- ஆட்காட்டிப் புற்கூண்டில் வசிக்கும் இதயம்
- பார்த்திப ஆண்டு உதயம்
- அதிர்ச்சியும் ஆற்றாமையும் (சுகுமாரனின் மொழிபெயர்ப்புக் கவிதைகள்)
- மீண்டும் வரும் நாட்கள் :மு.புஷ்பராஜன் கவிதைகள்
- பூகோள காந்த துருவங்கள் இடமாற்றம், துருவ முனையில் விண்ணிற ஒளித் தோரணங்கள் [Geomagnet Poles Reversal, Arctic Auroras] (8)
- மனிதகுலம்: உலகின் மிகக்கொடிய சுரண்டல் கும்பல்-குற்றஞ்சாட்டுகின்றனர் விஞ்ஞானிகள்
- வடகிழக்கில் ஒரு புதிய குரங்கினம் -100 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடிப்பு-
- உயிர்த்தேன்
- நினைவிருக்கிறதா ?
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-6
- தொடர்ந்து ஒலிக்கும் குரல் – (வெங்கட் சாமிநாதனின் உரையாடல்கள் )
- ஹினா- மட்சுரி
- பால்வினைத் தொழில்
- அன்புள்ள ஆசிரியருக்கு
- இனவாத ஈவெரா ?
- தமிழவன் கட்டுரை பற்றி…
- பரிமளத்திற்குப் பதில்மடல்
- அவளால்…!
- என்ட வீடும் அப்புன்டேயும் கறுப்பு
- பெரியபுராணம் – 36
- கீதாஞ்சலி (18) உன்னைத் தேடும் போது … ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- உயிரினினும் இந்தப் பெண்மை இனிதோ ?
- Pope John Paul II
- மழலைச்சொல் கேளாதவர் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- பிம்ப உயிர்கள் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற கதை)
- சீதாயணம் ஓரங்க நாடகத்தின் பின்னுரை
- சேதி வந்தது
- பாம்புகள்
- இருந்ததனால்….
- ஓய்வு இல்லத்தில் ஒரு மாலைப்பொழுது!
- தமிழில் பிறமொழி கலத்தலும் திரைப்படத் தலைப்பும்
- கலைந்துபோன ‘திராவிடஸ்தான் ‘ கனவுகளும், கண்ணகியைப் பழித்த கருஞ்சட்டைத் தலைவரும்! – 1
- மகள்…
- முன்னேறு
- பயணம்
- இதற்காக இருக்கலாம்!
- சிந்திக்க ஒரு நொடி – சாஸனம் பொய்த்ததா, மானுடம் பொய்த்ததா ?
- சிந்திக்க ஒரு நொடி – விட்டு விடுதலையாகி
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – சுபாஷ் சந்திர போஸ்
- தமிழ் அறியாத தமிழர்கள்
- கண்கள்
பரிமளம்

பொதுவாகத் திராவிடர்க் கழகங்களையும் குறிப்பாக ஈ.வெ.ராமசாமியையும் தாக்குவதற்கு அரவிந்தன் நீலகண்டன் தூக்கும் தடிகளில் ‘திராவிடர்- ஆரிய இனப்பாகுபாடு ஆங்கிலேயர்களின் கட்டுக்கதை’ என்பதும் ஒன்று. அதாவது இந்தியாவில் இனங்கள் இல்லை. மதங்கள் மட்டுமே உண்டு ஆகவே ஆரிய இனத்தை எதிர்ப்பதாகக் கூறிய ராமசாமியின் போராட்டம் பொருளற்றது என்பது அ.நீ யின் கோட்பாடு என்று இத்தனைக் காலமும் நினைத்துக்கொண்டிருந்தால், மனிதர் கடந்தவாரம் எழுதுகிறார் ‘ஈவெராவின் அடிப்படையான இனவாத – இனவெறுப்பு பிரச்சாரம் பகுத்தறிவின் குறைந்த பட்ச சாயல் கூட இல்லாதது’ (ஈவெரா பித்தம் தெளிய சோவென்ற மருந்தொன்றிருகிறது) என்று!
ராமசாமி எந்த இனத்தின் மீது வெறுப்பு கொண்டிருந்தார் என்று அ.நீ கொஞ்சம் விளக்கினால் நல்லது.
****
சாதியக் கட்டுமானத்தின் இரண்டாம் தட்டில் இருந்துகொண்டு மேல் தட்டில் இருப்பவர்களது அநியாயங்களை எதிர்த்தவர் இனவெறியர் என்றால், அடுக்கின் கீழ்த்தட்டில் இருந்துகொண்டு மேலே உள்ள அனைவரது அநியாயங்களையும் எதிர்க்கும் தலித்துகளும் இன வெறியர்கள் என்று அ.நீ கூறுவாரா ?
****
ஈவெராவின் போராட்டம் ‘பகுத்தறிவின் குறைந்தபட்ச சாயல் கூட இல்லாதது’ என்றால் அ.நீ. பின் வருவனவற்றுக்கும் ஆதரவாளர் என்று பொருளாகும். (இது முழுப்பட்டியல் அல்ல, ஏதோ நினைவுக்கு வந்தவரை எழுதுகிறேன்)
பெண் கல்வி கூடாது.
குழந்தைத் திருமணம் சிறந்தது
சிறுமிகளை முதியவர்களுக்கு மணமுடிப்பது தவறில்லை
கலப்புத் திருமணம் தவறு
விதவைத் திருமணம் தவறு
பெண்களுக்குச் சுயபுத்தி கூடாது
சாதிய அமைப்பு சாஸ்த்திரத்தில் உள்ளது. எனவே அதை மீறக்கூடாது
தலித்துகள் கோவிலுக்குள்(கருவறைக்குள்) வரக்கூடாது.
பார்ப்பனர்கள் உண்பதற்குத் தனி இடம் ஒதுக்குவது சரிதான். (‘பார்ப்பனர்’ என்பதைப் பழந்தமிழ் இலக்கியத்தில் ஆளப்படும் ஒரு நல்ல தமிழ்ச்சொல்லாகக் கருதிப் பயன்படுத்துகிறேன்)
கீழ்ச்சாதிக்காரர்கள் படிக்கக்கூடாது
கல்விக்கூடங்களிலும் அலுவலகங்களிலும் 95% பேர் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்தவர்களாக இருப்பதில் எந்த அநீதியும் இல்லை.
தீண்டாமை சரிதான்
மனிதர்கள் அனைவரும் சமமில்லை
மனிதர்களின் காலில் விழுவது மரியாதைக்கு அடையாளம்
சுயமரியாதை என்பது வெங்காயம்
எதையும் பகுத்தாராய்வது வெட்டி வேலை
பொதுவாகச் சமூக அநீதிகளைப் பற்றிப் பேசுவது தவறு
janaparimalam@yahoo.com