திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20091113_Issue

அரசியலும் சமூகமும்

வார்த்தை நவம்பர் 2009 இதழில்…

பி கே சிவகுமார் விரியுமறிவு நிலை காட்டுவீர்! வீழும் சிறுமைகளை ஓட்டுவீர்! - பி.கே. சிவகுமார் வாசகர் கடிதங்கள் எதிர்வினைகள் என் ஓவியங்களில் இந்தியத்தன்மை தன்னிச்சையாக இடம் பெற்றது (ஆர்.பி. பாஸ்கரன் நேர்காணல்) -…

அறிவிப்புகள்

குரு அரவிந்தனின் நூல், ஒலிவட்டு வெளியீட்டு விழா

மணிமாலாசென்ற சனிக்கிழமை 07 - 11 - 2009 மாலை 3:30 மணியளவில் குரு அரவிந்தனின் ‘நீர் மூழ்கி நீரில் மூழ்கி’ என்ற நூலும், ‘இங்கேயும் ஒரு வெண்ணிலா’ என்ற இசையோடு கலந்த ஒலிவட்டும்…

கடிதம்

கி.சார்லஸ்வணக்கம்.திண்ணை இதழ் வாசித்தேன்.புதிய கவிஞர்களின் வரவு மகிழ்வளிக்கிறது.அறிவியல் பகுதியில் வாரா வாரம் புதிதாக ஒன்றினை தெரிந்துகொள்ள முடிகிறது.சிறுகதைகள் அனைத்துமே நல்ல தேர்வு.கட்டுரையில் நேசமுடன் வெங்கடேஷ் அசத்துகிறார். நன்றி. * கி.சார்லஸ் * காரப்பிடாகை நாகப்பட்டினம்(மாவட்டம்)…

மறைந்த கவிஞர் தீட்சண்யனின் (எஸ்.ரி.பிறேமராஜன்) தீட்சண்யம் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா

சந்திரவதனாமறைந்த கவிஞர் தீட்சண்யனின் (எஸ்.ரி.பிறேமராஜன்) தீட்சண்யம் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா காலம் - 22.11.2009 நேரம் - மாலை 16.30 ஆர்வலர்களை அன்புடன் அழைக்கிறோம். மேலதிக விபரங்களுக்கு Chandra Ravindran - 0044 7846946536…

திருப்பூரில் குறும்பட பயிற்சி முகாம்

ம‌த்திய‌ அரிமா ச‌ங்க‌ம்=================================== * டிசம்பர் 24 முதல் 27 வரை/திருப்பூர் முத்து மஹாலில் * கட்டணம் ரூ 1,700/ மட்டும் * சிறப்பு பயிற்சியாளர்கள்: இயக்குனர்கள் பாலு மகேந்திரா, கே ரங்க்ராஜ் (…

அறிவியலும் தொழில்நுட்பமும்

இந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.

சி. ஜெயபாரதன், B.E.(Hons),P.Eng (Nuclear), Canada“2001 ஆம் ஆண்டில் ஹைதிராபாத் டாடா அடிப்படை ஆராய்ச்சி ஆய்வகத்தில் (TIFR –Tata Institute of Fundamental Research) நாங்கள் 24 மைல் உயரத்தில் ஏவிய பலூனில் வாழும்…

இலக்கிய கட்டுரைகள்

சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது

சி. ஜெயபாரதன், கனடாஇது நமது பூமி! இது நமது வானம்! இது நமது நீர்வளம்! முப்பெரும் சூழ் வளத்தையும் துப்புரவு செய்வது, நமது பணி! இவ்விதம் பறைசாற்றித் தமிழகத்தின் செவியெல்லாம் இராப் பகலாய் முழக்கம்…

சூழ்வெளிக் கவிஞர் வைகைச் செல்வியின் கவிதைகள் நாற்பது (2)

சி. ஜெயபாரதன், கனடாஆண்டுகள் பலவாய் ஓடி ஓடி இறுதியில் (பதவி உயர்வென்னும்) அந்த ஏணியை அடைந்தேன்! கூரிய கற்களும் கொடிய முட்களும் குத்திக் கிழித்தும் (உயர்ச்சி நோக்கி ஆவலாய்) ஓடிய கால்கள் .! ஏணியின்…

என் எழுத்து அனுபவங்கள்

மதுபாலிகா ஹொளரா மதராசி பள்ளியில் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது (1956) சக மாணவர்களுக்கு கதை சொல்ல ஆரம்பித்தேன். சிறுகதையல்ல, தொடர்கதை. இன்றைய சீரியல்கள் போல முடியாத கதை. ஆனால் கேட்போருக்கு சுவாரஸ்யமாக இருந்திருக்க…

நூல் அறிமுகம்: ‘குறுந்தொகை’க்கு ஒரு புதிய உரை

வே.சபாநாயகம் மிகப் பழங்காலத்தில் எழுதப்பட்டும், தமிழரின் பெருமை பேசும் 'சங்க இலக்கியங் கள்' போன்ற நமது அரிய கருவூலங்களை இன்றும் நம்மால் படிக்க முடிவதால்தான் 'கன்னித்தமிழ்' என்று தமிழ்மொழி போற்றப்படுவதற்குக் காரணம் என்று ரசிகமணி…

கதைகள்

மீண்டும் துளிர்த்தது

சோ.சுப்புராஜ் ஜோஸ்யக் கிளியின் முன்னால் பரப்பப் பட்டிருக்கும் ராசிக் குறிப்புகள் போல, தனசேகருக்கு முன்னால் முப்பத்திரண்டு கடிதங்கள் சிதறிக் கிடந்தன. அவனுடைய நண்பர்கள் அவனுக்காகக் கொடுத்திருந்த நான்கு வரித் திருமண விளம்பரத்திற்கு வந்திருந்த கடிதங்கள்…

சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் அங்கம் -3 காட்சி -7

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர் & ஜி. எம். ஏ. குரூப் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 The Trial of Socrates "எங்கே மதிப்பு இருக்கிறதோ அங்கே…

வேத வனம் -விருட்சம் 59

எஸ்ஸார்சி நல்லவர்களைப் புவி மேல் கொணர்ந்து மானிடர்களை ஒற்றுமைப்படுத்தி விண்ணிற்கு வழி காட்டும் விசுவான் பெற்ற குமாரன் எமனே எம் தலைவன் மரணித்தவனே நீ அறிவாயோ சரனமையின் வாரிசாகி நான்கு கண்களுடன் புள்ளி த்தோலுடைய…

முள்பாதை 5

தெலுங்கில் யத்தனபூடி சுலோசனாராணி தமிழாக்கம் கௌரி கிருபாநந்தன்email id tkgowri@gmail.com இரவு அப்பா சொன்னதிலிருந்து எனக்கு கமலா அத்தையை, அவளுடைய குடும்பத்தை நேரில் போய் பார்க்கணும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. எந்த வசதிகளும் இல்லாத…

வங்கிக்கு வெளியேயும் உள்ளேயும் பெய்யும் மழை

கே.பாலமுருகன்1 மழைப் பொழுது. காரை நிறுத்திவிட்டு வங்கியின் திசை நோக்கி ஓடி வந்தவனின் கால்களில் ஈரம். உடலின் அசௌளகரிகங்களை வெளியே உதறி தள்ளிவிட்டு முன் கதவைத் தள்ளினான். வங்கியின் பணத்தை வெளியே துப்பும் இயந்திரங்கள்…

நுவல்

கமலாதேவி அரவிந்தன். சிங்கப்பூர்அழகிய ஒரு சின்னக்கூண்டை கையில் தூக்கிகொண்டு ,உள்ளே நுழையும் கணவரை வியந்துபோய் பார்த்தாள் ரேணு. அது ஒரு பறவைக்கூண்டு. அந்தக்கூண்டுக்குள் ஒரு பறவை இருந்தது. திடீரென்று எங்கிருந்து வந்தது இவருக்கு இந்த…

அம்ரிதா

க.ராஜம்ரஞ்சனி1 மீண்டும் ஒருமுறை தன்னைத் தானே நிலைக்கண்ணாடியில் பார்த்துக்கொண்டாள். அகன்ற நெற்றியில் சிவப்பு நிறம் குங்குமம். நெற்றி வகிட்டிலும் சிறிதளவு குங்குமம். அழகாய்தான் தெரிந்தாள். நாற்பது வயது ஆகிவிட்ட உடல் தன் அகவையை புறத்தோலின்…

கவிதைகள்

எனக்காக நீ கட்டுவதாய் சொன்ன சொர்க்கம்

ஹெச்.ஜி.ரசூல்மிரண்டுபோன தேர்ப்பாகனின் சாட்டைக் குச்சிகளிலும் பயம் தொற்றிக் கொண்டது. எனதுலகம் அரைவட்டமாய்ச் சுழல வானத்தின் துண்டொன்று பொடிந்து விழுந்தது பிளிறிய யானையின் தும்பிக்கையில் நானிருந்தேன் அது என்னை ஒரு தேங்காயாய் உடைத்துப் போட்டது. சிதறிக்கிடக்கும்…

மழையும்…..மறுக்கப்பட்ட நானும்………..

தினேசுவரிகனத்த மழை..... கண்ணாடி சாளரம் வழியே மழையைக் கண்டேன்..... மழைத்துளி கண்ணாடியில் தெரித்து.... கண்ணீராய் ஓடியது....... நான் அழுது முடித்ததை மழைத் தொடர்ந்தது..... இந்த கண்ணாடிக்குப் பின்னே வாழ்க்கையென நிர்ணயிக்கப்பட்டது யாரால்.......?? மழைக்கு மறுக்கப்பட்டது…

நகரத்துப் புறாவும், நானும்!

வ.ந.கிரிதரன்நள்ளிரவுப் பொழுதொன்றில் 'மான்ரியால்' பயணிப்பதற்காய் நிற்கிறேன் நான் நகரத்துப் பேரூந்து நிலையத்தே. நள்ளிரவில் படுத்துறங்கும் புள்ளொன்று என் முன்னே விரிந்திருந்த நகரத்துக் காங்ரீட் பரப்பொன்றின்மீது வந்தமர்ந்தது: மாடத்துப் புறா. ஊர் தூங்குமிரவில், நள்ளிரவில் சயனிக்கும்…

பயணம் சொல்லிப் போனவள்…

நாவிஷ் செந்தில்குமார்கழுத்துக் கீழே ஒரு முத்தம் இடுப்பினிரு பக்கமும் இரு முத்தம் முகத்தில் மொத்தம் மூன்றென முத்தம் வாங்கிப் போனாயடி… மொத்தமாய்ப் போகத்தானடி? பயணம் போவதாய்ச் சொன்னாயடி - சொல்லாமல் மயானம் போயிப் படுத்தாயடி…

இயல்பாய் இருப்பதில்..

செல்வராஜ் ஜெகதீசன் ஆண்களேதுமின்றி அழகிய பெண்ணொருத்தியோடு ஆறேழு மாடி வரை பயணிக்க நேர்ந்திருக்கிறது. இடைவிடாமல் பேசிக்கொண்டிருந்த இரண்டு பெண்களுக்கிடையிலும் இருக்க நேர்ந்திருக்கிறது எத்தனையோ முறை. முழுக்கவும் பெண்கள் சூழ மேற்கொண்ட பயணங்களுமுண்டு. ஆகக்கூடி வாய்த்த…

நான் மட்டும் இல்லையென்றால்

மன்னார் அமுதன்காலச் சக்கரத்தின் கோரைப் பற்களில் சிக்கி ஏதோவொரு மணித்துளியில் நானும் மாண்டு போவேன் என்றும் சுற்றும் பூமி சுற்றும் வெடித்த மொட்டு மலரும் அஸ்தமனத்தின் பின்னரான முன்னிரவில் நிலா முளைக்கும் அன்றும் நீரில்லா…

கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << நேற்றைய கூக்குரல் >> கவிதை -17 பாகம் -4

மூலம் : ஓவியக்கவி கலில் கிப்ரான் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா Fig. 1 Kahlil Gibran’s Paintings Kahlil’s Sister Marianna Gibran "வாழ்க்கையில் உள்ள ஒவ்வொன்றும் நற்பயனை அளிப்பதுதான். பொன்னைத்…

பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 60 << நமது பிரச்சனைகள் நீங்கும் >>

ஆங்கில மொழிபெயர்ப்பு : ஸ்டீ·பன் டாப்ஸ்காட் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஜனவரி மாதம் சிரமக் காலம் ! பகற் பொழுது கவலை யற்றுப் பகலவ னோடு கைகோர்க்கும் ! கிண்ணத்தில் இட்ட ஒயின்…

சந்தர்ப்பவாதிகள்

முத்துசாமி பழனியப்பன்வெள்ளச் சேதத்தை விமானத்திலிருந்தபடியே பார்வையிட்ட மக்களின் பிரதிநிதிகள் - வீதிவீதியாய்ப் போய் ஓட்டுக் கேட்டார்கள் கொட்டும் மழையில்!

கோரமுகம்

ப.மதியழகன், பொம்மை விளையாட்டு காதல் விளையாட்டு வியாபார விளையாட்டு மது விளையாட்டு மங்கை விளையாட்டு மழலை விளையாட்டு – என ஏதேனும் ஒரு போதை எந்நாளும் தேவைப்படுகிறது வாழ்க்கையின் கோரமுகத்தைக் காணச் சகிக்காமல் முகம்…