில் காலமானார். பல எழுத்தாளர்களுக்கு தோன்றாத் துணையாகவும், அவர்களின் எழுத்துக்களுக்கு ஊக்கமும், ஆக்கமும், ஊட்டமும் அளித்தும் வந்தவர். ஈழத் தமிழ் எழுத்தை உண்மையாக விசுவாசித்தவர். நேர்மை, அடக்கம், பண்புடைமை அவரது இயல்பும் சிறப்பும்.
காலம் அவருக்கு தனது 16 வது இதழைச் சிறப்பிதழாக வெளியிட்டுக் கௌரவித்தது.
அவரின் சேவையைப் பாராட்டிக் கௌரவிக்குமுகமாக கனடிய தமிழ் இலக்கியத் தோட்டம் 50,000 ரூபா பணத்தை கடந்த மாதம் அவருக்கு அளித்தது குறிப்பிடத் தக்கது.
யாழ்ப்பாணத்து ஆங்கில தமிழ் அறிவுப் பாரம்பரியத்தின் கடைசிக் கொழுந்தாக வாழ்ந்தவர்.
முற்போக்குக் கொள்கைகளில் மிக்க பற்றுள்ளவர். அதேவேளை ஆத்மீகத்தில் நம்பிக்கை வைத்தவர். மனித நேயமிக்க பெரும் மனிதர். மனிதருள் மாணிக்கமாக வாழ்ந்து இறந்துள்ளார். சாதி, மதம், இனம், மொழி ஆகிய சின்னத்தனங்கள் தீண்டாத, அகண்ட மானிடத்தை மதித்த பெரும் மனிதன் அவர். சிறியன சிந்தியாதான் என்று நண்பர்களால் புகழப்பட்டவர். நண்பர்களுக்கு இனிய நண்பன்.
அவரின் இழப்பு உண்மையிலே பல எழுத்தாளருக்கும் ஈழத் தமிழ் இலக்கியத்துக்கும் நண்பர்களுக்கும் பெரும் இழப்பு.
ஏ.ஜே.கனகரட்னாவின் அஞ்சலிக் கூட்டம் ரொறன்டோ கனடாவில் ஒக்டோபர் மாதம் 29 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஸ்காபரோ சிவிக் சென்றரில் காலம் சஞ்சிகையின் சார்பில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது.
மேலதிக விபரங்களுக்கு
மயடயஅ@வயஅடைடிழழம.உழஅ
- முழுத் திமிங்கிலத்தை எழுத்தால் மறைத்த ஹரூண் யாகியா
- National folklore support center
- சிறப்புச் செய்திகள்-3 அல்லது குருட்டுத்தனக் கட்டுடைப்பு
- தீபாவளியும் ஆர்.எம்.கே.வியும்
- புக்கர் பரிசு 2006: கிரண் தேசாய்
- கடித இலக்கியம் – 27 – (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்)
- தடுமாற்றமும் தெளிவும் : சாசனம் -திரைப்பட அனுபவம்
- மின்னிதழ்கள் அச்சிதழ்கள் அச்சுநூல்களின் பன்மைப் பெருக்கமும் ஆகத் தெளிவாக வேண்டிய வாசகரும்
- பார்வதி வைத்த பரவசக் கொலு!
- வகாபிய பார்ப்பனீயத்தின் மூட நம்பிக்கை
- திருக்குர்ஆன்: மாற்றம்- உருவில்தான் கருவிலல்ல!
- ‘மகா’ அலெக்ஸாண்டரின் விசித்திர வெற்றி
- அலெக்ஸாண்டர் இந்தியப் படையெடுப்பைப் பற்றி ….!(கடிதம்-2)
- என் மத வெறியும் முக மூடிகளும்
- ‘ரிஷி’ யின் கவிதைகள்
- நாகூர் ரூமிக்கு எனது பதில்
- புன்னகைக்கும் கூர்மை : திரு.நாகூர் ரூமியின் எதிர்வினை குறித்து
- திருக்குர் ஆன் புனிதக் கற்பிதங்கள் குறித்து – சில எண்ணங்கள்
- இருளும் மருளும் இஸ்லாமும் – பாபுஜி அவர்களுக்கு சில வரிகள்
- சுடர் விட்டெரிந்த இளஞ் சூரியன் ஏ.ஜே.கனகரட்னா (1934-2006) – அஞ்சலிக் கூட்டம்
- குதிரைகளின் மரணம்
- உளி
- உச்ச நீதிமன்றமும், இட ஒதுக்கீடும்
- வட கொரியாவின் அணு ஆயுத சோதனை
- என்ன சொல்லி விட்டார் போப் பெனடிக்ட்?- 2
- மடியில் நெருப்பு – 8
- இரவில் கனவில் வானவில் – (7)
- பலி
- வணக்கம் துயரமே! அத்தியாயம் – 7
- அவள் வீடு
- சிற்றலைகள் வெகுஅரிதாகவே மணல் வெளியை தொடுகின்றன – பாரசீக வளைகுடா நாடுகளின் வரலாறு பற்றி
- உள்ளுக்குள் ஒலிக்கின்ற கோஷம் எது?
- கொலைகாரக் கொசுக்கள்: தொடரும் சுகாதார அவலம்
- உலகத்தில் எத்தனை வண்ணங்கள்? (தமிழிசைப் பாடல்)
- ஊமைக்காயம்
- கீதாஞ்சலி (95) ஒருபுறம் நீக்கும்! மறுபுறம் சேர்க்கும்!
- பெரியபுராணம் – 108 திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- தாஜ் கவிதைகள்
- ஆண்களுக்குச் சமத்துவம் வேண்டும்
- பேசும் செய்தி – 4
- வெறுமே விதித்தல்
- எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்:4, காட்சி:1 பாகம்:2)[முன்வாரத் தொடர்ச்சி]
