இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 22)
அறிவிப்பு
இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 22)
நாள்: சனிக்கிழமை, 27 அக்டோபர் 2007
நேரம்: மாலை 6.30 முதல் 9.00 வரை
இடம்: விரிவுரை அரங்கு, தளம் 4, காட்சிக்கலை மையம், 7A, கென்னடி சாலை, ஹாங்காங்
பொருள்: புலம் பெயர் வாழ்வு
உரைகள்:
திரு. அ.செந்தில்குமார்- “நாற்றுகள், தொட்டிச் செடிகள் மற்றும் குரோட்டன்கள்”
திரு. கே.எஸ்.வெங்கட்ராமன்(ராம்)- “அக்கரை பச்சைதான்; எக்கரை அக்கரை?”
சிறப்புரை
திரு. செ.முஹம்மது யூனூஸ்- “எழுதப்படாத பர்மா குறிப்புகள்”
[‘யூனூஸ் பாய்’ என்று ஹாங்காங் இந்தியர்களால் அன்போடு அழைக்கப்படும் திரு. முஹம்மது யூனூஸ், நாற்பதாண்டுகளுக்கு முன்னால் பர்மாவிலிருந்து ஹாங்காங்கிற்குப் புலம் பெயர்ந்தவர். அதற்கு முன்னர், அவர் நாற்பதாண்டுகள் வாழ்ந்த, பிறந்து வளர்ந்த ‘பர்மியத் திருநாட்’டைப் பற்றிச் சொல்வதற்கு, யூனூஸ் அவர்களிடம் ஏராளமான செய்திகள் உள்ளன. பர்மீயர்களும் இந்தியர்களும் இணக்கமாய் வாழ்ந்ததைப் பற்றி, 1930-குப் பிறகு பரஸ்பர நம்பிக்கைகள் மெல்ல மெல்லத் தகர்ந்ததைப் பற்றி, 1941-இன் ஜப்பானிய ஆக்கிரமிப்பைப் பற்றி, 1962-இல் ஏற்பட்ட ராணுவ ஆட்சியைப் பற்றி, அதற்குப் பின்னர் இந்தியர்கள் அங்கு வாழமுடியாமல் போனதைப் பற்றி…..இன்னும் நிறைய. தான் வாழ்கிற சமூகத்தைக் குறித்த அக்கறையும், சக மனிதர்கள் மீது எல்லையற்ற நேசமும் கொண்ட யூனூஸ் அவர்களின் உரை, ஒரு காலகட்டத்தின் பதிவாக அமையும். அது புலம் பெயர் வாழ்வின் உவப்பையும், அலைந்துழல்வையும் ஒரு சேரப் படம் பிடிக்கும்]
கலந்துரையாடல்:
உறுப்பினர்கள் எப்போதும் போல் பேசப்பட்டவை குறித்தும் பேசத் தவறியவை குறித்தும் பேசலாம், தங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.
தங்கள் வருகைக்காகக் காத்திருக்கிறோம்.
தொடர்புக்கு:
மு.இராமனாதன் (mu.ramanathan@gmail.com)
- விளம்பரக் கவர்ச்சியில் வந்த வேதனை ?
- அரசு அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு ஆபத்து
- தவறாமல் வருபவர்
- கால நதிக்கரையில்……(நாவல்)-29
- யாரோ அவர் யாரோ எங்கே போகிறாரோ?
- அலென் ராமசாமி உட்காரும் நாற்காலி
- தனிமையில் ஒரு பறவை
- சிவ சேனை பற்றிச் சில நினைவுகள்
- கண்ணில் தெரியுதொரு தோற்றம் – 5- வட கிழக்குப் பிரதேசத்தில் மூங்கில் பூக்கும் காடுகள்
- எனது துயரங்களை எழுதவிடு…!
- கவிஞர் ரசூல் எழுத்தும் ஊர்விலக்கமும்
- காலத்தின் தழும்புகள்
- காதல் நாற்பது (44) உன் ஆத்மவேர் என்னுள்ளே !
- தேரோட்டி இல்லாது !
- கிராமங்களை விட்டு வெளியேறியவர்களின் பாடல்கள்
- எல்லைகளற்று எரியும் உலகு!
- உனக்கும் எனக்குமான உரையாடல்
- கதிரியக்கக் கழிவுகள் கண்காணிப்பும், நீண்டகாலப் புதைப்பும்
- கடிதம்
- படித்ததும் புரிந்ததும்..(7) குலுக்கல் முறையில் அமைச்சர் – சொல்லி மறந்த கதை;
- தன் வினை
- பகவத் கீதை – ஓர் எளிய மொழியாக்கம் – 11(அத்தியாயம் 16,17)
- இருபதாம் நூற்றாண்டின் காப்பியப் போக்குகள்
- இளைஞர்களை சுட்டெரிக்கும் வெள்ளித் தீ ரை!!
- 1981-இல் தொடங்கிய ‘சுட்டி’: பெயருக்கேற்ற சிற்றிதழ்
- பாரதியார் வரைந்த பாஞ்சாலி யார்?
- மாத்தா ஹரி -அத்தியாயம் – 33
- துவாரகை தலைவனின் “பீங்கானிழையருவி’ கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா
- புறநானூறும் தமிழர் வரலாறும்
- சர்வைவல் ஆப் பிட்நெஸ்!
- இலக்கிய வட்டம், ஹாங்காங் கருத்தரங்கம்(கூட்ட எண்: 22)
- ஸ்ரீதேவியுடன் ஒரு மாலைப் போது என்ற தலைப்பில் வாஸந்தி அவர்களின் கட்டுரையைப் பற்றி.
- INTERNET BROADCASTING SCHEDULE – National Folklore Support Centre
- கடிதம்
- பம்பாய்த் தமிழ்ச் சங்கம் எஸ் ஷங்கரநாராயணனுக்கு வரவேற்பு நிகழ்ச்சி
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 2 காட்சி 2 பாகம் 2