பி.கே. சிவகுமாரின் கடிதம்…

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

தாஜ்



மலர்மன்னன் குறித்து பி.கே.சிவகுமார் எழுதிய கடிதத்தின் அத்தனை வரிகளும் – காற்புள்ளி, அரைப்புள்ளிகளையும் சேர்த்து – எனக்கு சம்மதம். வியந்து வழிமொழிகிறேன்.

நம்பகத்தன்மையை இழந்துவிட்ட எல்லாத் துறைகளும் மாதிரி எழுத்துத் துறையும் தன்னளவிற்கு சீரழிந்து , சூதும் வாதும் நிறைந்ததாகி விட்டது. அங்கே, பி.கே. சிவகுமார் போன்றவர்கள் தொடர்ந்து, நுட்பம் கூடிய யதார்த்தப் பார்வையோடு , இயங்குவது ஆறுதலான விஷயம்.

மறைந்த சு.ரா. அவர்கள் பி.கே. சிவகுமாரைப் பற்றி ஒருதரம் ‘சிறந்த எழுத்தாளர் அவர்’ என்று குறிப்பிட்டதை நான் அறிவேன். இன்றைக்கு, அதை அவர் உறுதிபட மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறார்.

– தாஜ்


satajdeen@gmail.com

Series Navigation

தாஜ்

தாஜ்