This entry is in the series 20090129_Issue

ந.நாகராஜன்



குழந்தை வரைந்த என் கோட்டுச் சித்திரத்தில்
கண்களைக் காணவில்லை.
காதுகள் கொம்புகளாயின
தொங்கிய நாக்கில் வழிந்த சொட்டுகள்
எச்சிலா…ரத்தமா…எனத் தெரியவில்லை.
பற்களில் ஏதோ ஒட்டியிருந்தது.
முடிகள் முள்ளம்பன்றியின்
முட்கள் போலிருந்தன.
கன்னங்களில் தழும்புகள் போல் கோடுகள்.
தாடையில் உடைசல்
சிதைக்கப்பட்ட உடல் போல்
சிறு சிறு கோடுகள்
வாயருகே ஒரு கை சோற்றுருண்டையுடன்.
அது என்னுடையதல்ல
வரைந்த போதிருந்த குழந்தையின் முகத்தை
நான் பார்த்திருக்க நேர்ந்தால்
சித்திரத்தின் அர்த்தம் தெரிந்திருக்கக் கூடும்
இப்போது
சித்திரம் வரைந்த குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது.


naga.rajan52@yahoo.com

Series Navigation