கவியோகி வேதம்
அழுக்கில் குளித்து,இiருட்டு நிறத்தில்
..அம்மணமாய் ஓடுகிறாள்!-என் ‘பேத்தி ‘
அழுவேனா என்ன ?கிராமிய மணத்தில்
..அதிலும்-ஓர் சுகம்தான்!நாடுகிறேன்!
பன்றிகள் புரண்ட சேற்றை எறிந்து
..பயல்கள் அவள்மேல் வீசிடினும்,
கன்றுக் குட்டிபோல் தப்பிச் செல்லு(ம்)அக்
..கனலின் துள்ளலை ரசிக்கின்றேன்!
குடிசைக் குள்ளே நோயில் முனகிக்
..குலைந்து கிடக்கிறாள் அவள்பாட்டி!
தடியை ஊன்றிநான், நாட்களை எண்ணி,
..தவசிபோல் ‘விரக்தியில் ‘ கழித்தாலும்,
கருகிய மரங்களின் உச்சிக் கொம்பிலும்
..காதல்செய்க் கிளிகளின் மயக்கம்போல்,
உருகுகின் றேன்நான்என் பேத்தியின் கொஞ்சலில்!
..உயிரைத் தேக்குவேன் ‘வற்றல் ‘உடம்பினில்!
பாலை நிலத்திலும் ஒற்றை ஒட்டகம்
..பசும்முள் தின்றுநாள் ஓட்டலையா ?
வாலைக் குமரியாய் பேத்தியின் திருமணம்
..வரும்வரை ‘எமனையே ‘எதிர்த்து நிற்பேன்!
***
- துணையை தேடி
- சுவாசம்
- நிதான விதைகள்..
- திண்ணை அட்டவணை
- பயணமும் பண்பாடும் (எனக்குப் பிடித்த கதைகள்-18 -சா.கந்தாசமியின் ‘தேஜ்பூரிலிருந்து.. ‘)
- சதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு
- ஒரு நாடகமும் மூன்று பார்வைகளும் (கிரீஷ் கார்னாடின் ‘அக்னியும் மழையும் ‘ நாடகத்தை முன்வைத்து ஓர் அலசல்)
- கோழிக்கறி வறுவல் – ஜப்பான் முறை
- வானில் திரியும் வால் முளைத்த விண்மீன்கள்
- நிம்மதி
- மிடில் க்ளாஸ்
- முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்
- கறை
- ‘உயிர்க் கவிதை ‘
- என் கிராமத்துக்-குடிசைப்பேத்தி!
- எல்லைகளின் எல்லையில்
- இந்த வாரம் இப்படி – ஜூலை 7, 2002 (திருச்சி பஸ், காவிரி,வைகோ, ஆப்கானிஸ்தான் கல்யாணம்)
- இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 5 -இந்துத்துவ வகுப்புவாதம் மற்றும் வகுப்புக் கலவரங்களின் சில முக்கியமான பரிமாணங்கள்
- அரசியல்
- தயவு செய்து தளையசிங்கத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்
- சதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு
- கூறாமல்