தலைவாசல்
கி.பென்னேஸ்வரன்
அன்பு நண்பர்களுக்கு வணக்கம்.
தலைநகரில் நடைபெறும் கலை மற்றும் இலக்கிய நிகழ்ச்சிகள் தொடர்பான பதிவுகளை ஒவ்வொரு வாரமும் வடக்கு வாசல் இணையதளத்தில் (http://www.vadakkuvaasal.com) தலைவாசல் என்னும் பெயரில் ஒரு தனி இணைப்பாக வெளிக் கொண்டுவருவதாக அறிவித்து இருந்தோம்.
அந்த முயற்சியின் முதல் அடியாக இந்த வாரம் ஏப்ரல் இறுதி வாரத்தில் இருந்து மே மாதம் முதல் வாரம் வரை எங்களுக்குக் கிட்டிய நிழற்படங்கள் மற்றும் செய்திகளை வைத்து இந்தப் பக்கத்தைத் துவக்கி இருக்கிறோம்.
தற்போதைக்கு டெல்லியில் நடந்த நிகழ்வுகளைப் பதிவேற்றம் செய்திருந்தாலும் வரும் வாரம் முதல் உலகனைத்தும் உள்ள தமிழ் அமைப்புக்கள், கலைஞர்கள் மற்றும் படைப்பாளிகளின் நிகழ்வுகள் குறித்த பதிவுகளை இங்கே வலையேற்றம் செய்ய இருக்கிறோம்.
http://www.vadakkuvaasal.com என்னும் எங்கள் தளத்துக்கு நீங்கள் வருகை புரிந்தால் தலைவாசல் என்னும் பெயரில் இந்தப் பக்கங்களை நீங்கள் பார்க்கலாம்.
இதுதவிர ஏற்கனவே ராகவன் தம்பி பக்கங்கள் என்னும் பெயரில் என்னுடைய பதிவுகளை முகப்புப் பக்கத்தில் எழுதி வருகிறேன். உங்கள் அனைவரிடமிருந்தும் அன்பும் ஆதரவும் கலந்த ஊக்க வார்த்தைகள் எங்களுக்குக் கிட்டி வருகின்றன.
http://www.vadakkuvaasal.com என்னும் எங்கள் இணைய தளத்துக்கு வருகை புரிந்து ஒவ்வொரு வாரமும் நாங்கள் பதிவேற்றும் தலைவாசல் பக்கங்களை வாசிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தலைநகர் மட்டுமல்லாது உலகம் முழுமைக்கும் உள்ள படைப்பாளிகள், கலைஞர்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள் இந்தப் பக்கத்தை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். உங்கள் தொடர்பான பதிவுகளை நிழற்படங்களுடன் அனுப்பி வைத்தால் தலைவாசல் பகுதியில் மகிழ்ச்சியுடன் வெளியிடுவோம். இயன்றவரை தமிழிலேயே நிகழ்ச்சிகள் பற்றிய குறிப்புக்களை அனுப்ப வேண்டுகிறோம்.
அன்புடன்
கி.பென்னேஸ்வரன்
ஆசிரியர்
—
K.PENNESSWARAN
VADAKKU VAASAL
09910031958/09211310455
011-65858656/25815476(Telefax)
http://www.vadakkuvaasal.com
- பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! அசுரக் காந்த ஆற்றலுள்ள பூத வலு பெற்றக் காந்த விண்மீன்கள்.
- புத்தக விமர்சனம் : பாரி பூபாலனின் ஓவியத்தின் குறுக்கே கோடுகள்
- தூரதேசத்திருந்து
- புத்திஜீவிகள்
- மரணம் பேரின்பம்
- ஐந்து கவிதைகள்
- அதிரூபவதிக்கு…..
- பூங்கா!
- வேத வனம் – விருட்சம் 34
- ஞாயிற்றுக்கிழமை ஒரு மழை நாளில் கடவுள் இறந்துவிடுவார்
- மனச்சுமை
- விஸ்வரூபம் – அத்தியாயம் முப்பத்தைந்து
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – மூன்றாவது அத்தியாயம்
- மூர்த்தி எங்கே?
- ஃப்ராய்டுக்கு முன்பே கனவுகள் இருந்தன
- சங்கச் சுரங்கம் : மதுரைக் காஞ்சி
- மே 2009 வார்த்தை இதழில்…
- அ.முத்துலிங்கம் ஐம்பது ஆண்டுகள் இலக்கியப்பணி- ஒரு நிகழ்வு
- Call for Submissions for the 8th International Tamil Short Film Festival
- நேசகுமாருக்கு என் பதில்
- நீயும் பொம்மை நானும் பொம்மை -சிறுகதை
- பூக்களின் சரம், ஒரு கல், தொட்டுக் கொள்ள நாகூர்!
- ஒளிந்துகொண்டு பேசுபவர்களுக்கு
- தலைவாசல்
- வ.ந.கிரிதரனின் “நான் அவனில்லை”
- பொ.கருணாகரமூர்த்தியின் படைப்புக்கள் ஆய்வும் அறிமுகமும்
- சான்ஃபிரான்சிஸ்கோ விரிகுடா பகுதி பாரதி தமிழ்ச் சங்கம் வழங்கிய விரோதி ஆண்டு சித்திரைத் தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சி
- நேசக்குமார் அவர்களின் கட்டுரை
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << பூவின் கானம் >> கவிதை -8
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -36 << குடிவாழ்வு >> மலையும் நதியும்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399)மூவங்க நாடகம் காட்சி -1 பாகம் -2
- மலேசிய தீவிர இலக்கிய சிற்றிதழ் – அநங்கம் மே 2009