எழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுத்த விழா – மலர்மன்னன் சொன்னதாக நான் குறிப்பிட்டதில் பிழை

This entry is part [part not set] of 40 in the series 20080103_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


எழுத்தாளருக்கு எழுத்தாளர்கள் எடுத்த விழா –

நண்பர் மலர்மன்னன் பேச்சு சார்ந்து நான் எழுதிய குறிப்பில் ‘லா,ச,ரா, வரிகளாக – அந்தக் கத்தி அழகான இடத்தில் இறங்கியது’ என்று மலர்மன்னன் சொன்னதாகக் குறிப்பிட்டதில் பிழை இருக்கிறது. திண்ணையில் கட்டுரை வெளியான உடனேயே எழுத்தாளர் திருமதி மதுமிதா தொலைபேசியில் குறிப்பிடடார் – ‘கத்தி மென்மையான பகுதியில் இறங்கியது’ என்றுதான் மலர்மன்னன் மேடையில் பேசினார், என்று நினைவூட்டினார். தவறுக்குக் கண்டிப்பாக நான் வருத்தம் தெரிவிக்கிறேன். ஆனால் அதன் பின்புலத்தில் எழுப்பப்பட்ட விவாதத்தை நான் வரவேற்கிறேன். லா.ச.ரா. அவர்களைப் பற்றி நான் எனது கண்ணோட்டமாக விரிவாகவே திண்ணையில் தந்துவிட்டதாக உணர்கிறேன். நல்ல வாய்ப்பு திரு ராஜாராம் எனக்கு அளித்தார். அன்னாருக்கு நன்றி.

எஸ். ஷங்கரநாராயணன்


storysankar@gmail.com

Series Navigation

எஸ்.ஷங்கரநாராயணன்

எஸ்.ஷங்கரநாராயணன்