இனிவரும் வசந்தத்தின் பெயர்
கலாசுரன்
*
வெளிறிய கோடை இலைகளே..
வறண்டு போன
நடை பாதைகளே..
நீருடை பூணும்
கானல்களே..
ரத்தமற்று சுருங்கிப் போன
நதி தமநிகளே..
கருகி விழுந்த
பூவிதழ்களே..
எனதிந்த
வெற்றுக் காகிதங்களிடம்
இனிவரும்
வசந்தத்தின் பெயரை மட்டும்
சொல்லுங்கள்..
*
***
கலாசுரன்