திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

20060526_Issue

அரசியலும் சமூகமும்

“தமிழர் மருத்துவமே வர்மக்கலை!” – சித்த-வர்ம மருத்துவர் மூலச்சல் த.இராஜேந்திரன் நேர்காணல்

அசுரன் ஆயுர்வேதத்தில் பட்டம் பெற்ற குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவரான நண்பர் ஒருவருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு நிகழ்வைச் சொன்னார். அதாவது, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் அரசு மருத்துவராகப்…

ஆய்வுக் கட்டுரை: பாதை மாறிய கொள்ளிடம்

கோ.தில்லை கோவிந்தராஜன் தமிழக வரலாற்றில் சிறப்பிக்கப்படும் புண்ணியநதிகளுள் சிறப்புப் பெற்றதுதான் காவேரி நதியாகும். இக்காவிரி நதியினை "காவிரி போற்றுதும் காவிரி போற்றுதும்" என்று சிலப்பதிகாரத்தில் கோவலன் கோலத்தை ஏடு எழுதிய காவியுடுத்திய காவலனாம் இளங்கோவடிகள்…

மார்க்ஸின் ஆவியுடனான உரையாடல்

செல்வன் மார்க்ஸ் இறந்த பின் அவரது கொள்கைகளை வழியெடுப்பது எங்கல்ஸுக்கு வேலையாய்போனது.மார்க்ஸின் எழுத்துகளை தேடி தொகுத்து டாஸ் கேபிடலின் இரண்டு வால்யூம்களை வெளியிட்டார்.அது போக "பியுயர் பாக் தீஸிஸ்" எனும் புத்தகத்தையும் வெளியிட்டார். மார்க்ஸியம்…

புலம் பெயர் வாழ்வு – 12 – ‘Free Man’ பட்டத்தோடு இருக்கும் தமிழர்கள்

இளைய அப்துல்லாஹ் அன்பு, அபிமானம் என்பது பொதுவானது. திரையில் வரும் நடிகர்கள் மீதான அபரிதமான அன்பை பலரிடம் பார்த்திருக்கிறோம். கண்ணுக்குள் வைத்து கொண்டாடுவார்கள். குறிப்பிட்ட வயது பெண் பிள்ளைகளுக்கு ‘விஜய்’ என்றால் அவ்வளவு ஆசை.…

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல்

குமரிமைந்தன் 1. அறிமுகம் தமிழகத்தில் திராவிடர் இயக்கம் தோன்றி வளர்ந்து மக்களிடம் செல்வாக்குப் பெற்று வந்த போது இங்கிருந்த “பொதுமை”யினர் அதனை வெறும் பண்பாட்டு இயக்கம் என ஒதுக்கித் தள்ளினர். தங்கள் கொச்சைப் பொருளிய(Economism)ச்…

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 5 : வியப்பில் வாழ்தல்

புதுவை ஞானம்கண்ணோட்டம் ______________ வெளியே பார்த்தனர் இருவர் சிறைச்சாலையின் கம்பிகளூடே ஒருவன் பார்வையில் சேறும் சகதியும் மற்றவன் பார்வையில் நிலவும் தாரகையும். பார்க்கும் தோரணையில் தான் அழகும் அசிங்கமும் உற்சாகமும் சலிப்பும் அசட்டையும் படைப்பாற்றலும்.…

நான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும், மாப்பிள்ளைமார் கலகம் பற்றி

மலர் மன்னன் !921ல் நடந்த மாப்பிள்ளைமார் கலவரம் சுரண்டலை எதிர்த்துப் பொங்கியெழுந்த பாட்டாளி வர்க்கப் போராட்டந்தான் என்றும், உழவுத் தொழில் செய்த முகமதியரான மாப்பிள்ளைமாருடன் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் கூலிகளான தாழ்த்தப்பட்ட மக்களும்…

இட ஒதுக்கீடு: எதிர்க்க வேண்டியவர்கள் தலித்துகளும் வனவாசிகளும்

மலர் மன்னன் ஐம்பதுஅறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையே இப்போதும் நீடிப்பதுபோல் பாசாங்கு செய்து, கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அவசியம் என்று பிடிவாதம் செய்வது காலப் போக்கில் இட ஒதுக்கீடு என்பது ஒரு…

அறிவிப்புகள்

கடிதம்

ரத்தினவேலுசேதுபதிகளின் தானங்கள்- சில வரலாற்றுக்குறிப்புகள் கற்பக விநாயகம் //முருகாயி எனும் பெண் கொடை கொடுத்து சிறையெடுக்கப்பட்ட சேதி துவாக்குடி செப்பேட்டிலும் பதிவாகியுள்ளன. இதே சேதுபதி மன்னர் ஆலங்குளத்தில் மொக்குபுலித்தேவன் மகள் அழகிய நல்லாளை 20…

கடிதம்

நேச குமார்திண்ணை ஆசிரியருக்கு, கடந்த இருவாரங்களில் சிலர் திண்ணையில் அதிகமாக மதம்/இஸ்லாம் சம்பந்தப்பட்ட விஷயங்கள் வருவது குறித்து குறைபட்டுக் கொண்டுள்ளார்கள். இவற்றில் குறிப்பாக ஜடாயுவின் கடிதத்துக்கு பதிலாக சில விஷயங்களை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.…

அறிவு ஜீவிகள்………?!

ஹமீது ஜா·பர். "பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்" என்று அவர்களிடம் கூறப்படும்போது "நாங்கள் சீர்திருத்தம்செய்வோரே" என்று கூறுகின்றனர். (அல் குர்ஆன் 2: 11) பெட்ரோல் வளம் மிகுந்த அரேபிய வளைகுடா நாடுகளில் வேலைத் தேடி வரும்…

கடிதம்

தங்கவேல்நக்கீரனனின் கட்டுரை ஒரு தற்காப்புக்கான வழியே தவிர வேறொன்றும் இல்லை. ஆம். தாய் மொழி தமிழாக உள்ள ஒருவனே தமிழன். மற்றவர் தமிழர் அல்ல என்பது எனது வாதம் இல்லை. உண்மை. இது நாள்…

கடிதம்

K.ரவி ஸ்ரீநிவாஸ்திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, மறையும் மறையவர்கள்: கோயிலைச் சூழும் அரசியல் என்ற தலைப்பில் எஸ். இராமச்சந்திரன் எழுதியுள்ள கட்டுரை சில கேள்விகளை எழுப்புகிறது. கடந்த காலச் சான்றுகள் சிலவற்றைப் புரிந்து கொள்ள உதவும்.…

ஓட்டைப் பானைகளில் ஊற்றப்பட்ட தண்ணீர்

ஹெச்.ஜி.ரசூல் திண்ணைவாசகர்கள் மற்றும் வகாபியகொள்கையில் நுழைந்தவர்களுக்கு வகாபிசத்தை தோற்றுவித்த முகமது இப்னு அப்துல் வகாப் பற்றியும் இப்னுசவுது அரசோடு சேர்ந்து அவர் இஸ்லாத்தின் பெயரால் நடத்திய அட்டூழியங்கள் பற்றியும் தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு. இந்த…

அக்ஷ்ய திருதியை

புதுவை ஞானம் அன்புள்ள ஆசிரியருக்கு ! வணக்கம். அக்ஷ்ய திருதியை பற்றிய அற்புதமானதொரு ஆய்வுக் கட்டுரை எழுதிய நண்பர் திரு.ராமச்சந்திரன் பாராட்டுக்குரியவர் தனது திறமைமிகு ஆய்வுக்காக, அதே சமயம் போற்றுதலுக்குரியவர் தனது கலாச்சார அர்ப்பணிப்பு…

கடிதம்

அசுரன்அன்புடன் திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு, வணக்கம். நலம். கடந்த 6 மாதகாலமாக இணையத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. 5 மாதகாலமாக குமரி மாவட்டத்தில் தக்கலையிலுள்ள ஒரு சித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த ஒரு…

அறிவியலும் தொழில்நுட்பமும்

பூநீறு: சித்த மருத்துவத்தின் பெருமிதம்

மருத்துவர் செ. எலிசா பி.எஸ்.எம்.எஸ்., பி.எச்.டி., நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து சித்தர்கள் பின்பற்றி வந்த, மரபு வழியில் பயன்பட்டு வந்திருக்கும் ‘பூநீறு’ என்னும் சித்த மருத்துவத்தைச் சார்ந்த மருந்து பலவேறுபட்ட பெயர்களில் வழங்கப்பட்டு வந்திருக்கிறது. சித்த…

செர்நோபில் அணுமின் உலை விபத்தின் காரணங்கள் -5

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடாகதிர்வீச்சு சிந்தும் கருமுகில் அடியில், அதிர்ந்து போய் அவநம்பிக்கை பெருகி உதிர்ந்து கருகும் மாந்தர்க்கு ஊக்கமும், உதவியும் அளிப்பீர்! மேலிருந்து பொழியும் கதிர் மழையை நீக்கி யார்தான்…

இலக்கிய கட்டுரைகள்

கடித இலக்கியம் – 6

வே.சபாநாயகம் நாகராஜம்பட்டி 28-5-76. அன்புமிக்க சபா அவர்களுக்கு, வணக்கம். தம்பிக்கு நேர்ந்த துக்கத்தை இங்கு அனைவரும் பகிர்ந்துகொண்டோம். வீட்டில் அம்மா, பெரியம்மா போன்றவர்கள் மிகவும் பரிதபித்தார்கள். துக்கங்களின் எதிரே நான் வாயடைத்து நின்றுவிடுவது வழக்கம்.…

நரசய்யாவின் ” கடல்வழி வணிகம் ” : மகிழ்வூட்டும் ஒரு சிறப்பான வரவு

வெங்கட் சாமிநாதன் கடல் வழி வணிகம் போன்ற ஒரு புத்தகம் வந்து அது பலர் பார்வைக்குப் பட்டிருக்கிறது என்றால், இருண்ட மேகங்களிடையேயும் கூட ஒரு மின்னல் கீற்று பளிச்சிடுவது போல்தான் எனச் சொல்லத்தோன்றுகிறது எனக்கு.…

அரவாணிகளின் முதல் வாழ்க்கை ஆவணம்

தேவமைந்தன் ரேவதி அவர்கள் ஏற்கனவே சென்னையில் அரங்க நிகழ்ச்சிகள்(stage arts) வடிவில் காட்சி வெளிப்பாடாக உணர்த்தியுள்ளதாகக் கேள்விப்பட்டிருந்த அரவாணிகளின் வாழ்க்கைக் கதைகளை ‘உணர்வும் உருவமும்’ என்ற நூல் வடிவில் வாசிக்கும் வாய்ப்பை எல்லோருக்கும் நல்கிய…

ஆராய்ச்சிப் பேரறிஞர் மயிலை சீனி.வேங்கடசாமியின் வாழ்வும் பணியும்

க.துரையரசன் “தமிழையே வணிகமாக்கித் தன்வீடும் மக்கள் சுற்றம் தமிழிலே பிழைப்பதற்கும் தலைமுறை தலைமுறைக்குத் தமிழ் முதலாக்கிக் கொண்ட பல்கலைத் தலைவன் எல்லாம் தமிழ்ச் சீனி வேங்கடத்தின் கால்தூசும் பெறாதார் என்பேன்” (தமிழ் நிலம் -…

மரணத்தை விடக் கொடிய வேதனை உலகில் இருக்குமோ..?

சந்திரவதனா மரணம் என்ற சொல்லே மரித்து விட வேண்டுமென்றுதான் மனித மனம் ஆசைப் படும். மரணத்தை விடக் கொடிய வேதனை உலகில் இருக்குமோ..? மரணிப்பவர் எல்லாத் துன்பங்களில் இருந்தும் விடுதலை பெற்று விடுவார். ஆனால்…

கதைகள்

எகிப்தின் எழிலரசி கிளியோபாத்ரா (பேரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-2)

சி. ஜெயபாரதன், கனடா வயது ஏறினும் வதங்காது அவள் மேனி! வழக்க மரபுகளால் குலையாது அவளின் வரம்பிலா விதவித வனப்பு மாறுபாடு! அவளது உடல் வனப்பை விளக்கிடப் போனால், எவரும் எழுத இயாலாது வர்ணித்து!…

மறுபடியும் ஒரு மகாபாரதம் அத்தியாயம் – 22

ஜோதிர்லதா கிரிஜா பொல பொலவென்று உதிர்ந்த பங்கஜத்தின் கண்ணீரைப் பார்த்ததும் சாமிநாதனின் நண்பர்கள் பதறிப்போனார்கள். “பயப்படாதங்கோ, மிஸஸ் சாமிநாதன்! உங்க பங்குக்கு உண்டான அச்சடிக்கிற மெஷினோட விலையை நாங்க உங்ககிட்ட குடுத்துட்றோம். அதுக்கு ஒரு…

குறுநாவல்: சேர்ந்து வாழலாம், வா! – 4

ரெ.கார்த்திகேசு இரவு புழுக்கமானதாக இருந்தது. வெளிப் புழுக்கத்தை ஏர் கண்டிஷன் குறைத்தாலும் மனப் புழுக்கத்தைக் குறைக்க முடியவில்லை. நாளைக்குப உமாவைப் பார்க்கும்போது பழைய மாதிரியே பார்க்க முடியுமா என்று தெரியவில்லை. அவளுக்காக உள்ளத்தில் இருந்த…

ஐயம், சந்தேகம், அயிர்ப்பு (இலக்கிய நாடகம் – பகுதி 7)

கரு.திருவரசு காட்சி - 10 காட்சியில் வருவோர்: அமைச்சர் சீநக்கர், அவர் மனைவி, பொய்யாமொழிப் புலவர். காட்சி நிகழும் இடம். அமைச்சர் சீநக்கரின் வளமனையில் அவர் படுக்கை அறை. காட்சிநிலை. பொய்யாமொழிப்புலவர் படுக்கையில் அமர்ந்து…

வானமே கூரை.

விழியன் "எனக்கு கல்யாணம்.. எனக்கு கல்யாணம்" என்கின்ற பாணியில் ஊரை சுற்றி வருவார்கள் என்றே மனநலம் குன்றியவர்களை நமக்கு முன்னர் சினிமா காட்டியுள்ளது. இந்திரன் அப்படிப்பட்டவன் இல்லை.அமைதியே உருவானவன்.ஏன் இப்படி ஆனான்..யாருக்கும் தெரியாது. அவனுக்கும்…

தனிமரம் நாளை தோப்பாகும் – 4

எஸ். ஷங்கரநாராயணன் முழுவதும் விரிவடைந்துவிட்ட பலூன் போல இரவு உருப்பெருகித் திணறியது. மீண்டும் காற்றைப் பிடுங்கி ஆசுவாசப் படுகிற ஒரு பின்னரவின் துவக்கம். அவன் அந்நேரம் வரையிலும் தூங்காமல், தூங்க முடியாமல் கிடந்தான். அறைக்குள்…

கலைகள்

கவிதைகள்

கீதாஞ்சலி (74) ஆத்மாவின் கருவில் உறைபவன்.

தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா அது அவனேதான்! ஆத்மாவின் உட்கருவுக் குள்ளே உறைபவன்! கரத்தால் என்னை ஆழத்தில் தொட்டெழுப்பி விழிக்க வைப்பவன், அனுதினமும். அது அவனேதான்! எந்தன் இரண்டு விழிகளுக்கும் மந்திர சக்தி யூட்டுபவன்!…

கயிறெடுத்தான் உயிரெடுக்க

கவிஞர் புகாரி உயிரின் முடிச்சவிழ்க்க கயிற்றில் முடிச்சிட்டான் சாவைத் தேர்வு செய்ய வாழ்வே விரட்டுகிறது தேர்வுதானே வாழ்க்கை சாவென்பதும் வாழ்வென்ற அறிதலோடுதான் கயிறெடுத்தான் உயிரெடுக்க இவனைத் தடுக்கும் மார்க்கமுண்டா உங்களிடம் பாவச் செயல் கோழையின்…

நெருப்பு நெருப்பு

டீன்கபூர் இன்னும் சாம்பலாகவில்லை. என் குழந்தைகள் அப்பம் சுட்டு விளையாட. ஆயிரம் வீடுகள் எரிந்தபோதும் சூரியன் அழுதான் மிஞ்சியதாக. என் தலையில் உமிழ்ந்த நெருப்புத் தணல். என் கிராமத்தின் மூலையில் பழுத்த ஒரு ஓலையையும்…

பெரியபுராணம் – 89 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி

பா.சத்தியமோகன் 2486. அரிய வேதங்களும் அவற்றின் வழிவந்தவைகளும் அகன்ற பெரிய வானில் ஆரவாரித்து பெருமையுடன் முழங்க ஐந்து துந்துபிகள் எனும்தேவ வாத்தியங்கள் முழங்க செழுமையான அந்நகரம் விழா எடுக்க பெருந்தகையினரான அவ்விரு பெரியோர்களும் எதிர்…

யாருமற்ற கடற்கரை

ஹெச்.ஜி.ரசூல் நீயும் நானும் கட்டிவிளையாடிய மணல்வீடு கலைத்துப் போட்ட அலைகளுக்கு மனசில்லை * திடீரென பேரலை ஒன்று அதிர்ச்சியூட்டி உன்னை இடுப்பளவு நனைத்துச் சென்றபோது கடற்கரையே குலுங்கும்படி வாய் விட்டு சிரித்தாய் நானோ நனைந்தவாறு…

புன்னகையின் பயணம்…

த.அகிலன் சூரியன் தன் ரகசியங்களோடு நுழைகின்றான் எங்கும் விசாரணைகள் ஏதுமின்றி எங்கும் நிரம்பிவழிகிறது சூரியனின் ரகசியங்கள் காற்றுக்குக் கேள்விகளுமில்லை வேலிகளுமில்லை…. என்னுடையதும் உன்னுடையதும் கனவுகளுக்கும் கூட ரகசியம் கிடையா எனது முற்றத்தில் விழுகிறது பச்சை…

நகைச்சுவை

வளர்ந்த குதிரை (4)

கிருஷ்ணகுமார் வெங்கட்ராமா பஜாஜ் சேடக் என்ற ஸ்கூட்டர் கூட நன்றாக உழைக்கும் தான். ஸ்கூட்டர் இருக்க ராணாவின் குதிரை நமக்கெதுக்கு ?. பள்ளங்கள் உள்ள ரோடுகளில், மண்மேடுகளில் பாய “சேடக் ஒன்று போதுமே !…

லெமூரியா கொண்ட கலைஞர்

செல்வன் பாண்டியன் கலைஞரை சந்திக்கபோனபோது அவர் மிகவும் உற்சாகமாக இருந்தார்."வாய்யா.பாண்டியா.என்ன ரொம்ப நாளா காணோம்?" என அன்போடு கேட்டார். "ஆயிரம் சொன்னாலும் உங்க ராசியே ராசிங்க.அஞ்சாவது தரம் ஜெயிச்சுட்டீங்க.மெஜாரிடி இல்லை,அது இல்லைனு என்ன சொன்னாலும்…