- நாற்காலி
- சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்
- உடலும் பிரபஞ்சமும் -தாந்திாீக கோட்பாடு பற்றி சில குறிப்புகள்
- என்னைக் கவர்ந்த என் படைப்பு
- அமெரிக்காவும் ஐரோப்பாவும் செவ்வாய் கிரகத்துக்குப் போட்டி
- 1,60,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதரது எலும்பு கண்டுபிடிப்பு.
- அமெரிக்காவின் அலபாமா பிரெளன்ஸ் ஃபெர்ரி கொதி அணுமின் உலையில் ஏற்பட்ட தீச் சிதைவுகள் [Browns Ferry Boiling Water Reactor Fire Disa
- அறிவியல் மேதைகள் – கெக்குலே வான் ஸ்ட்ரெடோனிட்ஜ் ஃபிரெடரிக் ஆகஸ்ட் (Kekule Von Stradonitz Friedrich August)
- திராவிடக்கனவுகள்
- மனமொழி
- பிடிவாதம் (கடிதங்கள்)
- சிசு வதைப் படலம்!
- பிறழ்வு
- சித்தும் சித்தமும்!
- தவம்
- சார்ஸ் பிசாசே!
- காலி இருக்கைகள்
- ஏழையின் தேசிய கீதம்
- இந்தியர்கள் – 5 கவிதைகள்
- தொலைந்து போனவன்
- தி.கோபாலகிருஷ்ணனின் ஹைகூ கவிதைகள்
- குப்பைத் தொட்டியில் ‘குவா குவா ‘
- வாரபலன் – 6 சுற்றம் சுகம்(ஜூன் 7, 2003)
- குழாயடியில் ஆண்கள்
- பக்கத்து வீட்டு ப்ளாண்டும், பத்மாவும் :
- ஒரு மெளனத்தின் குரல்
- நீ ஒரு சரியான முட்டாள்!
- அரசூர் வம்சம் – அத்தியாயம் பத்து
- பறவைப்பாதம் – 5 (முடிவுப்பகுதி)
- கடிதங்கள்
- அய்யா
- சில குறிப்புகள் 14 ஜூன் 2003 (சண்டியர்-இண்டெக்ஸ் ஆன் சென்சார்ஷிப்-நேர்,சமூக அறிவியல்-பல்கலைக் கழகங்கள், அறிவுசார் சொத்துரிமை )
- மனம் உயர வழி!
- பன்னீர்த் துளிகள்
- குருடு, செவிடு, சனநாயகம்!
- அலைகள்
- நகர் வெண்பா இரண்டு
- உரை வெண்பா – வீதி
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 7
- நாளை நாடக அரங்கப்பட்டறை வழங்கும்
- சபலம்
கரு.திருவரசு

கண்ணனுக்கோர் கண்ணாடி கண்ணகி வாங்கிவந்தாள்
கண்ணகியின் காதுகளில் மாட்டும் கருவியொன்றைக்
கண்ணனும் வாங்கிவந்தான்! காதலர் ஆயினரே!
அண்ணலவன் கண்ணாடிக் கண்ணாலே நோக்கியொரு
பண்ணிசைத்தான், காதலுக்கே பண்ணமைத்துப் பாட்டிசைத்தான்!
பெண்ணவளும் செவிகளிலே மின்கலத்தின் ஒத்துழைப்பால்
கேட்கும் கருவிகளை மாட்டி இசைகேட்டாள்!
பாட்டில் இருநெஞ்சும் பால்போலப் பொங்கினவே!
காதலுக் கடுத்துவரும் காட்சி திருமணமே
காதலரும் பெற்றோரைக் கண்டனர், கேட்டனரே!
கண்ணனின் தந்தை ‘கதகளி ‘யொன் றாடிவிட்டுப்
பெண்ணா கிடைக்கவில்லை, பேயனே நீயேன்
இருசெவியும் கேளாப் பெருஞ்செவிடைத் தேர்ந்தாய்
ஒருசெவிட்டுப் பெண்ணைநான் மருமகளாய் ஒப்பேன்நான்!
என்றவனை ஏசினார், என்னய்யா நீதியிது
இன்றும் உலகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும்
துண்டுபடும் நீதிகளா, மாந்தப் பொறிகளிலே
கண்கெட்டால் குற்றமிலை, காதுகெட்டால் நொட்டையா ?
கண்ணனுக்குக் கண்மங்கல் கண்ணாடி மாட்டினான்
கண்ணகிக்குக் காதுமந்தம் காதிலெதோ வைத்தனள்
கண்ணன் குருடனெனக் காணா உலகமிது
கண்ணகியை மட்டும் செவிடியெனச் சொல்வதென்ன ?
மங்கலுக்குக் கண்ணாடி மாட்டலாம், காதுகொஞ்சம்
மந்தம் செவிக்கருவி மாட்டினால் என்னகுறை ?
கண்ணாடி மாட்டல் கவர்ச்சியாய்ப் போனதுவும்
கண்ணாடிக் கூட்டம் கணக்கில் பெருகியதும்
எங்கும் எதிலும் பெரும்பான்மை ஏற்றமென்னும்
சங்கதியில் நீதி சரண்!
****
thiruv@pc.jaring.my