மு.இளங்கோவன்
நிகழ்ச்சிகள்
தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும் என்னும் தலைப்பில் புதுச்சேரியில் அமைந்துள்ள
பிரெஞ்சு ஆய்வுநிறுவனத்தில் உலக அளவிலான கருத்தரங்கம் ஒன்று செப்டம்பர்12-14(மூன்று நாள்) நடைபெற்றது.இதனைப்
பெர்க்கிலியில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தெற்கு மற்றும் தெற்காசிய ஆய்வுத்துறையும் இணைந்து நடத்தியது.இக்கருத்தரங்கிற்கு உலகம் முழுவதும் இருந்தும் பேராசிரியர்கள் அழைக்கப்பட்டனர்.அறிஞர்கள் ஐராவதம் மகாதேவன்,இரா.நாகசாமி,பிரேமா நந்தகுமார்,விசயலெட்சுமி,கவிஞர் ஞானக்கூத்தன், அ.அ.மணவாளன்,வீ.அரசு,கிருட்டிணமூர்த்தி
சாத்திரி,இரா.கோதண்டராமன்,சுப்பராயலு,சுப்பிரமணியன்,கி.நாச்சிமுத்து முதலானவர்கள் தமிழகத்திலிருந்து கலந்துகொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள். அயல்நாட்டினருள் முல்லர்.குரோ,கெர்மன் டிக்கன்,அன்னே மோனியசு,சிறிலதாஇராமன் முதலானவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
‘இக்கருத்தரங்கு தனித்துவமானது.தெற்காசியாவிலேயே முதன்முறையாக, இலக்கணம், மொழியியல், எழுத்தியல், தத்துவவியல், இலக்கியம் மற்றும் வரலாறு ஆகிய துறைகளில் இந்த இரு செவ்வியல் மொழிகளுக்கும் இடையிலான உறவை ஆராய்வதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.தமிழ்ப்பண்பாட்டின் கூறுகள் இரு மூலங்களால் வரையறுக்கப்படுகின்றன.ஒன்று சமற்கிருதம்,மற்றது எந்த விதத்திலும் பழமை குன்றாத சங்க இலக்கியத்திலிருந்து தொடங்கக்கூடிய தமிழ். ஒரே பண்பாட்டிற்கு இரு செவ்வியல் மொழிகள்’ என்னும் நோக்கத்துடன் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
மு.இளங்கோவன்
புதுச்சேரி
muelangovan@gmail.com
- விநாயக சதுர்த்தி
- தனது சுகம் துறந்து தொண்டு புரிந்தவர் பெரியார்
- பிழைதிருத்தம் 15. கைமாறு – கைம்மாறு
- கிணறு/பறவையின் இறகு
- ஒருமனத் தம்பதிகள் ?
- காதல் நாற்பது – 38 முதலில் தந்த முத்தங்கள் !
- “இதற்கு முன்”
- அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா ? அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா ? -2
- இசைப்பேரறிஞர் வீ.ப.கா.சுந்தரம் (05.09.1915 -09.03.2003)
- “படித்ததும் புரிந்ததும்”.. (1) நன்நெறி
- 8$
- அந்த நாள் ஞாபகம் – பாட்டுக்கு பாட்டெடுத்து…
- சி. கனகசபாபதி நினைவு பரிசு ,மற்றும் சி. சு .செல்லப்பா நினைவுப் பரிசு போட்டி முடிவுகள்
- கடிதம்
- மகாகவி பாரதி பட்டி மன்றம்
- எஸ் பொ பவளவிழா
- ஹெச்.ஜி.ரசூலின் எழுத்துக்கள்
- நிகழ்ச்சிகள் – தமிழுக்கும் சமற்கிருதத்திற்குமான உறவு:பொருத்தங்களும் முரண்களும்
- இளையர்கள் இன்று
- நடக்க முடியாத நிஜம்
- யாருக்கு வாய்க்கும்….
- பரிட்டவணை
- மார்வின் ஹாரிஸ் – கலாச்சார பொருள்முதல் வாதம்
- அநாகரிக அறிக்கைகளும் ஆர்ப்பாட்ட அரசியலும்
- காஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்
- புதிய விடியலுக்கு பாரதியின் அறிவு ஒளி
- சுதந்திரப் போராட்டத்தில் தமிழ் எழுத்தாளர்கள் – 3
- பார்கெய்ன்
- தொடர்நாவல்: அமெரிக்கா! அத்தியாயம் இருபத்தேழு: இன்று புதிதாய்ப் பிறந்தேன்!
- மாத்தா-ஹரி – அத்தியாயம் 27
- தவறு யாருடையது?
- பேராசைக் கஞ்சன் (ஓர் இன்பியல் நாடகம்) அங்கம் 1 காட்சி 3 பாகம் 1
- கால நதிக்கரையில் – அத்தியாயம் – 23