அனந்த்
எனக்குள்ஒரு புனலாய்ச்சிறு நதியாய்அலை கடலாய்
…. இழைந்தோடுநல் லமுதேஇயல் இசைநாடகத் தமிழே!
மணக்கும்புது மலரேஎழிற் பொழிலேகவின் வனமே
…. வருடும்மிளந் துளிரேஉயர் பொதிகைவளர் மொழியே!
நினக்கும்பொழு(து) எளிதேமனம் நிறைந்தென்கரம் வழியே
…. நெடுநாள்நிலை கவியாய்உரு வெடுக்கும்என துயிரே!
உனைக்கும்பிட உனைஏத்திட உயரும்உன(து) அடியேன்
…. ஒருநாளொரு பொழுதாகிலும் மறவேன்உன தருளே! (1)
எனக்குள்ளொரு துணையாய்ப்புது உறவாய்ப்பெரு நிதியாய்
…. இணையம்வழி இனிதெய்திய பலதோழர்கள் உலகம்
அனைத்தும்நிறை கவிபாடுநர் அவரோடள வளவி
…. அடையும்சுகம் அடடா!அதுபெரிதேமிக அரிதே!
வனைக்கும்பல கவியோவிய மடலாம்அவை மனத்தில்
…. வளர்க்கும்உணர் வதனால்வரு நெகிழ்வால்நம துடலம்
நனைக்கும்விழி மழையேதமிழ் புரக்கும்புனல் புவியில்
…. நமக்கென்றொரு இடமேபெற வழிகாட்டிடும் அதுவே! (2)
எனக்குள்ஒரு நிலவாயெரி கதிராயகல் விளக்காய்
…. இருள்நீக்கிடும் ஒளியேபழ மறையேஎன(து) இறையே!
மனக்கோவிலில் புகுவாய்அதில் உனைக்காட்டியென் உளநோய்
….. மறைந்தேகிடத் தருவாய்உன தருளானநல் மருந்தே
கனக்கும்பவச் சுமைதாங்கிட இயலாமலுன் கழலே
…. கதியேஎன வருமேழையின் கவல்தீர்த்திடும் நிழலே
தமக்குள்உனைத் தெளிவாயெவர் அறிவாரவர் அகத்தே
…. தழைக்கும்சுக நிலையேஎனைத் தலையாட்கொளும் பரமே! (3)
dbsvsa@nus.edu.sg
- ஜீவி கவிதைகள் இரண்டு
- எனக்குள் ஒரு….
- இரண்டு பேட்டிகளும் ஒரு எதிர்வினையும்
- கனவுகளும் யதார்த்தங்களும் சங்கமித்த சுவிற்சர்லாந்தின் ஐரோப்பிய குறும்பட விழா
- மழைக்காலமும் குயிலோசையும் மா. கிருஷ்ணனின் இயற்கையியல் கட்டுரைகள் நூலின் முன்னுரை
- நூலகம்
- உணவும் உயிரும் (ஜாக் லண்டனின் ‘உயிர் ஆசை ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 50)
- விக்ரமாதித்யன் கவிதைகள் – ஒரு வாசிப்பு
- புத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும்
- சோழநாடனின் கொடுமுடிகோகிலம் கே.பி. சுந்தராம்பாள் வரலாறு — ஒரு மதிப்புரை
- ‘மனிதன்! கவிஞன்! முருகன்! ‘
- பேரன்பு, கொடை, மற்றும் காதல் ரூமி (RUMI) கவிதைகள்
- டார்வின் தினம்
- தம்பி தாளெடுத்து வா – உரைவெண்பா
- என்னை வரைந்த படம் – உரைவெண்பா
- இன்றாவது மழை வருமா ?
- புத்தி
- முகம் பார்க்க மாட்டாயா ?
- என்னோடு நீ…
- வார்த்தை
- முகம்
- வீடுகளில் ஒளிந்து கேடு செய்யும் ரேடான் கதிர்வீச்சு [Radon Radiation]
- அறிவியல் துளிகள்-16
- அவர்களும் மனிதர்கள்தாம்!
- சூரியதீபனின் ‘வினோதமான பண்பாட்டு அசைவுகள் ‘ : பழமை அறியாத பாமரர் ?
- கிரிக்கெட் நாகரிகம்
- உலக வளத்தை நோக்கி முதல் அடிச்சுவடுகள்
- நினைத்தேன்..சொல்கிறேன்… காமாத்திபுரா பற்றி
- சோழநாடனின் கொடுமுடிகோகிலம் கே.பி. சுந்தராம்பாள் வரலாறு — ஒரு மதிப்புரை
- பரத நாட்டியம் – சில குறிப்புகள் – 1
- ஓ…. கல்கத்தா!
- வாயு (குறுநாவல் அத்தியாயம் மூன்று)
- மீண்டும் ஒரு காதல் கதை 2
- கடிதங்கள்
- புத்தக வெளியீட்டுவிழாவும் எம் எஸ் அவர்களுக்கு பாராட்டு விழாவும்
- நீ… ? ? ? ?
- அது ஓர் நிலாக்காலம்
- பாத்திரம் அறிந்து….
- என் பிரியமானவளே !
- காதலே
- ஞாயிற்றுக்கிழமை இலக்கியவாதிகள்
- கானல் பறக்கும் காவிரி
- அழிவை அழி
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 13 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- முகம்