விக்ரமாதித்யன் நம்பி
ஒரு பட்டாசு வெடிப்பது
போலில்லை மைனா வளர்ப்பது
ஒரு சினிமாவுக்குப் போவது
மாதிரி அல்ல முயல் வளர்ப்பது
நாய்வளர்ப்பது ஒரு சர்க்கஸ்
பார்ப்பதொப்ப கிடையாது நிச்சயம்
பசுவளர்ப்பதென்ன ஒரு டிராமா
காண்பது அன்னவா என்ன
இதிகாச நாயகர்கள் யாரும்
எதையும் வளர்த்ததாகத் தெரியவில்லை
மாதவி
கிளி வளர்த்திருப்பாளாய் இருக்கும்
கண்ணகி
என்ன வளர்த்திருக்கக் கூடும்
பாடிக்கொண்டே போன
ஒளவை கவிதைதான் வளர்த்தியிருக்கிறாள்
பாண்டியர்கள்
தமிழும் சைவமும் வளர்த்தார்கள்
தேவாரம் பாடிய மூவர்
திருமூலர் மணிவாசகர்
எல்லோரும் வளர்த்தெடுத்தது
சைவமும் தமிழும்தாம்
சிலம்பில்
வளர்ந்த தமிழ்
சிந்தாமணியில்
வளர்ந்த தமிழ்
ஆதிசங்கத்தில்
திமிர்ந்துநின்ற தமிழ்
ஆண்டாளிடம்
பூத்துப் பொலிந்த தமிழ்
பாரதியிடம்
பொங்கி வந்த தமிழ்
கண்ணதாசனிடம்
களைகட்டி நின்ற தமிழ்
மலைகள் வளர்கின்றன
மான்கள் வளர்கின்றன
முலைகள் வளர்கின்றன
முத்தங்கள் வளர்கின்றன
பிள்ளைகள் வளர்கிறார்கள்
பெண்கள் வளர்கிறார்கள்
கவிஞர்கள் வளர்கிறார்கள்
கலைஞர்கள் வளர்த்தெடுக்கிறார்கள்
கண்ணீர்த்துளிகளுக்கும் கவிதைகளுக்கும்
கொஞ்ச சம்பந்தமா பாப்பா
ஒரே ஒரு சாட்சி
பிரமிள்
******************************************************
- நாளையும்…..அக்கறையாகவோர்………….. ?
- சோகல் கட்டுரையும், கறுப்பில் வெளியானதும் குறித்து
- மனித நல்லிணக்கம்.
- ஒரு இந்துவின் பதில் – திரு.திருமாவளவனுக்கு
- ‘போலீஸ் தனது அடியாளாக இருக்கவேண்டும் என்று அரசாங்கம் விரும்புகிறது ‘
- நாகூர் ரூமியை முன் வைத்து : பெண்கள், புத்தகங்கள், இஸ்லாம்
- கடிதங்கள் – ஆங்கிலம் – டிசம்பர் 11,2003
- பிதாமகன்: பாலாவின் படங்களும் தனிநபர் வன்முறையும்
- யானை பிழைத்த வேல்
- பாரதி நினைவு நாள்
- பாரதி, மகாகவி: வரலாறு
- எனக்குப் பிடித்த கதைகள் – 89- சொற்களுக்குப் பின்னியங்கும் ஆழ்மனம்- என்.கே.ரகுநாதனின் ‘நிலவிலே பேசுவோம் ‘
- கண்ணீர்த்துளிகளும் கவிதைகளும்
- கொஞ்சம் தள்ளிப்போனால்
- தேர் நிலைக்கு வரும் நாள்
- கபிலர் பாறை
- ஆதாரம்
- ஏ ! பாரதி
- காகம்.
- அரவம்.
- கவிதைகள்
- கவிதைகள்
- புதசுக்கிரயோகம்
- கங்கைகொண்டசோழபுரம்
- பாம்புபற்றிய என் ஆறாவது கவிதை
- தேர்க்கவிதை
- ஸ்வாமி விவேகானந்தரும் அறிவியலும்
- வயிற்றுப்போக்கு மூளை வளர்ச்சியைப் பாதிக்கிறது.
- அண்டவெளி உயிர் மூலவிகளை ஆய்வு செய்த வானியல் விஞ்ஞானி ஃபிரெட் ஹாயில் (1915-2001)
- வைர வியாபாரமும் வன்முறையும்
- கூட்டு வாழ்க்கை – ஒரு உதாரணம்
- கடிதங்கள் – டிசம்பர் 11,2003
- நட்பு
- ரங்கநாதனுக்கு வந்த காதல் கடிதம்
- காதல் மாயம்
- அம்மண தேசம்
- மேல் நாட்டு மோகம்
- வினைத்தொகை
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர்)
- விடியும்! – (26)
- வார பலன் – மனுஷாகாரம் மனிதன் ஆகாரம்
- சில எதிர்வினைகள்
- அன்புள்ள மனுஷ்யபுத்திரன்
- என்ன உலகமோ
- கால் கொலுசு
- உள்வீடு
- யெளவனம்
- காபியிலும் ஆணாதிக்கம்
- இணையம்
- என் புத்திக்குள்
- கடவுள்கள் சொர்க்கத்தில்…..
- பின்நவீனத்துவ ‘டெஹல்கா’ :ரவி ஸ்ரீனிவாசிற்கு ஓர் எதிர்வினை
- முரசொலி மாறன்
- காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தாறு