சமைந்தவர்கள்(பிறைநதிபுரத்தானுக்கான பதில் அல்ல இது. சமைந்தவர் அத்தனைபேரின் பார்வைக்கும்…)

This entry is part [part not set] of 45 in the series 20040916_Issue

தாஜ்


***

அவர்கள் பேசுகின்றார்கள்

தொப்புள் கொடி வழி வந்த

பல் வரிசைகளும் நீள

வாடை வீச்சம் தரும்.

கோரைப் பற்களிடையே

கேள்விகளற்ற அம்மொழி

இறந்த காலத்தினது பெரும் சப்தம்.

*

பின்னல் அழகாய்

நேற்றை

நாளைக்குள் நுழைப்பார்கள்

கர்ணக் கட்டுக்குள்ளே

வாழ்வின் விஸ்தீரணத்தைத்

திணிப்பார்கள்

மனிதர்களுக்கெல்லாம்

வர்ணம் பூசி நிற

நிறமாய்க் காண்பார்கள்.

*

ஒளிபுகா மண்டபங்களில்

இசைநயம் தவிர்த்து

ராக ஆலாபனையையும் விடுத்து

திக்கிற்கொருவராய்

குதிகுதித்து

பல்லவியை மட்டுமே பாடுவார்கள்.

எதிர்படுபவர்களை எல்லாம்

பூர்வ சந்தோஷம் துளிர

முரண்பாடுகளேயென

விளிப்பார்கள்

பாவம் அவர்கள்

சக மனிதர்கள் என்ற

நம் ஸ்நேகிதர்கள்.

***

தாஜ்

tahwhite@rediffmail.com

Series Navigation

தாஜ்

தாஜ்