This entry is in the series 20060519_Issue

கவிஞர் புகாரி



கண்ணீரை
கண்ணீரால் சுண்டிவிட்டு
மூச்சுக்காற்றை
மூச்சுக்காற்றால்
தூக்கிவிட்டு
நீ என்னை
நானாக்கியபோது
என் சிறகுகளின் சாவி
உன்னிடமிருப்பதைக் கண்டு
ஆனந்தப்பட்டேன்

பின்னொரு நாளில்
ஒரு பெரிய
பூட்டாய்ப்போட்டு
என்னைப் பூட்டிவிட்டு
நீ சென்றபோதுதான்
சாவி செய்யும் கலையை
நானே அறிந்திருப்பது
அவசியமென்று
அறிந்துகொண்டேன்

*

Series Navigation