- ர்ர்.. கீச்..கீச்…
- சுகம்
- நினைவுகள்
- அவசியம் ஒரு அஸ்திவாரம்.
- வழி மாறிய தென்றல்
- விந்தைதான்
- மீளத்துடிக்கும் மனம்
- பேட்ரியாட்டும் பேரீச்சம் பழமும் – இரண்டு
- தேடுதல்
- வேதம்
- அறிவியல் துளிகள்-21
- பாரதத்தில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து [Narora Atomic Power Station]
- பேதம் உணராத குழந்தைமை (அ.முத்துலிங்கத்தின் ‘அக்கா ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 55 )
- உணவு அருந்தும் நாகரிகம்
- பாதாள ரயில் நிலையம் – உரைவெண்பா
- ஏகாதிபத்தியமும் அடிப்படை வாதமும் – வளைகுடா அரசியலை முன் வைத்து
- புஷ்-ப்ளேர் நடத்தும் ஈராக் போரின் விளைவுகளும் இந்தியாவும்
- மாடன் மோட்சம்
- ரசிகன்
- சைக்கிள் முனி
- சைக்கிள்-
- கு ை க ர யி ல்
- அலைவரிசை
- கடிதங்கள்
- மானசரோவர் டாட்காம்
- Polynation is Pollination: Theatre and Arts from the Margins
- Tamil children song cassettes
- நினைத்தேன். சொல்கிறேன். இந்தியும். நந்திகளும்.
- இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ?
- அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 18 இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான
- போர் நாட்குறிப்பு – ஏப்ரல் 5, 2003
டி மோஹனலட்சுமி

அமைதி இன்று
அமைதி தேடி
அலைகிறது.
பாதுகாப்பே இன்று
தற்காப்புக்காக ஆயுதம்
தாங்கி நிற்கிறது.
ஒவ்வொரு விடியலும்
நாளும் அமைதி
வேண்டி விடிகிறது.
இரத்ததால்
நிர்ணயிக்கப் படுகின்றன
எல்லைக் கோடுகள்.
இழப்பின் எண்ணிக்கைகள்
நிர்ணயிக்கின்றன
நாடுகளின் வலிமையை!
விஞ்ஞானத்தால்
உலகம்
நெருங்கி விட்ட
போதிலும்
தனித் தனித் தீவாய்
மனிதர்கள்.
ஒவ்வொரு மனிதனும்
இன்று பிரசவ வேதனையில்,
அமைதி என்னும்
வெண் புறா
பிறக்க வேண்டி
தவமிருக்கிறான்.
புத்தகம் ஏந்த வேண்டிய
பூந்தளிர்களின் கைகள்
இன்று
ஆயுதம் ஏந்தி நிற்கின்றன
எதிரி யார் என யாருக்கும் தெரியாமலே.
வெட்ட வெட்டத் தழைப்பது
இலைகள் மட்டுமல்ல
வன்முறையும் தான்.
வேரோடு பிடிங்கி எறியாவிடில்
அது விதைத்தவனையும்
சேர்த்து எரித்து விடும்.
எச்சரிக்கை !
ஆயுதங்களில்
இல்லை வெற்றயின் ரகசியம்,
அவற்றின் அழிவில்
உள்ளது அன்பின் அவசியம்.
இன்றைய அவசர தேவை
பகை வளர்க்கும் பாசாங்கு குணம் இன்றி
மனிதம் காத்து வளர்க்கும்
மனித பண்பு.
சரித்தரம் மட்டும் பேசட்டுமே இனி
வன்முறையின் வீச்சத்தை.
அமைதி மட்டும்
வாழும் ஆலயமாகட்டும்
இந்த மண்னுலகம்.
ஆலயத்தின்
அடிக்கல் நாட்டு விழா
துவங்கட்டுமே இன்று –
அதற்கு அமையட்டுமே
அன்பே என்றும்
அஸ்திவாரமாக.
MohanaLakshmi.T@in.efunds.com