வேலிகளைத் தாண்டும் வேர்கள் -கவிதை நூல் வெளியீட்டு விழா.

This entry is part [part not set] of 26 in the series 20100212_Issue


படிகள் பதிப்பகத்தின் வெளியீடான "வேலிகளை தாண்டும் வேர்கள்" அனுராதபுர மாவட்ட கவிஞர்களின் கவிதைகள் அடங்கிய கவிதை நூலின் வெளியீட்டு விழாவானது எதிர் வரும் 21 -02 -2010
ஞாயற்று கிழமை மாலை 04 , 30 மணிக்கு தேசிய கலை இலக்கிய பேரவை கேட்போர் கூடத்தில் கவிஞர் மேமன் கவியின் தலைமையில் நடைபெறவுள்ளது.
நிகழ்வின் பிரதம அதிதியாக உயர் நீதி மன்ற சட்டத்தரணி என்.எம்.சஹீத் கலந்து கொள்ளும் இந்நிகழ்வின்
முதற் பிரதியை இலக்கிய புரவலர் ஹாசிம் உமர் பெற்றுக்கொள்வார்கள்.
நூலின் விமர்சன உரையை எழுத்தாளர்களான திருமதி பத்மா சோமகாந்தன் மற்றும் அஸ்ரப் சிஹாப்தீன் ஆகியோர் நிகழ்த்த உள்ளனர்.நிகழ்வின் வாழ்த்துரையை மல்லிகை ஆசிரியர் திரு டொமினிக் ஜீவாவும், ஏற்புரையை நாச்சியாதீவு பர்வீனும் நிகழ்த்துவார்கள். நாச்சியாதீவு பர்வீன், எல்.வசீம் அக்ரம் ஆகியோரை தொகுப்பாசிரியர்களாக கொண்ட இந்த கவித்தொகுதியில் அன்பு ஜவஹர்சா, பேனா மனோகரன், கெகிராவ சஹானா, கெகிராவ சுலைஹா, எம்.சி.றஸ்மின், நாச்சியாதீவு பர்வீன், எல்.வசீம் அக்ரம், அனுராதபுரம் ரஹ்மத்துல்லாஹ், அனுராதபுரம் சமான் ஆகிய மூத்த, இளைய படைப்பாளிகளின் கவிதைகள் இடம் பெற்றுள்ளன.

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு