கடிதம் ஜனவரி 6,2005

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

இக்பால்


திண்ணை ஆசிரியருக்கு,

இஸ்லாம் பற்றி எல்லாம் தெரிந்தது மாதிரி எழுதி வந்த நேஷக்குமார் இன்று எங்கே ? எதிர்ப்பு வந்ததும் ஓடிப் போய்விட்டார்.

இக்பால்

iqbalriver@yahoo.com

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

இக்பால்

இக்பால்

கடிதம் ஜனவரி 6,2005

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

K.ரவி ஸ்ரீநிவாஸ்


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு

1, சூசன் சொண்டாக் மறைவு குறித்து எழுத நினைத்தேன். எழுதும் மனநிலையில் அப்போது இல்லை. பினான்ஷியல் டைம்ஸ் உட்பட பல தினசரிகளில் விரிவான அஞ்சல் குறிப்புகள் வந்துள்ளன. அவர் எழுதி 2003ல் வெளியான ஒரு நூல் குறித்து நான் 2003 ஜூலையில் திண்ணையில் வெகு சுருக்கமாக எழுதியிருக்கிறேன். http://www.thinnai.com/pl0710035.html

அந்நூல் இன்று அன்றை விட இன்னும் பொருத்தமுள்ளதாகத் தோன்றுகிறது.

2, தமிழன்பன் நல்ல கவிதைகள் எழுதியுள்ளாரா , அவர் எழுதியுள்ளவை அப்பரிசுக்குத் தகுதியானவையா என்று எனக்குத் தெரியாது. ஆனால் ஜெயமோகன் ஒரு விமர்சகரே அல்ல என்று நான் கருதுவதால் அவர்

வாதத்தினை ஏற்கத் தயங்குவேன். பால் சக்காரியாவின் கதைகளை ஆங்கில மொழிபெயர்ப்பில் படித்திருக்கிறேன். ஒரு சில தவிர பிற என்னை கவரவில்லை. ஒருவேளை அவரது மோசமான கதைகள்தான் மொழிபெயர்ப்பில் கிடைக்கின்றனவோ ? அறிவுஜீவித்தனமான உத்திகள், பார்முலாக்கள் அவர் கதைகளில் இருக்கின்றன. சில உத்திகளையும், எழுத்துவகைகளையும் கேள்விப்பட்டிராதவர்களுக்கு அவை

பிரமாதமாகத் தோன்றலாம். காலச்சுவட்டில் வெளியாகும் கட்டுரைகள் பாடாவதியாக உள்ளன. எனவே ஜெயமோகன் போல் என்னால் அவர் எழுத்துக்களை புகழமுடியாது. சீரோ டிகிரி நாவலை அவர், அதாவது சக்காரியா வெகுவாக

புகழ்ந்துள்ளதாக சாரு நிவேதிதா எழுதியுள்ளார். அந்நாவல் குறித்த சக்காரியாவின் கருத்துக்களை ஜெயமோகன் ஏற்கிறாரா.

3, அரவிந்தன் நீலகண்டன் பதில் சிரிப்பினை வரவழைக்கிறது. டார்வின் எழுதியுள்ள கடிதத்திற்கும், இவர்

முன்வைக்கும் கருத்து அல்லது கருதுகோள் அதாவது அது இவற்றிற்கு கட்டியம் கூறுவது போல் உள்ளது

என்பதற்கும் ஏதாவது தர்க்க ரீதியான தொடர்பு இருக்கிறதா ?. இது இவரது சொந்தப் புளுகா இல்லை

இதற்கும் ஏதாவது சான்றுகள், ஆதாரங்கள் (பிரச்சாரமாக இருந்தாலும் கூட) உண்டா ?. இங்கு மரபணுவியல் எங்கிருந்து வந்தது. இக்கடிதத்தில் அந்த வார்த்தையே இல்லையே. இதன் பெயர்தான்

‘தீர்க்கதரிசனம் ‘ என்பதோ ?.

இப்படி ஒருவர் எந்தத் தொடர்புமின்றி ஒரு தகவலை அதுவும் பொய் என்று நிரூபிக்கப்பட்ட தகவலை பயன்படுத்துவார் என்றால் அவரது அறிவார்ந்த நேர்மை எப்படிப்பட்டது என்பதை நான் இன்னும் விளக்கவும் வேண்டுமா ? டார்வின் கடிதத்தில் டார்வின் கூறும் காரணங்களை இப்படி ஒருவர் வியாக்கினப்படுத்த முடியும் என்றால் அங்கு வெளிப்படுவது ஒரு ஆழ்வெறுப்பே. மூர்க்கத்தனமான வெறுப்புக் கொண்ட ஒருவரால்தான் அதை இப்படி வியாக்கியனப்படுத்தி எந்த தர்க்கரீதியான காரணங்களுமற்ற ஒரு கருத்தினை அல்லது கருதுகோளை முன் வைக்க முடியும். ஆம் நான் மார்க்ஸ், மார்க்ஸியத்தையும் வெறுக்கிறேன், அதற்காக எப்படி வேண்டுமானாலும் எழுதுவேன், எதையும் எப்படியும் சான்றாக பயன்படுத்த முயல்வேன் என்று அவர் திண்னையில் வெளிப்படையாகத் தெரிவித்துவிடலாம்.அந்த வெளிப்படையான நேர்மையை

அவரிடமிருந்து எதிர்பார்க்கலாமா ?

தன்னைப் பற்றி சுலேகா தளத்தில் அவர் கூறிக்கொள்வது aravindan neelakandan writes. he writes about science, philosophy and society. he is an irritant to abrahamic expansionist fundamentalists of Christianity Islam and Marxism he loves being their irritant

http://www.sulekha.com/network/dp.aspx ?profileid=aravindan.%20s.neelakandan

எனவே அவரது எழுத்துக்களை அவை மார்க்சியம்,இஸ்லாம் மற்றும் கிறித்துவம் குறித்த விமர்சன,

விஷமபிரச்சாரமாக உள்ள போது மார்க்சிய,இஸ்லாமிய மற்றும் கிறித்துவ எதிர்ப்புக் கருத்துக்கள் என்ற

தலைப்பில் வெளியிடுவது பொருத்தமாக இருக்கும். அவர் எழுதுவதில் மிகப் பெரும்பானமையானவை அவ்வாறே உள்ளதால் இப்படித் தனித்தலைப்பில் வெளியிடுவது குறித்து திண்ணை ஆசிரியர் குழு பரிசீலிக்கலாம்.

K.ரவி ஸ்ரீநிவாஸ்

http://ravisrinivas.blogspot.com/

Series Navigation

கடிதம் ஜனவரி 6,2005

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

நேச குமார்


சலாஹுதீன் அவர்கள் எனக்குப் பதிலளிக்குமுகமாக டிசம்பர் 23 திகதியிட்ட மடலில்[1] பல விஷயங்களை முன்வைத்துள்ளார்.

அவரது வாதங்கள், வேண்டுகோள்கள் ஒரு புறமிருக்க, அவர் குறிப்பாக என்னிடம் வைத்துள்ள ஓர் வேண்டுகோளுக்கு மட்டும் இங்கே பதிலளிக்க கடமைப் பட்டுள்ளேன். அவர் குறிப்பிட்டுள்ளதன் சாராம்சம், நபிகள் நாயகம் அன்னை ஜைனப்பை மணந்து கொண்டபோது நிகழ்ந்த சம்பவங்கள் பற்றி நான் ஆதாரம் ஏதும் முன்வைக்கவில்லை, எனது ஊகங்களையே முன்வைத்துள்ளேன் என்பது.

இது சம்பந்தமாக எனது டிசம்பர் 2 கட்டுரையை[2] சற்றே திருப்பிப் பார்க்க வேண்டுகிறேன். அதில், நான் குறிப்பிட்டுள்ள சம்பவத்திற்கு ஆதாரமாக அபு அப்துல்லாஹ் இப்னு சாஅத் பதிவு செய்துள்ள நிகழ்வையே குறிப்பிட்டுள்ளேன். அதை அடிக்குறிப்பாகவும் முன்வைத்து, அவ்வறிஞரை இப்னு ஹஜார், அத்-தஹாபி,இப்னு கால்லிகான் போன்றவர்கள் ஆய்ந்து எழுதுபவர் என்று சான்று பகர்வதையும் குறிப்பிட்டிருந்தேன்.

மேலும், நபிகள் நாயகத்தின் வளர்ப்பு மகன், தம் மனைவியான ஜைனப்பிடம் இந்த தகவலைச் சொல்லத் தயங்கியதைக் குறிப்பிட்டுள்ள ஷாஹி முஸ்லீமின் ஹதீஸையும் சுட்டியுடன் குறிப்பிட்டிருந்தேன்.

இது இவ்வாறிருக்க, நான் ஆதாரம் எதையும் தரவில்லை என்று சலாஹுதீன் சொல்வது தவறு.

மேலும், நான் ஒரே சம்பவத்தை இருவிதமாக குறிப்பிட்டிருப்பதாக சலாஹுதீன் குறிப்பிட்டிருக்கிறார். நபிகள் நாயகத்தின் வாழ்வை வரலாற்றின் வழியே பார்க்கும் போது இவ்வகையான சிறிய மாறுபாடுகள் தெரிவது சகஜமே. காரணம், ஒவ்வொரு வரலாற்றாய்வாளர்களும் தாங்கள் கேட்டறிந்தவற்றை பதிவு செய்யும் போது மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இதாவது சிறிய மாற்றமே. நபிகள் நாயகத்தின் வாழ்வு சம்பந்தமாக பல இடைவெளிகள், பெரிய வித்தியாசங்கள் இருக்கின்றன. எப்படி திருக்குரான் விஷயத்தில் முன்பு குழப்பம் நிலவியதோ, பல விதமான திருக்குரான்கள் முஸ்லீம்களிடையே நிலுவையில் இருந்ததோ, அதே போன்று நபிகள் நாயகத்தின் வாழ்வு குறித்து பலவித வர்ணனைகள்,தர்க்கங்கள் இஸ்லாமிய அறிஞர்களிடையே பல விஷயங்களில் இன்றளவுக்கும் உள்ளன. இன்றளவுக்கும் நபிகள் நாயகத்தின் மனைவியரின், ஆசை நாயகிகளின், அவர் விவாகரத்து செய்து அனுப்பிய பெண்களின் பட்டியல் விஷயத்தில் இஸ்லாமிய அறிஞர்களிடையே ஒத்த கருத்து கிடையாது என்பதை சலாஹுதீன் அறிந்திருக்கலாம்.

இச்சம்பவமும் அதன்படியே பலவிதமாய் புத்தகங்களில் காணப்படுகின்றது. நான் கூறியது தவிர சற்றே வித்தியாசங்களுடன் இதே சம்பவம் வேறு சில புத்தகங்களில் காணப்படுகிறது. ஆகவே, இம்மாதிரி விஷயத்தில், சாராம்சத்தை மட்டுமே பார்க்க வேண்டும். அக்கால அரபி கலாச்சாரத்தில், ஜைனப்பின் வீட்டுடை எப்படி இருந்தது என்று யாருக்கும் தெரியாது. வீட்டுடையே விலகிய, சற்றே சுதந்திரமான ஆடையாக இருந்திருக்கவும் வாய்ப்புள்ளது. ஆகவே, இப்படிப்பட்ட யூகங்களுக்கும், நுணுக்கமான விளக்கங்களுக்குள்ளும் செல்வோமேயானால், பல இஸ்லாமிய அறிஞர்களைப் போன்று வாழ்நாளெல்லாம் செலவு செய்தாலும் ஒரே வரலாறு கிடைக்காது என்பதே உண்மை. ஆகவே இவ்வகையான மெல்லிய வித்தியாசங்களுக்குள் போகாமல், சாராம்சத்தை இவ்விஷயத்தில் கவனிப்போம்.

சாராம்சம் என்னவென்றால், ஜைனப்பை அவரது கணவன் வெளியே சென்றிருக்கும் போது, சரியான படி ஆடை அணியாத நிலையில் பார்த்த நபிகள் நாயகத்தின் இதயம் சஞ்சலமுற்றது என்பதே. இதையறிந்த அவரது (வளர்ப்பு) மகன், தாமே முன்வந்து மனைவியை விட்டுக் கொடுத்துவிடுகிறேன் என்று சொன்னார் என்பது. ஹதீஸ்கள் மற்றும் தஃப்ஸீர் புத்தகங்களிலேயே இச்சம்பவம் காணக்கிடைக்கிறது என்பதே. இதைத்தான் நான் குறிப்பிட்டிருந்தேன்.

சலாஹுதீன் அவர்கள் இது சம்பந்தமாக இஸ்லாமிய மார்க்க அறிஞர்களிடம் கேட்டறிந்துகொள்ள வேண்டுகிறேன். ஏனெனில், இஸ்லாமிய வரலாற்றை ஆய்ந்த மதப்பிடிப்புள்ள முஸ்லீம் அறிஞர்கள் கூட, இச்சம்பவமே குறிப்பிடப் படவில்லை என்று கூறவில்லை. தமது மதப்பிடிப்பின் காரணமாக இதை ஒரு ‘கட்டுக்கதை ‘ என்று பலரும் கூறினாலும், இச்சம்பவம் இஸ்லாமிய வரலாற்றாய்வாளர்களால் பதிவு செய்யப் பட்டுள்ளது என்பதை நேர்மையோடு ஒப்புக்கொள்கின்றனர். இவ்விஷயத்தைப் பதிவு செய்த ஆரம்பக் கால இஸ்லாமிய அறிஞர்கள் கடுமையாக சோதித்து உண்மையென்று தம்மில் தெளிந்த பின்னரே பதிவு செய்து வைத்துவிட்டுச் சென்றிருக்கும் நிலையில், இதை கட்டுக்கதை என்று சொல்லும் மெளதூதியோ மற்றவர்களோ அம்முடிவை, தம்முடைய மதநம்பிக்கையின் அடிப்படையில் மட்டுமே முன்மொழியும்போது, அதற்கு வேறு ஏதும் சான்று பகராதபோது, இதை எம்போன்றவர்களால் ஒப்புக் கொள்ள முடிவதில்லை .

சமீபத்தில் தமிழில் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றை ‘ரஹீக் ‘ என்ற தலைப்பில் தாருல் ஹூதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இஸ்லாமியப் பேரறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான் எழுதிய ‘அர்ரஹீக்குல் மக்தூம் ‘ என்ற உலகளாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற நூலின் தமிழாக்கம் இது. அந் நூலில் ஸஃபிய்யுர் ரஹ்மான் அவர்களே, இச்சம்பவம் இஸ்லாமிய நூல்களில் குறிப்பிடப் பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்[3].

இச்சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது என்று இது போன்ற இஸ்லாமிய அறிஞர்களே தெரிவிக்கும் வேளையில், இவ்விஷயத்தில் நான் நடக்காத ஒன்றைச் சொல்கிறேன் என்று குற்றம் சாட்ட வேண்டாம் என்று சலாஹூதீனிடம் வேண்டிக் கொள்கிறேன்.

– நேச குமார் –

[1] http://www.thinnai.com/le12230412.html

http://www.thinnai.com/le1223046.html

[2] http://www.thinnai.com/le1202042.html

[3] ‘ரஹீக் ‘ – ஆசிரியர் ஸஃபிய்யுர் ரஹ்மான். பக்கம் 400.( மக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ராபிததுல் ஆலமில் இஸ்லாமி நிறுவனம் நடத்திய உலகலாவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்று நூல்.)

Published by :

Darul Huda,

New No.211, Lingi Chetty Street, Mannadi, Chennai -1.

http://islaam.blogdrive.com

http://islaamicinfo.blogspot.com

Series Navigation

நேச குமார்

நேச குமார்

கடிதம் ஜனவரி 6,2005

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

ராதா


திண்ணை ஆசிரியர் குழுவினருக்கு,

திரு.அரவிந்தன் நீலகண்டன் தான் எழுதியது தகவல் பிழை என்று சாதிக்கிறார்.அவர் கூறும் காரணங்கள்

ஏற்புடையதாக இல்லை.மார்க்சியத்தினை வெறுப்பவர் எப்படி சோவியத் மார்சியர் தரும் சான்றுகளை ஏற்றார், அதுவும் அவை பிரச்சாரம் என்று தெரிந்தும். மேலும் இது குறித்து மாறுபட்ட தகவல்கள் வெளியாகியிருக்கையில் ஒருவரின் கவனத்திற்கு இரண்டு தரப்பு வாதங்களும் வந்திருக்கும். அதில் ஒன்றை ஒருவர்

உண்மை என்று நம்பினாலும் கூட இன்னொரு கருத்து இருக்கிறது என்று சுட்டிக்காட்டுவதோ அல்லது

மாறுபட்ட கருத்துக்களை ஏற்காமல் அவை என்ன என்று கூறுவதும் உண்டு. இரண்டு மாறுபட்ட கருத்துக்கள் இருக்கும் போது ஒருவர் ஒன்றை ஏற்று, இன்னொன்றை நிராகரித்தால் அதற்கான காரணங்களை குறிப்பிடுவதுதானே முறை. அப்படி ஏதாவது ஒன்றை அவர் முன் வைத்துள்ளாரா. இல்லையே.

டாகின் ? எழுதியதை இவர் படிக்கவில்லை என்றால், மாறுபட்ட கருத்துக்கள் இவர் கவனத்திற்கு வரவேயில்லை என்றால் அவர் இது குறித்து ஆராயாமல், அறியாமல் எழுதியிருக்கிறார் என்று கொள்ள முடியும்.

ஆம் நான் இந்த வி ?யத்தில் போதுமான பின் தகவல்கள், படிப்பு இன்றி இதை எழுதினேன் என்று

ஒப்புக்கொள்வாரா அவர். மேலும் தகவல் பிழை என்பதை அறியாமல் ஒரு தகவலாக இதை சிலர் கொடுத்திருக்க முடியும். அங்கு உள் நோக்கம் ஏதும் இருந்திருக்க வேண்டியதில்லை.கவனக்குறைவு கூட

காரணமாயிருக்கலாம்.

ஆனால் இங்கு நீலகண்டன் ஒரு தகவல் என்ற அளவில் மட்டும் இதைத் தரவில்லை. இது எதற்கோ கட்டியம் கூறுவது போல் அமைந்தது என்று கூறுகிறார். இப்படி யாராவது எழுதியிருக்கிறார்களா, சோவியத் மார்க்சியர் இவ்வாறு கூறியிருக்கிறார்களா. ஆம் என்றால் அதற்கு சான்று காட்ட முடியுமா.

மார்க் ?,மார்க்சியத்தின் மீதான வெறுப்பு காரணமாக தொடர்பிருக்கிறதோ இல்லையோ மார்க் ?,மார்க்சியம்

குறித்து ஒரு வி ?ம பிரச்சாரத்தை தகவல் என்ற பெயரில் தர விரும்பியதன் விளைவு அவர் இவ்வாறு எழுதியது. மேலும் இதை யார் கேள்வி கேட்கப் போகிறார்கள் என்ற அபார நம்பிக்கை. இவ்வாறு தொடர்ந்து எழுதினால் வாசகர்கள் மார்க்சியம் டார்வினின் கருத்துக்களையும், பரிணாம வாதத்தினையும் மரபணுவியலையும் நிரகாரித்தது, அவற்றிற்கு மார்க்சியம், மார்க்சியர்கள் எதிரிகள் என்று நம்பி விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு. இவைதான் அவரை இவ்வாறு எழுத வைத்தன என்று நான் நம்புகிறேன். இதே தகவலை இனி அவர் இது போல் பயன்படுத்த முடியாது.ஆனால் வேறு தகவல்கள் முளைக்கக் கூடும்.

ஒருவர் சாலையில் போகிற போக்கில் கீழே கிடந்த கல்லை எடுத்து எறிந்து விட்டு, என்னை ஏன்

குற்றம் சொல்கிறீர்கள், யாரோ கல்லை சாலையில் போட்டால் அதை என் கை எடுத்து எறிந்தால்

பிழை சாலையில் போட்டவர்கள் மீது, நான் தெரியாமல் பயன்படுத்திவிட்டேன் என்பது போலுள்ளது

அவர் வாதம். இங்கே எறிந்தவர் தலையில் அவர் எறிந்த கல் விழுந்தால் எப்படி இருக்குமோ அப்படி

இருக்கிறது அவர் நிலை. கையின் குற்றமா கல்லின் குற்றமா இல்லை கல்லை போட்டிவிட்டுப் போனவரின்

குற்றமா என்று கேள்வி எழுப்பினாலும் தலையில் கல் விழுந்தது விழுந்ததுதானே, பட்ட காயம் காயம்தானே.

வணக்கத்துடன்

ராதா

—-

radha100@rediffmail.com

Series Navigation

ராதா

ராதா

கடிதம் ஜனவரி 6,2005

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

அருள் செல்வன் கந்தசுவாமி


அன்புள்ள திரு. சோதிப் பிரகாசம்,

முதலில் நான் ஒன்றை தெளிவாகச் சொல்லி விடுகிறேன். நான்

மொழியியலிலோ, அகழ்வாராய்ச்சியிலிலோ இன்னபிற ஹுமானிடாஸ்

துறைகளிலோ வல்லுனன் அல்லன். நான் ஒரு பொறியியலாளன். அறிவியலில்

விருப்பம் உள்ளதால் அனைத்து துறை கட்டுரைகளையும் படிப்பேன். சிந்துவெளி

எழுத்துக்கள் பற்றிய கட்டுரையும் அப்படித்தான். இது முக்கியமான ஒரு புது வழிச்

சிந்தனையாதலால் தமிழில் உடனே அதற்கு விவாதங்கள் வரவேண்டும் என்று

கட்டுரைகளின் குறிப்புகளைக் கொடுத்தேன். முதல் பத்தியைத்தவிர மற்றது

எதுவும் என் ‘அபிப்பிராயங்கள் ‘ அல்ல.

நான் குறிப்பிட்ட கட்டுரையும் அதன் பின்னணியில் உள்ள அனாலிஸிஸ்உம்

முறையான அறிவியல் வழிச் செயல்பாடுகள். அதற்கு மாற்றுக்கருத்து உள்ளவர்கள்

அதை அதே முறைகளின் படி துறைசார் சஞ்சிகைகளில் எதிர்கொள்வார்கள்.

அப்போது ஒரு திரட்டுக்கட்டுரை வந்தால் அதன் குறிப்புகளையும் இடுவேன்.

—-

>>>

சிந்து வெளு எழுத்துகளை இன்னமும் யாரும் படித்து அறிந்திட வில்லை என்றுதான்

அருள் செல்வம் கந்த சுவாமி நினைத்துக் கொண்டு இருக்கிறார் போலும்.

ஆனால், அவற்றைப் படித்துப் பல நூல்களை எழுதி இருப்பவர் இரா. மதி வாணன்!

அண்மையில், பூரணச் சந்திர ஜீவாவும் இவ் வெழுத்துகளை ஆய்ந்து நூல் ஒன்றினை

வெளுயிட்டு இருக்கிறார்.

—-

இரா மதிவாணனின் நூல்களைப் படித்ததில்லை. அவருடைய சந்தால் பகுதி

‘சிந்து ‘ எழுத்துகளைப் பற்றிய கருத்துகளை ஒட்டி எழுந்த விவாதங்களை

அறிவேன்.

—-

>>>

மற்ற படி, நூல்களை ஒளுத்து வைக்கும் பழக்கம் எதுவும் எனக்கு இல்லை. எனவே,

என்னிடம் உள்ள நூல்களைப் பொறுத்த வரை, யாரும் என்னுடன் தொடர்பு

கொள்ளலாம்

-அருள் செல்வம் கந்த சுவாமி உட்பட!

—-

இது வேறே யாருக்கோ எழுதப்பட்டது போல இருக்கிறது. இதன் பின்னணி

எனக்கு விளங்கவில்லை.

—-

அன்புடன்

அருள்

(அருள் செல்வன் கந்தசுவாமி)

navlesa@yahoo.co.in

Series Navigation

அருள் செல்வன் கந்தசுவாமி

அருள் செல்வன் கந்தசுவாமி

கடிதம் ஜனவரி 6,2005

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

அசுரன்


இனிய நண்பர்களே!,

அணுஉலைகள் போன்ற பேரபாய கட்டமைப்புகள் நம் நாட்டில் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு சூழலில், பேரழிவிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்வது எப்படி என்பது குறித்த ஆய்வுரைகளைத் தொடர்ந்து வெளியிடுவது என்று எண்ணியிருந்தோம். கும்பகோணம் கொடூரம் அதனை வலியுறுத்தியது.

இப்போதைய சுனாமி வீச்சு அதனை மேலும் உறுதிபடுத்துகிறது. அதற்கு உதவும் வகையில் http://www.managingdisaster.org/ என்ற பெயரில் நண்பர்கள் ஒரு இணையதளத்தினை வடிவமைத்துள்ளனர். அவசரஅவசரமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த இணையத்தில் ஒரு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

‘நிலநடுக்கக் கடல் கொந்தளிப்பிலிருந்து நம்மை எப்படித் தற்காத்துக் கொள்வது என்பதை இந்தப் புத்தகம் விளக்குகிறது. இந்த வழ்நிலையில் எவ்வாறெல்லாம் நாம் நடந்துகொண்டால் நாம் நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியாது என்பதையும் இந்தப் புத்தகம் விளக்குகிறது. நிலநடுக்கக் கடல்கொந்தளிப்பினால் பாதிக்கப்பட வாய்ப்புள்ள கடற்கரையோரப் பகுதிகளில் வாழ்கின்ற, பணியாற்றுகின்றவர்களுக்காக இந்தப் புத்தகத்தை நாங்கள் எழுதியிருக்கிறோம் ‘ என்கிறது அதன் முன்னுரை.

இத்தளத்தினை மேலும் பயனுள்ளவகையில் செழுமைப்படுத்த உங்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பு தேவை.

தோழமையுடன்,

அசுரன்

Series Navigation

அசுரன்

அசுரன்

கடிதம் ஜனவரி 6,2005

This entry is part [part not set] of 57 in the series 20050106_Issue

ஞாநி


இரண்டு கடிதங்களுக்கு ஞாநியின் பதில்கள் :

1. தலித் பிரச்சினையில் உம் கருத்து என்ன ? – ரெங்கதுரை

2. ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை – மாயவரத்தான்

1.

காலச்சுவடு பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் சுந்தர ராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கை பற்றி ஞாநி தன் கருத்துகளை சுருக்கமாகச் சொல்லியுள்ளார். அதில் வேறு சில விடயங்கள் பற்றி சுந்தர ராமசாமி பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார் அவர். இதைப் படிக்கும் போது எல்லா நடப்புப் பிரச்சினைகளைப் பற்றியும் தான் கருத்துச் சொல்லி வருவது போன்ற ஒரு பிம்பத்தைக் கட்டமைக்கிறார் ஞாநி என்றே கருத வேண்டி இருக்கிறது. அப்படியானால், தற்போது தமிழ் இலக்கிய உலகிலும் சிற்றிதழ்களிலும் பரபரப்பை உண்டாக்கியுள்ள – பெரியார் பற்றி ரவிக்குமார் போன்ற தலித் சிந்தனையாளர்களின் விமர்சனத்தையும், அதற்கு எதிராக பார்ப்பனர் அல்லாத ஆதிக்க சாதியினர் சிலர் தலித்துகளை சுயமாகச் சிந்திக்கும் தகுதி அற்றவர்களாகவும், தாங்கள் சொல்வதைக் கேட்டு நடப்பதே தலித் விடுதலைக்கு ஒரே வழி என்பது போலவும் பேசியும் விமர்சித்தும் வருவது பற்றி ஞாநி என்ன நினைக்கிறார் ?

மேலும், ‘பெரியாரை இழிவு படுத்தும் வகையில் செய்திகள், கட்டுரைகள் வெளியிடும் இதழ்களில் எழுதாமல் அவற்றைப் புறக்கணிக்க வேண்டும் என்று படைப்பாளர்களை, எழுத்தாளர்களை இக்கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது ‘ என்று நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் ஞாநிக்கு ஒப்புதலுடையதா என்பது பற்றியும் அவர் விளக்க வேண்டும். திராவிடர் கழகம், முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போன்ற அமைப்புகள் இத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதால் இது தலித்துகள் மற்றும் பத்திரிகைகளின் கருத்துச் சுதந்திரத்தின் மேல் தொடுக்கப்பட்டுள்ள தாக்குதலாக இருக்க முடியாது என்று ஞாநி கருதுவாரா ?

பா. ரெங்கதுரை

சியாட்டல், அமெரிக்கா

திண்னை. காம் இதழில்

தீம்தரிகிட இதழையும் நான் எழுதிவரும் இந்தியா டுடே, ஜூனியர் விகடன் கட்டுரைகளையும் தொடர்ந்து கவனித்து வரும் வாசகர்களுக்கு எல்லா விடயங்கள் குறித்தும் நான் தயங்காமல் கருத்து தெரிவித்து வருபவன் என்பது தெரியும். அக்கப்போர்கள், குழுச்சண்டைகள், அவதூறுகளை மட்டுமே நான் முடிந்த வரையில் ( முழுமையாக அல்ல) தவிர்த்து வருகிறேன். பெரியாரை தலித் விரோதி என்றோ சுய சிந்தனையாளர் அல்ல என்றோ சொல்லுவது முழுக்க முழுக்க தவறு என்று பல முறை நான் எழுதியாகிவிட்டது. பெரியார் பற்றிய என் டி.வி தொடரில் கூட இது சொல்லப்பட்டிருக்கிறது. அதே போல தலித்துகள் பிரச்சினையைப் பற்றி தலித்தாகப் பிறந்தவர்கள் மட்டும்தான் எழுத வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதையும் தெரிவித்து வந்திருக்கிறேன். யாரும் எந்தப் பிரச்சினையைப் பற்றியும் தாங்கள் விரும்பும் கருத்தைப் பொது நாகரீகத்துக்கு உட்பட்டு சொல்லும் முழு உரிமையுடையவர்கள் என்பதும், அப்படி சொல்லும்போது, அவர்களுடைய சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இருக்கிறதா என்பதை ஆராய்வதே நமது கடமை என்றும் கடந்த முப்பதாண்டுகளாக நான் எழுதி வருகிறேன். என் எல்லா கட்டுரைகளிலும் இந்தக் கருத்தின் அடி நாதம் ஒலிக்கக் காணலாம். சமூகத்தை பாதிக்கும் பொது நடப்புகள் குறித்து எழுத்தாளர்கள் பகிரங்கமாக கருத்து சொல்ல வேண்டும் என்று சுந்தர ராமசாமி இப்போது சொல்லியிருப்பதை வரவேற்றுத்தான் நான் அவரும் எல்லா விஷயங்களிலும் கருத்து சொல்ல வேண்டும் என்று வற்புறுத்துகிறேன். சமூகத்தை பாதிக்கும் விஷயங்களை விடுங்கள். எழுத்தாளர்களின் உரிமையை பாதிக்கும் விதத்தில் குமுதம் கடந்த சில ஆண்டுகளாக அதன் இதழில் வெளிவரும் படைப்புக்கெல்லாம் பதிப்பாளரே உரிமையாளர் என்று ஒவ்வொரு இதழிலும் அறிவித்து வருகிறது. அதை கடந்த மூன்று ஆண்டுகளாக தீம்தரிகிட மட்டுமே தொடர்ந்து கண்டித்து வருகிறது. குமுதம் தீரா நதி இதழில் தொடர்ந்து எழுதும் சு.ரா இது பற்றி இதுவரை ஏன் பகிரங்கமாக கருத்தே தெரிவிக்கவில்லை என்பதை ரங்கதுரை தயவுசெய்து கேட்டுச் சொல்வாரா ?

ஞாநி

தீம்தரிகிட ஜனவரி 1-15, 2005 இதழிலிருந்து

dheemtharikida @hotmail.com

2.

ஞானம் கெட்டவர்களின் கோணல் பார்வை! – மாயவரத்தான்

தமிழகத்தில் ஜாதி அரசியல் இல்லாவிட்டால் பல அரசியல்வா(ந்)திகளுக்கு பிழைப்பே கிடையாது என்பது அனைவரும் அறிந்ததே.அதே போன்று, பிராமணர்களையும், பிராமணியத்தையும் மூச்சுக்கு முன்னூறு தடவை தாக்கி எழுதாவிட்டால் ஒரு சில ‘ஞானமற்றவர்களுக்கு ‘ பிழைப்பே கிடையாது போல! ஜெயலலிதா அரசின் ஏதாவது ஒரு முடிவு பிடிக்கவில்லையா…உடனே ஜெ.வின் ‘பார்ப்பனிய ‘ தன்மையை சாடு! சங்கராச்சாரியார் கைதா…அதற்கும் பார்ப்பனியத்தை தான் தாக்க வேண்டும். அப்போது கைதை தைரியமாக நடத்திய தைரியலட்சுமியின் ‘பார்ப்பனிய ‘ பின்புலத்தை வசதியாக மறைத்து விடுவார்கள். அட…ஈ.வெ.ராமசாமியின் பிறந்த, இறந்த நாள்களுக்கு கட்டுரை எழுத வேண்டுமா ? உடனடியாக அவரது சாதனைகள் எதுவும் இருந்தால் அதை கூறுவதை விட்டு விட்டு, பார்ப்பனியத்தை தாக்குவது தான் முழுமுதல் கடனாக செய்து வருகிறார்கள்.

எல்லாவற்றிலும் ‘உள்நோக்கம் ‘ என்று இல்லாத ஒன்றை தானாகவே எழுதி வரும் இவர்களது இந்த மாதிரியான தாக்குதலுக்கு உண்மையான உள்நோக்கம் என்ன தெரியுமா ? ‘இயலாமை ‘ தான்! வெகுஜனப்பத்திரிகைகள் என பலவற்றிலும் புகுந்து பார்த்தாகிவிட்டது. ஆனாலும் எதுவுமே கை கொடுக்கவில்லை. வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்த ஒரு வாரப் பத்திரிகையை ஒரே வருடத்தில் மூடு விழா நடத்தி தலை தெறிக்க ஓடி வந்தாகி விட்டது. அதற்குப் பிறகும் எந்தப் பத்திரிகை தான் தைரியமாக இவரை வைத்து பத்திரிகை நடத்த முன் வருவார்கள் ? இந்த இயலாமை எல்லாம் சேர்ந்து தான் வெறியாக மாறி ஒட்டு மொத்தமாக சீற வைக்கிறது. இப்படி எழுத ஆரம்பித்து, அது தொடர்ந்து இப்போதோ கண்ணில் படுகிற காட்சிகளனைத்தும் கெட்டதாகவே படுகிறது. தனது பார்வையில் குறையை வைத்துக் கொண்டு காட்சியில் பிழை காணுகிற இந்த மாதிரியான நபர்களிமிருந்து ஏக்கங்களையும், வசவுகளையும், பொருமல்களையும் தவிர வேறு எதையும் தமிழ் இலக்கியம் எதிர் பார்க்க முடியாது என்பது மட்டும் உண்மை!

– மாயவரத்தான் (info@mayiladuthurai.net

மாயவரத்தான் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் !

மாயவரத்தான் என்ற பெயரில் ஒளிந்துகொண்டிருக்கிற ஒரு வரின் பொய்கலைப் பிரசுரித்து என்னை அவதூறு செய்திருப்பதற்காக அவர் மீதும் திண்ணை,காம் இதழ் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவும் இழப்பீடு கோரவும் போதுமான நியாயங்கள் எனக்கு உள்ளன.

பார்ப்பனீயம் பற்றிய என் பார்வையிலிருந்து முரண்பட எல்லா உரிமையும் மாயவரத்தானுக்கு உண்டு. ஆனால் என் கருத்துக்களை மறுக்க இயலாத நிலையில், அதிரடியாக அவதூறுகளை வீசி தப்பிக்க முயற்சிப்பதும் பார்ப்பனீய உத்திகளில் ஒன்றுதான்.

எனக்கு உள் நோக்கம் கற்பித்து, என் இயலாமை என்று மாயவரத்தான் பிதற்ரியிருப்பது அத்தனையும் துளியும் உண்மை கலவாத அவதூறுகள். வெற்றிகரமாக நடந்துகொண்டிருந்த ஒரு வாரப் பத்திரிகைக்கு ஒரே வருடத்தில் நான் மூடுவிழா நடத்தியதாக உளறியிருக்கிறார்.

நான் பொறுப்பேற்ற ஒரே வார இதழ் ஜூனியர் போஸ்ட். அதன் ஆசிரியர் திரு பாலசுப்பிரமணியன் 1992ல் என்னை பொறுப்பேற்க அழைத்த போது அந்த இதழ் சுமார் 30 ஆயிரம் பிரதிகள் விற்றுக் கொண்டிருந்தது. நான் பொறுப்பேற்று அதன் உள்ளடக்கத்தை முற்றிலும் மாற்றி, விற்பனையை ஓராண்டுக்குள் 80 ஆயிரம் பிரதிகளாக்கினேன். அதன் பிறகு தொலைக்காட்சியில் சிறுவர் தொடர் தயாரிக்கச் சென்றேன்.நான் விடைபெற்ற பிறகு ஜூனியர் போஸ்ட்டுக்கு நான் அளித்த கேரக்டரிலிருந்து மாற்றி மேலும் ஓராண்டுக்கு மேல் அதை நடத்தினார்கள். விற்பனை பழையபடி 30 ஆயிரத்தை அடைந்ததும் அது மூடப்பட்டது. ஏழாண்டுகள் கழித்து அதே நிறுவனம் என்னை அழைத்து சிறுவர்களுக்கான இதழை உருவாக்கும் பொறுப்பை அளித்தது. அந்தத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டிருந்தபோது, விகடனுக்காக கார்கில் யுத்தம் பற்றி நேரில் கண்டு எழுதவும் என்னை அனுப்பி வைத்தது. சுட்டி விகடனின் பொறுப்பாசிரியராக அதை நான் வடிவமைத்தபோது, தமிழில் ஒரு சிறுவர் இதழும் 20 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்கும் நிலை இல்லை. முதன்முறையாக 40 ஆயிரம் பிரதிகளுக்கு மேல் விற்கும் நிலையை நான் சுட்டி விகடன் வாயிலாக ஏற்படுத்தினேன். இதழின் சார்பில் ஓவியப்பயிற்சி முகாம்கள் நடத்தி இதழை சிறுவர்களிடையே மேலும் பிரபலமாக்கினோம். உடல் நிலை நலிவு காரனமாக ஓராண்டு இறுதியில் நான் விலகியபோது இதழின் விற்பனை ஏறுமுகத்தில் இருந்தது. என் வழிகாட்டுதலில் உருவான ஆசிரியர் குழு தொடர்ந்து அங்கு இயங்குகிறது. இதழ் விற்பனை அடுத்த நான்காண்டுகளில் லட்சத்தை தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. என் முழுப் பொறுப்பில் இருந்த எந்த இதழும் விற்பனை குறைந்து மூடப்பட்ட சரித்திரமே என் 30 ஆண்டு பத்திர்கை வாழ்க்கையில் இல்லை. ஒவ்வொரு இதழும் என் பொறுப்பில் வரும்போது முன்பிருந்ததை விட அதிக விற்பனையையும், தரம் பற்ரிய மரியாதையையும் கூடுதலாக அடைந்தன என்பது வரலாறு. நானே நடத்திய தீம்தரிகிட இதழ் இரு முறை நிறுத்தப்பட்டதற்கும் காரணம் சுழற்சி மூலதனம் இல்லாமையே தவிர , விற்பனை இன்மை அல்ல. வெகுஜன இதழ்களில் முழுச் சுதந்திரத்துடன் எழுத இயலாத மீடியா சூழ் நிலை பி.ஜே.பி ஆட்சியைப் பிடித்த பிறகு ஏற்பட்ட நிலையிலேயே மறுபடியும் தீம்தரிகிட என்னால் தொடங்கப்பட்டு, தொடர்ந்து 29 இதழ்கள் கடந்த மூன்றாண்டுகளில் வெளிவந்துள்ளன. இதே சமயம் வெகுஜன இதழான இந்தியா டுடே கேட்டதன் பேரில் அதில் தொடர்ந்து தனிப்பத்தி இரண்டாண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறேன். ஜூனியர் விகடன் கேட்டதன் பேரில் அவ்வபோது அதிலும் கட்டுரைகள் எழுதி வருகிறேன். அண்மையில் கூட கும்பகோணம் கொடுமை, ஊழலின் வேர் ஆகிய பிரச்சினைகள் குறித்து அதில் தொடர்கள் எழுதினேன்.

இயலாமை எனக்கு இல்லை. மாயவரத்தானுக்கே உள்ளது. என் கருத்துக்களுக்கு கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமை. அதை மறைக்கவே இந்த அவதூறுப் பிரசாரம்.

முற்றிலும் உண்மைக்கு புரம்பாக அவதூறு செய்திருக்கும் மாயவரத்தானும் அதை வெளியிட்ட திண்ணையும் உடனடியாக நிபந்தனையற்ற மன்னிப்பை பகிரங்கமாகக் கோரவேண்டும். தவறினால் இந்தியாவின் சைபர் சட்டத்தின் கீழும் அவதூறு தடைச் சட்டத்தின் கீழும் சட்டப்படியான நடவடிக்கைகளை நான் மேற்கொள்லவேண்டி வரும்.

ஞாநி

31-12- 2004

Series Navigation

ஞாநி

ஞாநி