அறிவியலும் அரையவியலும் -2

This entry is part [part not set] of 41 in the series 20091009_Issue

வஹ்ஹாபி


கடந்த 20 செப்டம்பர் 2009 திண்ணை இதழில், “அறிவியல் புத்தகங்கள் அடிப்படையில் அல் குர்ஆனுக்கு தஃப்ஸீர் எழுதுவது சரியானதா?” எனும் கட்டுரை ஒன்று அப்துல் அஸீஸ் என்ற பெயரில் வெளியாகி இருந்தது [சுட்டி-1]. அதற்கு எதிரிவினையாகக் கடந்த வாரம், “அறிவியலும் அரையவியலும்” எனும் தலைப்பில் அவருக்கு மறுப்புத் தெரிவித்திருந்தேன் [சுட்டி-2].
கட்டுரையாளர் அப்துல் அஸீஸுடைய பார்வையில் முதல் குற்றவாளியான டாக்டர் மாரிஸ் புகைல் விசாரிக்கப் பட்டுவிட்டதால் இரண்டாவது குற்றவாளியான புவியியல் முனைவர், பேரா. ஸக்லூல் ராகிப் முஹம்மது அல்-நஜ்ஜாரை [சுட்டி-3] இந்த வாரம் திண்ணைக் கூண்டில் ஏற்றுவோம்.
“பூமி சுழன்று கொண்டும் சூரியனைச் சுற்றிக் கொண்டும் இருக்கிறது; அதனால்தான் இரவு-பகல் ஏற்படுகிறது” என்று அல்-நஜ்ஜார் கூறும் “காஃபிர் (!) கருத்தை” விசாரிப்பதற்கு முன்னர் சூரியன், சந்திரன், இரவு, பகல் குறித்து இறைமறை குர்ஆன் என்ன கூறுகிறது என்பதைப் பார்த்துவிட வேண்டியுள்ளது. ஏனெனில் அது தெரியா விட்டால் அல்-நஜ்ஜார், தன் விருப்பத்திற்கு ஏற்ப விஞ்ஞானக் கருத்துகளைக் கூறுகிறாரா? அல்லது குர்ஆன் கூறுவதை ஆய்ந்து விளக்குகிறாரா? என்பது நமக்குத் தெளிவாகாது.
சூரியனும் சந்திரனும்
“சூரியன், தனக்கு விதிக்கப் பட்ட காலம்வரை அதற்கென வரையறை செய்யப் பட்ட வழியில் ஓடிக் கொண்டிருக்கிறது …” And the sun runs on its fixed course for a term (appointed) ….;
“மேலும் உலர்ந்து வளைந்த பழைய ஈச்சைமட்டையைப் போல் மீளும்வரை சந்திரனுக்கு நாம் பல படிநிலைகளை ஏற்படுத்தி இருக்கிறோம்” And the moon, We have decreed for it stages, till it returns like the old dried curved date stalk;
“சூரியன், சந்திரனை எட்ட முடியாது. இரவு, பகலை முந்த முடியாது. அனைத்தும் (வரையறை செய்யப் பட்ட) தம் வழிகளில் நீந்திச் செல்கின்றன” [036:038-040] It is not for the sun to overtake the moon, nor does the night outstrip the day. They all float, each in an orbit [சுட்டி-4].
“இரவுவையும் பகலையும் சூரியனையும் சந்திரனையும் அவன்தான் படைத்தான். அவை ஒவ்வொன்றும் தம் வரையறை வழிகளில் நீந்திச் செல்கின்றன” [021:33] (and the sun and the moon,) the sun with its own light and its own path and orbit and allotted time, and the moon which shines with a different light and travels on a different path and has its own allotted time [சுட்டி-5].
நமது சூரியக் குடும்பத்தில், இரவு-பகல் மாறிமாறி வரும் பூமி உட்பட அனைத்தும் நீந்திக் கொண்டிருக்கின்றன. அதாவது தனது குடும்பத்தைச் சேர்ந்த அனைத்தையும் சூரியன் இழுத்துக் கொண்டு எங்கோ சென்று கொண்டு இருக்கிறது என்றும் அனைத்துக்கும் விதிக்கப் பட்டுள்ள காலம்வரை இந்த ‘இழுவை இயக்கம்’ நிற்காது என்றும் விளங்குகிறது. பால்வளிப் பயணம் எனும் இந்த இழுவை இயக்கத்துக்கு உள்ளேயே சூரியன், சந்திரன், பூமி ஆகிய அனைத்தும் தன்னுள் சுழன்று கொண்டும் இன்னொன்றைச் சுற்றிக் கொண்டுமிருப்பதன் அடிப்படையின்தான் நாள், மாதம், ஆண்டுகளை நாம் கணக்கிடுகிறோம். இரவும் பகலும் பிறையும் கிரகணங்களும் சுழற்சி-சுற்றல்களால் ஏற்படுபவையே.
அப்துல் அஸீஸ் என்ற பெயரில் எழுதிய கட்டுரையாளர், “பாம்பு கவ்விக் கொள்வதால் கிரகணம் ஏற்படுகிறது” எனும் பாட்டிக் கதையை இஸ்லாத்தோடு இணைத்து எழுதாதது ஆறுதல் அளிக்கிறது!.
கிரகணம்
நபிகள் நாயம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகன் இபுறாஹீம் எனும் பாலகன் இறந்த நாளில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. “அல்லாஹ்வின் தூதரின் மகனது இறப்புக்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டிருக்கிறது” என்று மக்கள் பேசிக் கொண்டார்கள். தன் பாலகனை இழந்திருந்த அந்த வேளையிலும் மக்கள் பேச்சை மறுத்து, அதைத் திருத்தும் விதமாக, “சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் இரு சான்றுகளாகும். எவருடைய பிறப்புக்காகவோ இறப்புக்காகவோ அவை ஏற்படுவதில்லை. எனவே, நீங்கள் கிரகணத்தைக் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அது விலகும்வரை தொழுங்கள்” என்று நபிகள் நாயகம் கூறினார்கள் [புகாரீ 1060].
“இரவும் பகலும் சூரியனும் சந்திரனும் அவனுடைய படைப்பாற்றலுக்கான சான்றுகளாகும். எனவே, நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை வணங்குபவர்களாயின் சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஸுஜூது செய்ய வேண்டாம். அவற்றைப் படைத்தவனான அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்யுங்கள்” [041:37] And from among His signs are the night and the day, and the sun and the moon means, He created the night with its darkness and the day with its light, and they alternate without ceasing. And He created the sun with its shining light, and the moon with its reflected light. and He allotted their stages and gave them separate orbits in the heavens, so that by the variations in their movements man may know the stages of night and day, of weeks, months and years, and time periods related to people’s rights, acts of worship and various transactions. Moreover, because the sun and moon are the most beautiful of the heavenly bodies that can be seen in both the upper and lower realms, Allah points out that they are created entities which are in a state of enthrallment to Him, subject to His dominion and control. (Do not prostrate yourselves to the sun nor to the moon, but prostrate yourselves to Allah Who created them, if you (really) worship Him.) meaning, `do not associate anything in worship with Him, for your worship of Him will be of no benefit to you if you worship others alongside Him, because He does not forgive the association of others in worship with Him [சுட்டி-6].
இரவும் பகலும்
“திண்ணமாக அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான்; பகலை இரவில் புகுத்துகிறான் …” [031:029] See you not that Allah merges the night into the day, and merges the day into the night … [சுட்டி-7].
“… அவன்தான் பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான் …” [039:005] He makes the night to go in the day and makes the day to go in the night.) means, He has subjugated them and He causes them to alternate without ceasing, each seeking the other rapidly [சுட்டி-8].
“… அவன்தான் இரவைக் கொண்டு பகலை மூடுகிறான்; பகலைக் கொண்டு இரவை மூடுகிறான் …” [007:054] He brings the night as a cover over the day, seeking it rapidly, meaning, the darkness goes away with the light, and the light goes away with the darkness. Each of them seeks the other rapidly, and does not come late, for when this vanishes, the other comes, and vice versa [சுட்டி-9].
“… சந்திரனின் மீதாணை! பின்வாங்கிச் செல்லும் இரவின் மீதாணை! (அதனால்) வெளிச்சம் பெறும் விடிகாலை மீதாணை! …” [074:32-34] … And by the moon. And by the night when it withdraws And by the dawn when it brightens.) [சுட்டி-10].
மேற்காணும் வசனங்களில் உள்ள, “புகுத்துவது”, “சுருட்டுவது”, “மூடுவது” ஆகிய சொற்கள் ஆழ்ந்து நோக்கத் தக்கன. ஏனெனில் அவைதாம் இரவு-பகல் எவ்வாறு ஏற்படுகின்றன என்பதைத் தெளிவு படுத்துகின்றன.
பகலாக இருக்கும் இடத்தை இரவு மறைத்தாலே அந்த இடம் இரவாக மாறும். எனவே, பகலாக இருக்கும் இடத்தை இரவாக மாற்றுவதற்காக அப்பகலை இரவு மறைத்தல் வேண்டும்.
கட்டுரையாளரின் கருத்துப்படி, சூரியன் பூமியைச் சுற்றுவது என்றால் அதன் ஒளி முழுமையும் சேர்ந்து பூமியைச் சுற்ற வேண்டும். சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் பகல் நகர்ந்த இடத்தை இரவும் இரவு நகர்ந்த இடத்தைப் பகலும் பிடித்துக் கொள்ளும்.
சூரியன் பூமியைச் சுற்றி வருமானால் பூமியின் மீது விழுந்து நகரும் அதனுடைய ஒளி பூமியின் மீதும் அதற்கு வெளியிலும் நகரும். அவ்வாறு சூரிய ஒளி நகர்ந்தால் அந்த ஒளியைப் பின்பற்றி இருளும் நகரும். ஒளி நகரும் வேகத்தில் ஒளியைப் பின்பற்றி இருளும் நகரும். எனவே சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் ஒளியும், இருளும் ஒன்றைப் பின்பற்றி மற்றொன்று சம வேகத்தில் நகர்ந்து கொண்டே செல்வதால் அவ்விரண்டும் ஒன்றையொன்று சுருட்டாது.
ஆனால், பகலுக்குள் இரவு புகவேண்டுமென்றால் பகல் நகராமல் இருக்க வேண்டும். அவ்வாறே இரவுக்குள் பகல் புகவேண்டுமெனில் இரவும் நகராமல் இருக்க வேண்டும். சூரியன் பூமியைச் சுற்றி வந்தால் இரவுக்குள் பகல் புக முடியாது; போலவே, பகலுக்குள் இரவு புக முடியாது.
குர் ஆனுடைய உயர்ந்த விரிவுரை எவ்வாறு இருக்க வேண்டும் எனக் குறிப்பிடும்போது “முதலாவது ஒரு அல்குரான் வசனங்களை பிறிதொரு அல் குர்ஆன் வசனங்கள் மூலம் விளக்குவது. இதுவே உயர்ந்த தஃப்ஸீராகும்” என்று தனது கட்டுரையில் அப்துல் அஸீஸ் என்பார் குறிப்பிட்டிருந்தார்.
அதே அடிப்படையில்தான் பேரா. அல்-நஜ்ஜார் தமது ஆய்வுகளை முன்வைக்கிறார். காட்டாக, இறைவசனம் 017:012இல் “இரவையும் பகலையும் நாம் இரு சான்றுகளாக ஆக்கியிருக்கிறோம்” என்று அல்லாஹ் கூறுவதை, ஆண்டுக் கணக்கில் ஆய்வு செய்ததாகக் கூறுகிறார் [சுட்டி-11].
அவரது ஆய்வுகள் கட்டுரையாளரின் “உயர்ந்த தஃப்ஸீர்” மதிப்பீட்டுக்கு உரியனவாக இருந்தால் ஏற்றுக் கொள்ளலாம்; இல்லையெனில் மறுத்து விடலாம்.
“… எச்சொல்லை யாரிடமிருந்து கேட்பினும் அவற்றில் நற்சொல்லை மட்டும் ஏற்றுப் பின்பற்றுபவர்களைத்தாம் அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவான் … அவர்கள்தாம் பகுத்தறிவாளர்கள்” [039:17].
மறுப்புகள் தொடரும், (இன்ஷா அல்லாஹ்).
ஃஃஃ
to.wahhabi@gmail.com
http://wahhabipage.blogspot.com
சுட்டிகள்:
01 – http://www.thinnai.com/?module=displaystory&story_id=20909198&edition_id=20090919&format=html
02 – http://wahhabipage.blogspot.com/2009/10/blog-post.html
03 – http://www.quranandscience.com/scientists/197-dr-zaghloul-el-naggar.html
04 – http://www.tafsir.com/default.asp?sid=36&tid=43544
05 – http://www.tafsir.com/default.asp?sid=21&tid=32959
06 – http://www.tafsir.com/default.asp?sid=41&tid=46752
07 – http://www.tafsir.com/default.asp?sid=31&tid=40809
08 – http://www.tafsir.com/default.asp?sid=39&tid=45009
09 – http://www.tafsir.com/default.asp?sid=7&tid=17992
10 – http://www.tafsir.com/default.asp?sid=74&tid=55976
11 – http://video.google.com/videoplay?docid=-7608672977030483134&ei=uk3MSp76D42wwgP4360_&q=committee+of+scientific+notions+in+the+glorious+quran&hl=en#

Series Navigation

வஹ்ஹாபி

வஹ்ஹாபி