ஸ்ரீமங்கை

—-
துண்டித்த கோடுகளாய்
சுண்ணம் தீட்டிய நெடுஞ்சாலையின்
அகலத்தில் ப்ரமித்து
ஓரமாய் நடக்கிறேன்- நீ போதித்தபடி.
புகை கக்கிப்போன பேருந்தினின்று
விழுந்த காகிதத்தில்
காய்ந்த இட்லித்துண்டிற்கு
அடித்துக்கொள்ளும் காக்கைகள்,
என்றோ லாரியில் அடிபட்டு
உடல் ஊதி, கால்கள் விரைத்து
அழுகிய நாயின் சடலம்…
சுவாசம் அடக்கி இன்னும் வேகமாய்
நடக்க நடக்க,
மேலும் திணற வைக்கும்,
மனிதக்கழிவுகள்
என நீளும் குண்டும் குழியுமான
சாலையோரங்கள்
நடப்பதற்கு
நீ சொன்ன அளவிற்கு
அப்படியொன்றும் சுகமான பாதைகளில்லை.
எனினும்
சாலைநடுவில் சென்று
இவ்வனாதி நாய் போல் சாவதைவிட
பத்திரமான நடைபாதை பேதம்.
சற்றே சுகாதாரக் குறைவெனினும்…
நான் தவறாகச் சொல்கிறேனோ ?
அன்புடன்
ஸ்ரீமங்கை
kasturisudhakar@yahoo.com
- துணை – பகுதி 3
- கசப்புகளைக் கரைக்கும் குழந்தைமை -கடற்கரய் கவிதைகள் அறிமுகம்
- ‘காதல் ‘ :::: யதார்த்தத்தை நோக்கிய தமிழ்சினிமா பயண மைல்கல்
- சித்திரங்களின் தளமும் கவிதைத்தளமும்(தமிழ்மணவாளன் கவிதைத்தொகுதி அறிமுகம்)
- எழுத்தின் மீது ஒடுக்குமுறை
- தமிள் வால்க
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் பிப்ரவரி 3,2005
- கடிதம் – பிப்ரவரி 03, 2005 – திருமாவின் தனித் தன்மை
- கடிதம் பிப்ரவரி 3,2005
- பிப்ரவரி 3, 2005 – இந்த வாரம் (ஏசி , காண்டலீசா ரைஸ், ஆயில்)
- உறவு
- கவிக்கட்டு …. 47
- பேரழிவுச் சூலாயுதம்!
- பெரியபுராணம் – 29
- அற்றைப் பொழுதுக்கும் அப்பால்
- சுநாமி ஊழியம்
- கழிவு நீர் பாசனம் ! நல்லா சாப்பிடுங்க சார் !
- உலகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி (Supercontinent Splitting & Drift to Smaller Continents)
- ஒவ்வாமை
- விழிப்பு
- அறிவியல் கதை! – ‘ஆத்மாவின் புத்துயிர்ப்பு! ‘
- டச்சு கலை உலகை மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம்
- தமிழ்ச்சிறுமியும் நியூஸ்லாந்தும் , நாடுகடத்தலும் -பாலியல் வல்லுறவும் தமிழ்ச்சமுதாயமும். ‘நொந்துகொள்வதும்,புரிந்துகொள்வதும்.
- உலகப் பயங்கரவாதப் பூச்சாண்டியும் வர்க்கப்போரும்–மூன்றாவது உலகப்போராய் நடைபெறும் மூலதனக்காப்பு யுத்தம்.
- சென்ற வாரங்களில் (பெப்ரவரி 3, 2005) கோவா, பிகார், ஈராக், நேபாள், ஈரான், சீனா, தமிழ்நாடு
- தமிழா….தமிழா!
- கண்ணன் காலடியில்
- இந்தியாவில் இயற்கை அழிவா ? யாருக்கெல்லாம் அதில் மகிழ்ச்சி!
- வின்சன்ட் வான்கோவின் இரத்தம்
- எப்படிக் கொல்லுவது ( மூலம் – கெய்த் டக்ளஸ் )
- மனைவியின் சிநேகிதர்
- கணவனின் தோழியர்
- தொப்புள் கொடி!
- கவிதை
- உனது மொழியை பு ாியாத பாவி நான்
- சாலையோர நடைபாதை
- குருவிகள்
