காப்பாற்றப்படட்டும் மதச்சார்பின்மை : மடிந்தழியட்டும் காஃபீர்கள்

This entry is part [part not set] of 42 in the series 20060324_Issue

அரவிந்தன் நீலகண்டன்


காசியில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் வெடிகுண்டு வைத்து ஹிந்துக்களை கொன்றதாக வகுப்புவாதிகள் கொடுமையாக சித்தரிக்கின்றனர். இது தவறான ஒன்றாகும். மதச்சார்பின்மையினை பாதுகாக்கும் பொருட்டு கீழ்கண்ட விளக்கங்களை அளிக்கிறேன். எப்படியானாலும் ஒரு நாலைந்து மாதங்களில் இதனை தூக்கி விழுங்கும் படியாக காசி குண்டுவெடிப்புகளை நியாயப்படுத்தும் மதச்சார்பற்ற விளக்கங்கள் வரத்தான் போகின்றன. ஏதோ என்னாலான அளவுக்கு நானும் மதச்சார்பின்மைக்கு பங்களிக்கிறேன்.

1.ஹிந்துக்களை சகோதர சகோதரிகளாக பார்ப்பவர்கள் இஸ்லாமிய ஜிகாதிகள். ஜிகாத் என்றாலே புனிதபோர். புனித போராளிகள் தங்கள் சொந்த சகோதர சகோதரிகளாக பாவிப்பவர்களை ஏன் கொல்ல வேண்டும் ? இதற்கு காசியின் முக்கியத்துவத்தை நாம் சிந்தித்து பார்த்தால் உண்மை விளங்கும். காசியில் இறப்பவர்கள் முக்தி அடைவார்கள் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை. அந்த நம்பிக்கையை நிறைவேற்றும்படிக்கு ‘humbly ‘ ஜிகாதிகளை அந்த ஹிந்துக்கள் கேட்டிருக்க வேண்டும். எனவேதான் ஜிகாதி சகோதரர்கள் காஃபீர்களாக இருந்த போதும் ஹிந்துக்களின் கோரிக்கையை நிறைவேற்றி இந்த வெடிகுண்டினை வெடிக்க வைத்தனர். இந்த உண்மையை மகாத்மாகாந்தியின் அணுக்க தொண்டர் தமக்கு தெரிந்த பெயர் தெரியாத செத்து போன மெளல்வி ஆவண ஆதாரத்துடன் சொல்ல அதனை கேட்டு திரும்பி சொல்லியுள்ளார்.

2.வெடிகுண்டுகள் வெடித்ததாக கூறப்படும் பிரஷர் குக்கர்கள் வெடித்ததை போலவே மன்னார் பேட்டையில் ஒரு வீட்டில் பிரஷர் குக்கர் வெடித்து ஒரு பெண் இறந்திருப்பதை ஜஸ்டிஸ் பாணர்ஜி பார்வையிட்டார். பின்னர் அவர் தமது அமெரிக்க-ஜப்பானிய பயணங்கள் மூலம் வெளிநாடுகளில் அடுப்படி பாதுகாப்பு குறித்து விரிவாக கண்டறிந்தார். இவை மூலம் அவர் காசியில் நடந்தது ஜிகாதி பயங்கரவாதம் அல்ல என்றும் பிரஷர் குக்கர் வெடித்த விபத்துதான் என்றும் கோவிலில் தீபாராதனை நடத்தும் போது ஏற்பட்ட காற்றுமண்டல அழுத்தத்தால் இத்தகைய வெடிவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என தமது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். ஆனால் மன்னார்பேட்டை பிரஷர்குக்கர் விபத்து திட்டமிட்ட கொலை என காவல்துறை கண்டுபிடித்துள்ளது குறித்து கேட்டபோது ‘எனக்கு அந்த அறிக்கை வரவில்லை ‘ என்று கூறினார்.

3. ‘மேலும் காசியில் நடந்த விபத்திற்கு முந்தைய வெள்ளிகிழமை டானிஷ் கார்ட்டூன்களை எதிர்த்து லக்னோவில் கடை அடைக்க ஹிந்துக்களிடம் முஸ்லீம் சகோதரர்கள் கேட்டிருக்கிறார்கள். ஆனால் வழக்கம் போல பணிந்து கடையை அடைக்காமல் ஹிந்துக்கள் மறுத்ததால் அங்கு கலவரம் வெடித்திருக்கிறது. வழக்கம்போல ஹிந்துக்கள் காஃபீர்கள் போல பணிந்து நடக்காமல் இஸ்லாமியர் மத உணர்வுகளை மறுக்காமல் கடைகளில் வியாபாரம் நடத்தியது ஆர்.எஸ்.எஸ் பாசிஸ்டுகளின் சதி பிரசாரத்தால் தான். இதற்கான திட்டங்கள் நாக்பூரில் 2004 இல் தேர்தலில் பாஜக தோற்றவுடன் தீட்டப்பட்டுள்ளது. ‘

4. ‘இதனை மதப்பிரச்சனை ஆக்க கூடாது. ஆர்.டி.எக்ஸ் கிடைக்காமல் அமோனியம் நைட்ரேட் பயன்படுத்தும் வறுமையான சூழல் அந்த இளைஞர்களுக்கு. ஆர்.டி.எக்ஸ் பயன்படுத்தியிருந்தால் இந்த அளவு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. ஆகவே இந்த மோசமான நிகழ்வுக்கு காரணம் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை மக்களிடையே நிகழக்கூடிய வறுமைதான். இந்த வறுமையை ஒழிக்க இராணுவம், காவல்துறை, உளவுத்துறை மற்றும் தனியார் துறைகளில் ஒரு குறிப்பிட்ட சிறுபான்மை மக்களுடைய எண்ணிக்கை அறியப்பட்டு அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்கப்படும். ‘

—-

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்