எச்.முஜீப் ரஹ்மானின் கட்டுரைகள் குறித்து

This entry is part [part not set] of 41 in the series 20060616_Issue

மலரமுதன்


அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு,

நான் பல வருடமாக திண்ணையின் வாசகராக இருக்கிறேன்.அண்மைகாலமாக திண்ணையில் எழுதி வரும் எச்.முஜீப் ரஹ்மானின் இலக்கிய கட்டுரைகள் குறித்து ஒரு சில எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.முஜீப் ரஹ்மானின் கட்டுரைகள் அனைத்தும் பின் நவீனத்துவக் கோட்பாட்டின் நோக்கில் இருக்கிறது.பின் நவீனத்துவம் சார்ந்து இதுவரை தமிழில் வெளிவந்திருக்கும் கட்டுரைகளில் இவரின் கட்டுரைகள் மிகச் சிறப்பான விதத்தில் அமைந்திருக்கிறதை பார்க்கிறேன்.பின் நவீனத்துவ கலை,இலக்கிய கோட்பாடுகளான மஸ்ஸர்ரியலிசம்,ரிகர்சனிசம் போன்ற புது போக்கினை இதுவரை இந்திய மொழிகளில் சிறப்பாக தமிழ் மொழியில் இவரை தவிர்த்து ஒருவர் கூட எழுதவில்லை என்பது மிகமுக்கியமாக வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டிய செய்தியாகும்.பின் நவீன இசையாக இருக்கட்டும்.பின் நவீன இஸ்லாமாக இருக்கட்டும்,மெட்டாபிலிமாக இருக்கட்டும் இவையனைத்தும் தமிழுக்கு புதியது என்பதை யாராலும் மறுக்க இயலாது. அவரது நூல் மதிப்புரைகளும் ,அவரது கவிதைகளும்,சிறுகதைகளும் கூட சிறப்பாக இருக்கிறது.மெட்டா பிக்ஸன் தொடர்பான அவரது கட்டுரைகள் போன்றவை அவரை பின் நவீனத்துவ விமர்சகராக அடையாளம் காட்டியுள்ளது.ஒரு கவிஞராக,சிறுகதை ஆசிரியராக,விமர்சகராக உருவாகியுள்ள அவரை தமிழ் வாசகர்கள் விரைவில் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.அண்மையில் அவரது சிறுகதை தொகுப்பை வாசித்த போது பின் நவீனத்துவம் பற்றி பேசுபவர்களில் இவர் முக்கியமானவர் என்பதை அறிந்து கொண்டேன்.நான் தொடர்ந்து இவரை குறித்து யாராவது கடிதம் எழுதமாட்டார்களா என்று பார்த்தபோதும் ஏமாற்றமே மிஞ்சியது.மிகத்தீவிரமான புதிய விஷயங்களை சொல்லும் அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் அதே வேளை ஒட்டு மொத்தமான தமிழர்களின் சார்பில் பாராட்டுகிறேன்.தொடர்ந்து அவர் நிறைய சாதனைகளைச் செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்.

அன்புடன்
மலரமுதன்
mol_remya@yahoo.co.in

Series Navigation

மலரமுதன்

மலரமுதன்