திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அன்பு

This entry is in the series 20080501_Issue

ஆதிராஜ்



அன்பெனப் படுவதே ஆவியின் கவசம்1
அன்பேனப் படுவதே அவனியின் ஜீவன்!
அன்புடை வாழ்க்கை அறிவுடை வாழ்க்கை!
அன்புள உளமே அமுதுள கலசம்!

புத்தன் என்னும் புண்ணியன் புவிக்குச்
சத்துள மருந்தெனச் சாற்றிய தன்பே!
காந்தி மகானின் கவர்ச்சியும் அன்பே!
சாந்தியின் உண்மைச் சாரமும் அன்பே!

வள்ளலார் ஏற்றிய ஜோதியும் அன்பே!
கள்ளமில்லாத காதலும் அன்பே!
பொய்யாமொழியார் புகழ்ந்ததும் அன்பே!
மெய்யாய் மறைகள் மெச்சினதன்பே!

வர்த்தமானர் காட்டிய நெறியிலே
அர்த்தம் நிறைந்த அகிம்சையும் அன்பும்!
அஞ்சன விழிகள் அழகுறும் அன்பால்!
வெஞ்சினம் வெல்லும் வேற்படை அன்பே!

கன்மனம் கரையும் கயமையும் மறையும்!
பொன்மனக் குளத்தில் பூத்திடும் அன்பால்!
அன்பு செய்வோர்க்கே அனைவரும் சொந்தம்!
அன்பு செய்வோர்க்கே அவனியே சொந்தம்!

அன்பு செய்வீரே! அன்பு செய்வீரே!
அறிவுடையோரே அன்பு செய்வீரே!

– ஆதிராஜ்

Series Navigation

About ஆதிராஜ்

ஆதிராஜ்

View all 14 articles →

அன்பு

This entry is in the series 20040819_Issue

சுஜாதா சோமசுந்தரம்


அன்பு என்ற அர்த்தம் தேடினேன்
அகராதியில் கிடைக்கவில்ல;
பண்பு என்ற சொல்லுக்கு
பகல் முழுவதும் யோசித்தேன்
பைத்தியகாரி ஆகாமல்
போனதுதான் மிச்சம்;
தாயிடம் கிடைத்த அன்பு
உலகத்தரம் வாய்ந்தது;
தந்தையிடம் கிடைத்த அன்பு
உன்னதமானது;
சகோதர,சகோதரியிடம் கிடைத்த அன்பு
சக்தி வாய்ந்தது;
நண்பர்களிடம் கிடைத்த அன்பு
நன்றி மறவாதது;
காதலியிடம் கிடைத்த அன்பு
கடைசிவரை நிலக்காதது;
இளைஞர்களே….
மனைவியிடம் கிடக்கும் அன்பு
மறையும் வரை மறவாதது;

**
சுஜாதா சோமசுந்தரம்,சிங்கப்பூர்.

Series Navigation

About சுஜாதா சோமசுந்தரம்

சுஜாதா சோமசுந்தரம்

View all 19 articles →

அன்பு

This entry is in the series 20040603_Issue

பாஷா


என் அன்பு
ஏழு ஆண்டுகளாக
என்னிதயத்தில் அடக்கப்பட்டு
ஒரு நாள்
உன்குரல் ஒலிக்க
வெடித்து சிதறி
உன் வாசல்வரை
வழிந்துகொண்டிருக்கிறது!
உன் அன்பு
ஆறுதலாய் தொடங்கி
அன்பாய் அவ்வப்போது சுயம்தொட்டு
ஆண்டவன் கட்டளைகளாய் நிபந்தனைகளை
அள்ளிதெளிக்கிறது!
என் அன்பு
பாலை மணலெடுத்து – அதன்
குருதி பிழிந்து
உன் உருவம்
வடித்துகொண்டிருக்கிறது!
உன் அன்பு
அதன் வழித்தடங்களில்
விரிந்துகிடக்கும் புல்வெளியாய்
என் அடையாளம்
சொல்கிறது!
என் அன்பு
வானெங்கும் வியாபித்து
உன்மேல்மட்டும் அதன்மழை
பொழிந்துகொண்டிருக்கிறது!
உன் அன்பு
சாரலாய் சிலநேரம் என்
ஜன்னலோரம் வந்து
உயிர்தீண்டிபோகின்றது!
என் அன்பு
அதன் சிம்மாசனத்தில்
உன்னைமட்டுமே அமர்த்தி
அழகுபார்க்கின்றது!
உன் அன்பு
அதன் கதவுகளை
அனைவருக்கும் திறந்திருக்கிறது!
என் அன்பு
உன் குரல்தேனூற்றி
அதன் தாகம்தீர்க்கிறது!
உன் அன்பு
அதன் உத்தரவாதத்திற்கு என்
ஒருவருகை கேட்கின்றது!
என் அன்பு
அதன் எல்லா தருணங்களிலும்
உன்னிடம் அடைக்கலமாகிறது
உன் அன்பு
உன் அலுவல் நேரத்தில்
அதன் கதவடைக்கின்றது!
என் அன்பு
உயிர்பிரியும் நொடியிலும்
உன் நினைவை சுமந்திருக்கிறது!
உன் அன்பு
ஊர்துறந்த நாளிலேயெ என்
பெயர் மறந்துபோகின்றது!

—-
sikkandarbasha@hotmail.com

Series Navigation

About பாஷா

பாஷா

View all 37 articles →