கொடிய பின்னிரவு
கலாசுரன்
பகல்களில்
தேன் வழிய
மலர்ந்த கனவுகள்
எண்ணற்ற சிந்தனைகளில்
மடிந்து பிறக்கும்
தென்றலின் கோபுரங்கள்போல்
எண்ணித்துணிந்த
முடிவொன்றில்
சிதறும்
ஞாபகங்கள்
இசையின்றித்
தாளம்போடும்
உணர்வற்ற பாதங்களின்
விரல்கள்
தேய்ந்துபோனது
ஆயிரம்
நினைவோட்டங்களின்
மனதோர வடுக்கள்
பின்னிரவில்
இவையனைத்தும்
ரத்தம் சொட்டச்
சிவந்திருந்தன..
*
***
கலாசுரன் ..