கவிஞர் கே. ஆர் திருத்துவராஜாவுக்கு பாராட்டு
பதிவு – சு. குணேஸ்வரன்

மரபுக்கவிதையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட திருத்துவராஜா சமூக மேம்பாடு குறித்த கவிதைகளுடன் 50 ற்கு மேற்பட்ட வாழ்த்துப்பாக்களையும் நூற்றுக்கு மேற்பட்ட சரம கவிகளையும் இயற்றியுள்ளார். அதுமட்டுமல்லாமல் சிறுவர்பாடல்களையும் ஆலயம்சார் பாடல்களையும் இயற்றியுள்ளார். இவரின் சில பாடல்கள் ஒலிப்பேழையாகவும் உள்ளன. பிரதேச ரீதியாக நடத்தப்பட்ட கவிதைப் போட்டிகளில் பரிசில்களையும் சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்கான பிரதேச கீதத்தை இயற்றியமை இவரின் சிறப்புக்களில் ஒன்றாக விளங்குகின்றது. சமூக மேம்பாடு குறித்த பல செயற்பாடுகளில் தொடர்ந்து பங்காற்றி வருபவர்.
இவ்வாறான சிறப்புக்களைப் பெற்ற கே. ஆர் திருத்துவராஜாவைப் பாராட்டிக் கெளரவிப்பதற்கு ஒரு சந்தர்ப்பமாக இந்நிகழ்வை ஒழுங்குசெய்தவர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
இந்நிகழ்வு 10.03.2010 வெள்ளிக்கிழமை மட்டுவில் அ.த.க. பாடசாலை மண்டபத்தில் அப்பாடசாலையின் அதிபர் திரு த. கிருஸ்ணன் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் வரவேற்புரையினை பொதுச்சுகாதாரப் பரிசோதகர் பி. தளிர்ராஜா நிகழ்த்தினார். ஆசியுரையை சாவகச்சேரி பங்குத்தந்தை வணபிதா தயாபரன் அவர்கள் நிகழ்த்தினார்.
வாழ்த்துரைகளை மிருசுவில் பங்குத்தந்தை வணபிதா ம. பத்திநாதர் அவர்களும், ஓய்வுபெற்ற அதிபர் கி. கணேசன், ஓய்வுநிலை ப.அ.ச. உத்தியோகத்தர் திருமதி செல்லக்கிளி சின்னத்தம்பி ஆகியோர் நிகழ்த்தினர். சுதந்திரபுரம் ஸ்கந்தவரோதய மகாவித்தியாலய அதிபர் மு. பாலசுப்பிரமணியத்தின் வாழ்த்துச் செய்தியை திருமதி கு. குலம் வாசித்தார்.
நிகழ்வில் விழாநாயகனைக் கெளவிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. விழாவுக்கு வந்திருந்த உறவுகளும் இலக்கிய நண்பர்களும் பொன்னாடைபோர்த்தி, மாலையிட்டு, நினைவுப் பொருட்கள் வழங்கி தங்கள் அன்பைத் தெரிவித்தனர்.
தொடர்ந்து பாராட்டுரைகள் இடம்பெற்றன. பாராட்டுரைகளை சாவகச்சேரி பிரதேசசபைச் செயலர் வே. சிவராஜலிங்கம், மட்டுவில் கிராம அலுவலர் க. வாமதேவன், ஓய்வுபெற்ற அதிபர் செ. சதானந்தன், மட்டுவில் மோகனதாஸ் ச.ச.நிலையத் தலைவர் சி. றதீஷன் ஆகியோர் நிகழ்த்தினர். விழாவில் பாராட்டுக் கவிதைகளை திரு சந்தியாம்பிள்ளை, திருமதி ரூபா குறூஸ் (டென்மார்க்), செல்வன் வசந்தன் ஆகியோர் நிகழ்த்தினர். நிகழ்வில் நன்றியுரையை விழா ஏற்பாட்டாளராகிய திருமதி புஸ்பராணி லியோன் அவர்கள் நிகழ்த்தினார்.
மிக எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்ற நிகழ்வில் கவிஞர் கே.ஆர் திருத்துவராஜாவின் கவிதைகள் விரைவில் தொகுப்பு வடிவமாக்கப்படவேண்டும் என்ற கருத்து பலராலும் முன்வைக்கப்பட்டது. மற்றவர்களின் உயர்வினைக் கண்டு மனம் மகிழ்ந்து நேரில் சென்று பாராட்டும் அவரின் உயர்ந்த பண்பினையும் மிக எளிமையாகவும் இயல்பாகவும் எந்தப் பூச்சுக்களுமின்றி சமூகத்துடன் பழகும் திருத்துவராஜாவின் இயல்பினையும் பேச்சாளர்கள் எடுத்துக் கூறினர்.
பதிவு:- சு. குணேஸ்வரன்
- இசட் பிளஸ்
- எரியாத முலைகள்
- மறுபடியும் அண்ணா
- கோகெய்ன்
- உவமையும் பொருளும் – 1
- யெளவனம்
- அப்பனே அப்பனே; பிள்ளையார் அப்பனே!!
- இவர்களது எழுத்துமுறை – 5 பாரப்புரத்து (மலையாள எழுத்தாளர்)
- காக்கி உடை காவலர்கள் தங்களைவிட உயரமான தடிகளோடு மல்லுக்கு நிற்பதை நிறுத்தி உழைப்புதான திட்டத்தை அமல்படுத்துவோம்.
- காதுள்ளோர் கேட்கட்டும்
- இரண்டு கவிதைகள்
- தாணிமரத்துச் சாத்தான்…..!
- வனச்சிறுவனின் அந்தகன்
- கடிவாளம்
- சும்மாக் கிடந்த சங்கு
- ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் -மொழிபெயர்ப்புக் கவிதை
- குற்றமிழைத்தவனொருவன்
- மேட்ரிக்ஸ் தமிழில்
- பிரான்சு ஸ்ட்ராஸ்பூரில்…. “சொல் புதிது” இலக்கிய குழுவின் இலக்கிய ஞாயிறு
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) கவிதை -18 பூமியின் கூக்குரல்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)கவிதை -33 பாகம் -4 நமது பூமி
- முள்பாதை 46
- பார்சலோனா -3
- மொழிவது சுகம் : பெண்களின் மகத்தான சக்தியை ஆண்களுக்குணர்த்துவதே எனது எழுத்தின் நோக்கம் – மரி தியய்
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் அங்கம் -1 காட்சி -12
- அண்ணா மீது கவி பாடிய திருலோக சீதாராம்
- துப்பாக்கியால் சுட்டுவீழ்த்தப்பட்ட மய்யித்துகளுக்கான ஜனாஸா குறிப்பு
- குவைத்தில் ரமாலான் சிறப்பு மாதாந்திர இலக்கிய நிகழ்வு
- MARUPAKKAM And National Folklore Support Centre Jointly organizes Monthly screening of Documentaries and Short films
- பெண்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்காக அமெரிக்கத் தமிழ் மருத்துவர்கள் மாநாட்டில் அற நலதிட்டங்கள் அறிவிப்பு
- கவிஞர் கே. ஆர் திருத்துவராஜாவுக்கு பாராட்டு
- தமிழ் ஸ்டுடியோ.காம் நடத்தும் 24வது குறும்பட வட்டம் (பதிவு எண்: 475/2009)
- முள்பாதை = வாசகர் கடிதம்
- பரிமளவல்லி – 11. சன்டோகு கத்தி
- தந்தையும் தாயுமான அதிபர்.
- திலகபாமாவின் கழுவேற்றப்பட்ட மீன்கள் – நாவல் விமர்சன விழா
- சந்திரனைச் சுற்றித் தளத்தில் இறங்கப் போகும் இரண்டாவது இந்தியத் துணைக்கோள் சந்திரயான் -2 (கட்டுரை : 5)