ஸ்ரீநிவாஸன் ராமச்சந்திரன்
என் மனக்குளத்தின் மத்தியில்
கல் எறிந்து
நீரலைகள் நிற்கும் முன்
காணாமல் போனவளே !
பார்வை நிலைகொளல்களும்
வார்த்தை பரிமாற்றங்களுமாய்
மேகக்கூட்டத்தின் மத்தியில்,
வானவில்லின் வண்ணம் கொண்டு
எழுதப்பட்டதொரு ஒப்பந்தம்,
நூலறுந்த காற்றாடியாய்
இன்று தெருவோரம் கிடக்குதடி !
எதிர்பார்ப்புகள் என் உத்திரத்தில்
கட்டப்படும் சிலந்தி வலைகள்.
ஏமாற்றங்கள்
என் வீட்டு முன் அறையை
அலங்கரிக்கும் தோரணங்கள்.
சிந்தனைகளை
சிந்தனைகள் கொய்து செல்ல
மிச்சமாய் கிடக்கும்
பச்சையமற்ற பிரதேசங்களில்
சருகாகிக் கிடக்கும் உன் நினைவுகள்.
எப்படி முடிந்து போனது.
துவக்கத்துக்காய் நான் எழுதிய
கவிதை
முடிவுரையாய்
முகமற்றுப் போனது எப்படி ?
என் நிழலைத் தின்றது
இரவோ இல்லையோ,
தக்க வைத்துக் கொள்ளாதது
என் தவறு தான்.
விலகலுக்குப் பின் தான்
விளங்குகிறது.
வெட்டினால் வளர்வது
நகம் தான்,
அகம் அல்ல.
0
– SAX.
Srinivasan.Ramachandran@in.efunds.com
- அவனோட கணக்கு
- மண்
- அணு உலைகளுடன், பல்குத்தும் துரும்பையும் பற்றி
- உலக வேகப் பெருக்கி அணு உலைகளின் அகால முடிவுகள்![Fast Breeder Reactors]
- அறிவியல் துளிகள்-17
- MANAVELI PERFORMING ARTS GROUP TO PRESENT TENTH ANNUAL FESTIVAL
- திறக்கும் கதவுகளும் மூடும் கதவுகளும் (மு.தளையசிங்கத்தின் ‘கோட்டை ‘ – எனக்குப்பிடித்த கதைகள் 51)
- பயணக் குறிப்புகள் 2003
- பயணக் குறிப்புகள் 2003
- அணு உலைகளுடன், பல்குத்தும் துரும்பையும் பற்றி
- பரீக்ஷா தமிழ் நாடகக்குழு வெள்ளி விழா கொண்டாடுகிறது.
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 14
- இந்த வாரம் இப்படி (மார்ச் 9, 2003- சாத்தன்குளம் வெற்றி, மாயாவதி ஊழல், சவர்க்கர் படத்திறப்பு, இந்தி மைல்கல்)
- மன்னிக்க வேண்டுகிறோம்
- பனியின் மடியில்….
- அன்புடனும், நன்றியுடனும் லூஸிபருக்காக
- பெண்
- சிக்கன விமானம் – உரைவெண்பா
- மூன்றாம் பிறை
- நீ வருவாய் என…..
- கண்ணாடிக்கு அப்பால்
- இன்னா செய்தாரை ஒறுத்தல்…
- வாயு – அத்தியாயம் நான்கு
- நினைத்தேன்…சொல்கிறேன்…காதலும் கல்யாணமும் பற்றி…
- நசிந்த கிராமங்களும், நரகமாகும் நகரங்களும்
- ஆசியாவில் வளர்ச்சி வறுமையைக் குறைத்தது என்கிறார் சுர்ஜித் எஸ் பல்லா.
- ராஜதந்திரமும் இலக்கியமும் (சுராவின் பேட்டி)
- கடிதங்கள்
- விஷமாகும் மனம் (பள்ளிக்கூட புத்தகங்களில் வெறுப்பு ஒரு பாடம்)
- இந்தியாவுக்கு புத்த மதம் திரும்பி வருகிறது
- என் கண்ணில்
- உயர் மொழி !
- ‘ஊக்கும் பின்னும் ‘
- வறளையின் வீச்சு
- உறவுக்காலம்
- நான்கு கவிதைகள்