கடிதம் செப்டம்பர் 16,2004

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

நாக.இளங்கோவன்


இந்து மதம் என்றால் எது ? என்ன ?

என்று சரியாக எத்தனை பேருக்கு தெரியும்

என்பது அய்யப்பாடே!

இதைச் சொல்வது கூட சிலருக்கு எரிச்சலாக

இருக்கக் கூடும்.

அவர்களின் பொன்னான மனம் புண்ணாவதாக

அங்காலாய்க்கக் கூடும்!

இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்துக்குக் கூட

இந்து மதம் என்றால் என்ன என்று சரியாகத் தெரியாது.

அதிலே, ‘யார் இசுலாமியர் இல்லையோ, யார் கிறித்துவரும்

இல்லையோ ‘ அவர்களை இந்து மதத்தைச் சேர்ந்தவர்களாகக்

கருதலாம் என்றுதான் இருக்கிறது.

இப்படி, இந்திய அரசியலமைப்பிற்கே குழப்பமாக

இருக்கும் இந்து மதத்தை வைத்துக் கொண்டு

சந்திலே சிந்து பாடித்திரியும் இராமகோபாலன்கள்

பரிதாபத்திற்குரியவர்கள்.

கலைஞர் இந்து மதத்தைத் தாக்கிப் பேசுகிறாரே

என்று சிலருக்கு தாங்க முடியாத எரிச்சலும்

பலருக்கு குழப்பமும் இருக்கக் கூடும்!

எரிச்சல் கொள்வோரைப் பற்றிக் கவலைப்படவேண்டியதில்லை.

திராவிடம், தமிழ் என்றாலே எரிச்சல் கொள்வோரிடம்

வேறேதும் எதிர்பார்க்க ஏலாது.

ஆனால், குழப்பமடைவோர் சிந்திக்க சில உண்டு!

கலைஞர் சிவ சமயத்தையோ, வைணவ சமயத்தையோ

தாக்கிப் பேசியிருக்கிறாரா என்று சிந்திப்பது

சரியானதாக இருக்கும்.

கலைஞரின் மேடைகளில் சிவநெறியாளர்கள்,

ஆதீனத் தலைவர்கள் பங்கு கொள்கிறார்களே,

ஆனால், இராமகோபாலன்களைப் பார்த்ததில்லையே

ஏன் என்று சிந்திப்பது சரியானதாக இருக்கக் கூடும்.

வேறொன்றுமில்லை! சிவமும் மாலியமும் இந்தத் தமிழ்

மண்ணின் ஆதி மதங்கள்.

சிவவழிபாடு, திருமால் வழிபாடு மட்டுமல்ல,

கவுமார சமயத்தின் முருக வழிபாடும்,

சாக்கியத்தின் சக்தி வழிபாடும் இம்மண்ணின் தொன்மையான

சமய நெறிகள்.

பழனியிலும், சிங்கையிலும், கோலாலம்பூரிலும், கண்டியிலும்

நடைபெறும் தைப்பூச விழாக்களையோ, முருக பக்தர்களையோ

கலைஞர் தாக்கியிருக்கிறாரா ?

மேல்மருவத்தூர் செல்லும் செவ்வாடை பக்தர்களை

கலைஞர் தாக்கியிருக்கிறாரா ? பங்காரு அடிகளாரோடு

ஒரே மேடையில் மேல்மருவத்தூரில் பேசியவர்தான் கலைஞர்.

சிவநெறியாளர்களை தம்மோடு மேடையில் வைத்துக் கொண்டதை

பார்க்காதவர் இருக்க முடியாது. குன்றக்குடி அடிகளார்

எத்தனை மேடைகளில் கலைஞருடன் இருந்திருக்கிறார்

என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

இவற்றையெல்லாம் எண்ணிப் பார்த்தால், பல விடைகள்

கிடைக்கக் கூடும். தமிழர்கள் இந்துக்களா ?

என்ற வினா மனதில் தோன்றும்.

இராமேசுவரம்,அண்ணாமலை மற்றும் பல

சிவத்தலங்களில் சிவனை தரிசிக்க காத்திருக்கும் சிவபக்தர்கள்,

திருவரங்கப் பெருமாளையும், வேங்கடப் பெருமாளையும்

காய்வதில்லை. மாறாக தில்லையில் சிவனையும், அறிதுயில் அரங்கனையும்

ஒரே இடத்தில் இருந்து வணங்குகிறார்கள்.

சக்திவழிபாட்டிற்கு மேல்மருவத்தூர் செல்லும் பக்தர்கள்,

அங்கே கிறித்துமசு விழாவின் போது வைக்கப் பட்டிருக்கும்

விழாக்கோலத்தில் வைக்கப் பட்டிருக்கும் ஏசுநாதரைக் கண்டு

அருவெறுப்படைவதில்லை. பங்காரு அடிகளார் அம்மன் பக்தராயிருந்தாலும்

அங்கே கிறித்துவ மதத்தின் கடவுளையும் கிறித்துமசு காலத்தில்

வைக்கத் தயங்கியதில்லை.

பழனிக்குக் காவடிதாங்கிச் செல்லும் பக்தர்கள்,

வேலைத்தூக்கி வேறு மதம் அல்லது நெறியினரைக்

குத்துவதில்லை.

நாகூர் தர்காவிற்கு நேர்த்தி செய்யப் போகும் எத்தனையோ

தமிழர்களைப் பார்த்திருப்போம்.

அப்படி, தழுவும் சமய நெறிகள் பலவாக இருப்பினும்

வெறி இல்லா குமுகாயமாக தமிழகம் இருந்து வருவது,

இந்த இராமகோபலன்களுக்கு மட்டும் எரிச்சலாக

இருக்கிறது.

இவர்களின் இந்துமதம்தான் இன்று வெறிபிடித்து

ஆடுகிறதே தவிர தமிழர்களின் சிவமும் வைணவமும்

அப்படிச் செய்வன அல்ல!

அதனால்தான் எத்தனையோ கூத்துகள் ஆடியும்

தமிழ் மண்ணில் தன் சரக்கு விலைபோக மறுக்கிறது

என்ற வெறுப்பில்தான் ‘மதப்பற்று இந்த (இந்து) மக்களுக்கு

இல்லை ‘ என்று புலம்பி யிருக்கிறார் இராமகோபாலன்.

அந்தப் புலம்பலின் தொடர்ச்சிதான் கோபாலபுரத்து

சந்துகளில் ஊர்வலம் போய் பகவத்கீதையை

கலைஞருக்குப் பரிசளித்த பண்பு!

கலைஞர் பகவத்கீதையை படித்திருக்க மாட்டார் பாருங்கள் 😉

ஆயினும் அதை வாங்கிக் கொண்டு, கீதையின் மறுபக்கத்தை

இராமகோபாலன் கையில் திணித்துவிட்டு

இராமகோபாலனை நாமகோபாலனாக்கி அனுப்பி வைத்திருக்கிறார்

கலைஞர்.

தமிழ்மண்ணில் மிகப்பெரும்பான்மையானவர்கள் சிவனையோ,

திருமாலையோ, முருகனையோ, அம்மனையோ வணங்குபவர்கள்.

பெரியார் எத்தனையோ இக்கடவுளரைத் திட்டியும் கூட

தமிழர்கள் பெரியார் பால் துளியும் வெறுப்புற்றார்கள் இல்லை.

அதுபோல, கலைஞரை இந்து மத எதிரியாக காட்டிவிடத்துடிக்கும்

பலர் உணரவேண்டியது என்னவெனில், தமிழ்மக்கள் அதற்காக

கலைஞரை வெறுத்து விட மாட்டார்கள் என்பதைத்தான்.

மாறாக, ‘கலைஞர் இந்து மத எதிரி ‘ என்று சொல்வது

உண்மையில் தமிழர்களை சிந்திக்கத்தான் வைக்கும்.

வடக்கே சமணத்திடம் தாக்குப் பிடிக்கமுடியாமல்,

தெற்கே சைவத்திடமும் வைணவத்திடமும் ஒண்ட வந்த

வைதீகம், இந்து என்ற முகமூடியில்,

ஒண்ட வந்த பிடாரி ஊர்ப்பிடாரியை விரட்டியது போல,

சைவத்தையும் வைணவத்தையும் தனது முகவரிக்குள்

கொண்டு வந்த கதையெல்லாம் சிந்திக்க வைக்கும்!

அது இந்துமதத்தின் புழுக்கத்தில் இருக்கும்

சிவத்துக்கும் மாலியத்துக்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.

கிறித்துவர், இசுலாமியர் அல்லாதார் எல்லாம்

இன்று இந்துக்கள் என்று சான்றிதழ்களில் குறிக்கப் படும்

காலம் மாறி, சைவராகவோ, வைணவராகவோ

குறித்துக் கொள்ளும் காலம் வரவேண்டியதன்

அவசியத்தைப் பற்றி சிந்திக்கத் தூண்டும்!

இசுலாமியரையும், கிறித்துவரையும் கலைஞர்

திட்டுவதில்லையே என்பவர்கள், சைவத்தையும் வைணவத்தையும்தான்

திட்டுவதில்லையே ஏன் ? என்று சிந்திக்க வைக்கும்.

ஆகவே, இராமகோபலன்களே, ‘தொடர்ந்து

இந்து மதத்தின் எதிரியாக கலைஞர் மற்றும் பல தலைவர்களைச்

சித்தரியுங்கள். இதுவும் காலத்தின் கட்டாயம் ‘!

சிவனையும் சித்தனையும் வணங்கிக் கொண்டு

முழுச் சிவ நெறியாளர்களாக இருந்தும்

இந்து என்ற முகமூடியில் தன்னை இழந்திருக்கும்

பல சைவர்களுக்குக் கொஞ்சம் மயக்கம் தெளியட்டும்.

அன்புடன்

நாக.இளங்கோவன்

nelan@rediffmail.com

(நீக்கங்கள் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

நாக.இளங்கோவன்

நாக.இளங்கோவன்

கடிதம் செப்டம்பர் 16,2004

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

பா. சத்தியமோகன்.


இனிய ஜெயமோகனுக்கு

என் உள்ளார்ந்த தவிப்போடும் பயத்தோடும் தொடங்கப்பட்ட பெரியபுராணத்

தொடருக்கு மிகவும் நியாயமான ஒரு காரணத்தை பக்தியன்றி வேறொன்றை

என்னால் சுட்டமுடியவில்லை. நெஞ்சைப் பிசையும் நாயன்மார்களின் வாழ்வை

தாக்கத்தோடு கவிநயத்தில் பின்னிப்பிணைந்த தெய்வக்கவி சேக்கிழாரின்

தமிழே தாரசக்தித் தூண்டுதலாக எண்ணுகிறேன்.

நான் எடுத்துக் கொண்ட இந்நெடிய பயணத்திற்கு தரவு தெரிவித்த தமிழின்

மிகப்பெரிய ளுமையான ஜெயமோகனுக்கு என் நெகிழ்வான நன்றி.

சற்று முன் நான் கண்ட ஜெயமோகனின் வாழ்த்துக் கடிதம் என் கூடவே நடந்து வந்து

என் தோளில் தட்டி பாராட்டி என் நெஞ்சில் முத்தமிட்டது.

அவரது அன்புத் தமிழ் நெஞ்சத்தை வெளிப்படுத்தியது. எனது பணிக்கு

அங்கீகாரமும் பயனும் வாழ்த்தும் தந்து என்னை ஊக்கப்படுத்திய அவரது கடிதம்

எனக்கு தெம்பு தந்துள்ளது.

பெரியபுராணத்திற்கு இது எழுத்துபூர்வமான முதல் வரவேற்பு.

மீண்டும் நன்றி. மிக்க நெகிழ்வுடன்,

பா. சத்தியமோகன்.

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்

கடிதம் செப்டம்பர் 16,2004

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

இப்னு பஷீர்


ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி அதை உண்மையாக்கி விட வேண்டும் என்று அரவிந்தன் நீலகண்டன் பாடுபடுகிறார். சாவர்க்கரைப் பற்றி அவருடனேயே சிறையில் இருந்தவர் சொன்ன செய்தி, ‘தி ஹிண்டு வின் அரைவேக்காட்டுப் பத்திரிக்கை செய்தி துணுக்காக ‘ தெரிகிறதாம். அதே அரைவேக்காட்டு ஹிண்டு வின் உடன் பிறப்பான ப்ரண்ட்லைன் பத்திரிக்கையில் வெளியான தற்காலத்தவரான அனந்த கிருஷ்ணனின் ஒரு கடிதம் ஆதாரபூர்வமானதாக தெரிகிறதாம். ஏதாவது புரிகிறதா ?

இப்னு பஷீர்

ibunubasheer@yahoo.com.sg

Series Navigation

இப்னு பஷீர்

இப்னு பஷீர்

கடிதம் செப்டம்பர் 16,2004

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

சூரியா


Last came Jeyamohan, the current superstar in contemporary Tamil literature. He spoke with the confidence of a succesful writer. And he spoke in his natural language without any rhetorics. His focus was that the little magazines have given the writers a lot of freedom to experiment, but were getting bogged down in ego issues. He also felicitated Uyirmmai for catering to a broad readership, and giving space to various schools of thoughts

ஒரு இணையப்பக்கத்தில் [ http://chenthil.blogspot.com/2004/08/literary-meeting-genius-writers-and.html ] நான் பார்த்த வரிகள் இவை. உயிர்மைக் கூட்டத்தைப்பற்றி. மரத்தடி குழுமத்தில் வெளியான அறிவிக்கைகளிலும் ஏறத்தாழ இதே வரிகள் இருந்தன. திண்ணை இணைய இத்ழில் தமிழ் மணவாளன் எழுதியதில் ெ ?யமோகன் அலங்காரமாக பேசினார் என்றிருக்கிறது. எனக்குத்தெரிந்து தமிழிலக்கியப்பரப்பில் எவருமே அலங்காரமாகபேசுவது இல்லை. ெ ?யமோகன் அவரது வட்டாரக்கொச்சையுடன் பேசுபவர். இம்மாத்ரியான குறிப்புகளின் உள்நோக்கங்கள் மலினமானவை

சூரியா

suurayaa@rediffmail.com

Series Navigation

சூரியா

சூரியா

கடிதம் செப்டம்பர் 16,2004

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

சின்னக்கருப்பன்.


அன்புநிறை நண்பர் பித்தனுக்கு,

நீங்கள் கூறுவது உண்மைதான். ஆட்சிக்கு வந்து 100 நாட்களே ஆனவர்களிடம் வேலை வாய்ப்பு செய்து தரவில்லை என்று கேட்பது சரியல்லதான். ஆனால், நான் அவ்வாறு கேட்கவில்லை. திரு சிவராஜ் பாட்டில் அவர்களது அணுகுமுறையே என் விமர்சனத்துக்குக் காரணம். மணிப்பூரில் இருக்கும் பிரச்னையின்வேர் மூலமே காங்கிரஸ்தான். அதிலும் முக்கியமாக நேரு. காஷ்மீர் பிரச்னையின் வேர்மூலமே காங்கிரஸ்தான். அதிலும் அந்த பிரச்னையை தீவிரப்படுத்தியது நேருவே. மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 100 நாட்களே ஆகியிருக்கின்றன என்று கூறுவதும் சரியல்ல. இடையில் வந்த பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சி தவிர சுதந்திரமடைந்து இதுவரை ஆட்சி செய்துவந்தது காங்கிரஸ் அல்லது காங்கிரஸிலிருந்து வெளியேறிய காங்கிரஸ் கலாச்சாரத்துடன் ஆட்சி செய்த ஜனதா கட்சியினர்தாம்.

மேலும் நீங்கள் குறிப்பிடும் திட்டங்கள் போல பல ஆயிரக்கணக்கான திட்டங்கள் காங்கிரஸ் கட்சியினரால் அறிவிக்கப்பட்டு நடுகல்கள் போல நாடெங்கும் நின்றுகொண்டிருக்கின்றன. அதனால்தான் நான் பாரதிய ஜனதா கட்சி கோல்டன் குவாட்டிலேட்டரல் அறிவிக்கும்போது , இது எந்தக் காலம் நிறைவு பெறும் என்ற தேதியோடு அறிவித்திருந்ததைப் பாராட்டினேன். அது ஏறத்தாழ இன்று நிறைவு பெற்றிருக்கிறது.

மேலும் பணத்தை பூட்டி வைத்தால் பொருளாதார வளர்ச்சி ஏற்படாது. இந்த பட்ஜட் பற்றி நான் தனியே ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். வரவுக்கு ஏற்ற செலவு செய்தால்தான் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பணவீக்கம் எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஒவ்வொரு மாதமும் 200 ரூபாய் (அப்போது பெரிய தொகை) சேமித்து வந்தவர்கள், இந்திரா காந்தி ராஜீவ்காந்தி காலத்தில் பைசா பெறாது என்பதை திடாரென்று உணர்ந்தார்கள்.

உதாரணமாக, பணவீக்கம் 10 சதவீதம் இருக்கும்போது, சேமிப்பு கொடுக்கும் வட்டி வீதம் 10 சதவீதமாக இருந்தால், உங்கள் பணம் அப்படியே இருக்கிறது, அதிலிருந்து உண்மையிலேயே கிடைக்கும் வட்டி சதவீதம் 0 என்று பொருள். பணவீக்கம் 3 சதவீதமாக இருந்து, சேமிப்பு கொடுக்கும் வட்டி வீதம் 8 சதவீதமாக இருந்தால், உண்மையிலேயே கிடைக்கும் வட்டி வீதம் 5 சதவீதம். 10 சதவீதம் வட்டி கொடுப்பது பெரிய விஷயமல்ல. 3 சதவீதமாக பணவீக்கம் இருக்கும்போது அதைவிட அதிகமாக வட்டி கொடுப்பதுதான் பெரிய விஷயம்.

பணவீக்கம் பெரும் ஆபத்து. உலகவங்கி பொருளாதார மேதைகளுக்கு அது தெரியாது. அவர்களைப் பொறுத்தமட்டில் அது இன்னொரு தோல்வியடைந்த பரிசோதனை. காமராஜர் போன்ற மக்கள் தலைவர்களுக்குத்தான் அதன் சொந்தக்கதை சோகக்கதை புரியும்.

மன்மோகன்சிங் உலகவங்கியில் பொருளாதார நிபுணராக இருந்தவர். உலகவங்கியின் அட்டூழியங்களுக்கு அவர் எந்த அளவு பொறுப்பாளி என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு ஆதரவாக, ஆப்பிரிக்கா தென்னமெரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளில், உலகவங்கி பண்ணிய அட்டூழியங்கள் இன்று ஆவணப்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்று இந்திய அரசுக்கு பொருளாதார ஆலோசனை சொல்ல உலக வங்கி, ஐ .எம். எஃப் ஆட்கள் என்று அமெரிக்க ஐரோப்பிய ஆட்களை கொண்டுவந்து உட்காரவைத்திருக்கிறார் மாண்டெக் சிங் அலுவாலியா. இவர் மன்மோகன் சிங்கால் திட்டக்கமிஷனின் டெபுடி சேர்மனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஐஎம்எஃப் (இண்டெர்நேஷனல் மானட்டரி ஃபண்டு) ஆள். இந்த அமெரிக்க ஐரோப்பிய ஆட்கள் இந்திய பொருளாதாரத்தை நிர்வகிப்பது மாபெரும் ஆபத்து. இதுபோன்றுதான் நடக்கும் என்று சோனியா பிரதமராகக்கூடாது என்று எழுதிய கட்டுரையில் எழுதியிருக்கிறேன். இந்த ஐரோப்பிய அமெரிக்க ஆலோசகர்கள் அர்ஜெண்டைனா, பிரேசில் போன்ற நாடுகளில் உருவாக்கிய தீயவிளைவுகள் நமக்குத் தெரியா வண்ணம் நம் பத்திரிக்கைகள் செயல்படுகின்றன. நான் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட இவ்வாறு மாண்டெக் சிங் அலுவாலியா நியமிக்கப்பட்டிருப்பதை எதிர்த்திருக்கின்றன.

ஐ எம் எஃப், உலகவங்கி போன்றவை எந்தக்காலத்திலும் எந்த நாட்டிலும் நல்லதை செய்ததே இல்லை. இந்த அமைப்புக்களின் அட்டூழியங்களை விவரித்து திண்ணையில் ஏராளமான கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன.

நட்புடன்

சின்னக்கருப்பன்.

Series Navigation

சின்னக்கருப்பன்

சின்னக்கருப்பன்

கடிதம் செப்டம்பர் 16,2004

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

பித்தன்


திண்ணை வாசகர்களுக்கு,

இந்த வாரம், இப்போது வெளியாகியிருக்கும் ஜீனியர் விகடனில் ‘ஸ்பெஷல் ‘ பகுதியில் (vikatan.com), அவர்தாம் பெரியார் என்ற அற்புதமான கட்டுரை வந்திருக்கிறது. சாதியை ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, மூட நம்பிக்கைகள் ஒழிப்பு போன்ற மக்கள் பிரச்சனைக்காகவே தம் வாழ் நாளைக் கழித்த ஒரு உத்தம சமுதாய சீர்திருத்தவாதியை, ‘அவர் சாதி ஒழிப்புக்காக என்ன செய்தார், அவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியா ‘ என்றெல்லாம் சில மூடர்கள் திண்ணையில் கேள்விக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களெல்லாம் இதைப் படிக்கலாம், படித்து உண்மையைத் தெரிந்து கொள்ளலாம். கோவில் இருக்கும் தெருவில் மற்ற மக்கள் யாரும் போகக் கூடாது போன்ற கீழ்தரமான கருத்துக்களை எதிர்த்து வைக்கமில் நடந்த போராட்டத்தை தந்தை பெரியார் எப்படி தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தினார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. தீண்டாமை பிரச்சனை எப்படி மோசமாக இருந்திருக்கிறது என்பதை மறைத்து, அதைக் களைய பாடுபட்டவரைப் பார்த்து இனவாதப் பிரச்சாரம் செய்தார் என்று உளறும் அசடுகள் இதைப் படித்து தெளியலாம்! பார்ப்பனர்களை எதிர்த்து அவர் வெளியிட்ட கடுமையான கருத்துக்களை இந்த மோசமான தீண்டாமை நிலையை வைத்தே நாம் பார்க்கவேண்டும். தெருக்களுக்குள் மக்கள் நடமாடவே கூடாது என்பது எப்படிப்பட்ட மோசமான தீண்டாமையாக இருந்திருக்கவேண்டும். மக்கள் தொகையில் எத்தனை சதவிகிதத்தினர் அந்தணர், எத்தனை பேர் படித்தவர்கள் அதில எத்தனை சதவிகிதம் அந்தணர், அரசுப் பணிகளில் இருந்தவர்கள் எத்தனை பேர் அதில் எத்தனை சதவிகிதம் அந்தணர் என்ற புள்ளி விவரங்களும் அந்த கட்டுரையில் காணப்படுகிறது. அந்தணர்களே அப்போது அதிகாரங்களில் இருந்தார்கள் என்பது ‘ஏன் பார்ப்பனரை மட்டும் பெரியார் தாக்கினார் ‘ என்பதற்கு பதிலாக இருப்பதோடு, மண்டல் கமிஷன்கள் மிகத் தேவையான ஒன்று என்பதையும் விளக்குவதாக இருக்கிறது. இப்போது பெரியார் இருந்திருந்தால் வைக்கத்தில் போராடியது போலவே திண்ணியங்களிலும் போராடியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை. எனவே அவர் பார்ப்பனீயத்தை மட்டும் தாக்கினார் என்பது அன்றைய தேவை என்பதால் மட்டுமே. மற்றபடி அவர் எல்லா சாதிவெறிகளுக்கும், தீண்டாமைக்கும் எதிரானவரே.

ஊழல் செய்து அரசியலில் பணம் பெறுவதையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும், அரசியல் லாபங்களுக்காக மத வெறியைத் தூண்டிக்கொண்டிருக்கும் அரசியல்வாதிகளை ஒப்பற்ற தலைவர்கள் என்று அழைத்துக்கொண்டிருக்கும் ம(ா)க்கள் பெரியாரைப் பார்த்து ஒரு உண்மையான பொதுநல தலைவர் எப்படி இருக்கவேண்டும் என்று தெரிந்துகொள்ளலாம். அவர் வகித்துவந்த 29 பதவிகளை விட்டுவிட்டு அரசியலில், பொதுவாழ்வில் ஈடுபட்டவர் பெரியார் என்றும், எந்தவித அரசுப் பதவியையும் கடைசிவரை ஏற்கவில்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அரசில் ஈடுபட்டால் பொதுநலம் போய் சுயநலம் வந்துவிடும் என்பதாலும், ஊழல்வாதியாக தம் கட்சியினர் மாறிவிடக் கூடும் என்பதாலும் தன் கட்சி, தேர்தலிலேயே போட்டியிடக் கூடாதென வழிவகுத்தவர் அவர். (அது பிடிக்காமல் அரசில் அங்கம் வகிக்க வேண்டுமென்ற கொள்கையாலேயே அண்ணா பிரிது வந்து கட்சி தொடங்கினார். அது தெரியாமல் பெரியார் ஒரு பெண்ணை மணந்ததால் தான் அண்ணா பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்தார் என்று ஒரு அசமந்தம் உளறுகிறது!). கொள்கையில் கடைசிவரை உறுதியாக இருந்தவர். கொள்கைக்காக, ‘ஒத்துழையாமை இயக்குத்துக்காக நீதிமன்ற புறக்கணிப்பு செய்து தனக்கு வரவேண்டிய லட்சக்கணக்கான ரூபாய் சொத்துக்களை இழந்தார் ‘ என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

முதிய வயதில் ஒரு பெண்ணை மணந்துகொண்டார் என்ற ஒரே காரணத்துக்காக (அந்த பெண்ணே விரும்பி மணந்திருந்தால் அதில் பேச ஒன்றுமில்லை என்றாலும்கூட) ‘பெரியார் பெண்ணியவாதியா, பெண்ணுரிமைப் பற்றிப் பேச அவருக்கு என்ன உரிமை இருக்கிறது. ‘ என்று அசட்டுக் கேள்வி கேட்பவர்களுக்காக அந்தக் கட்டுரையிலிருந்து சில வரிகளை தருகிறேன். ‘தீண்டாமை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, வகுப்புவாரி இட ஒதுக்கீடு, பகுத்தறிவு, சுயமையாதை போன்ற பெரியாரின் கொள்கைகள் அளவுக்கு முக்கியமானவை, அவருடைய பெண்ணுரிமைக் கோட்பாடுகள். தன் மனைவி நாகம்மாள், தங்கை கண்ணம்மாள் இருவரையும் போராட்டங்களுக்குத் தலைமை ஏற்க வைத்தார். சடங்குகள் இல்லாத எளிமையான சுயமரியாதை திருமண முறையை அறிமுகப் படுத்தியவர் அவர்தான். திருமணம் செய்யும் உரிமை, செய்யாமலிருக்கும் உரிமை, பிடிக்காத திருமணத்திலிருந்து வெளியேறும் உரிமை, திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழும் உரிமை, குழந்தை பெறும் உரிமை, பெறாமல் இருக்கும் உரிமை இவையெல்லாம் பெண்ணுக்கு உரிய உரிமைகள் என்று அவர் முன்னோடியாக பிரசாரம் செய்திருக்கிறார். பெண்களுக்கு எல்லா உத்யோகத்திலும் சரி பாதி இட ஒதுக்கீடு செய்யவேண்டுமென்று 80 ஆண்டுகளுக்கு முன்பே தீர்மானம் போட்டவர் அவர். ‘ இந்த வரிசையில் விதவைப் பெண்களின் மறுமணம் விட்டு போயிருக்கிறது. இன்னும் கூட இந்த உரிமைகளில் பலவற்றைப் பெண்கள் பெறமுடியாமல் இருப்பதையும், பெண்களுக்கான இட ஒதுக்கீடு சட்டமாகாமல் தள்ளிப் போய்க்கொண்டேயிருப்பதையும் பார்த்தாலே பெரியார் எப்படிப் பட்ட, அருமையான, முற்போக்கானக் கொள்கைகளைக் கொண்டிருந்தார் என்பது விளங்கும்.

இதைப் படித்தவுடன் ‘உட்காருமிடம் ‘ எரிந்து ‘ஈவேரா பிரச்சாரம், இனவாதப் பிரச்சாரம் ‘ என்றெல்லாம் புலம்பி ‘திக காரன், பெரியார் விசிறி ‘ என்றேல்லாம் எனக்கு பட்டமளிக்கப் போகிறார்கள் என்பதில் சந்தேகமில்லை. (அதற்காக ஒரு கும்பலே திண்ணைப் பக்கம் இருக்கிறது, எனினும் எனக்கு கவலையில்லை.) நான் முன்பே குறிப்பிட்டபடி மற்றவர்களைப் படிப்பதுபோலவே பெரியாரையும் படிக்கிறேன் என்பதைத் தவிர எனக்கும் பெரியாருக்கும் ஒரு சம்பந்தமுமில்லை. ஒரு மாபெரும் தலைவரை, சமூகத் தொண்டரை, சீர்திருத்தவாதியை, கொள்கைப் பிடிப்புக்கொண்டவரை, 97 சதவிகித மக்களுக்காகவும் போராடியவரை, நாட்டுகுத்தேவையான மிக மிக முக்கியமானக் கருத்துக்களை சொன்னவரை, சமூக நீதிக்காக போராடியவரை, எல்லா மக்களும் சமம் என்ற சுயமரியாதையை ஏற்படுத்தியவரைப் பார்த்து, ஒன்றுமில்லாத சாதி, மத வெறியர்கள் அவதூறாகப் பேசி, அவரை மோசமானவராக சித்தரிக்க முயலுவதாலேயே நெஞ்சு பொறுக்காமல் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கிறேன். அருமையான அந்தக் கட்டுரையை எழுதிய ஞாநி அவர்களுக்கு நன்றி.

-பித்தன்.

piththaa@yahoo.com

Series Navigation

பித்தன்

பித்தன்