கடிதம் செப்டம்பர் 2, 2004

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

பிறைநதிபுரத்தான்


திண்ணை வாசகர்களுக்கு,

தாங்கள் சொல்வது மட்டும்தான் உண்மை, தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற அகந்தையில் எழுதும் காவி கோமாளிகளுக்கு பதிலடி கொடுப்பதில் எவ்வளவு நேரத்தை வீணடித்தாலும் – அதிலே ஒரு அலாதியான இன்பம் என்பதால் தான் நான் தொடர்ந்து எழுதுகிறேன்.

பகுத்தறிவை உபயோகித்து வாழ் என்று சொன்ன பெரியாரைப்பற்றி திண்ணையில் மட்ட மலின பிரச்சாரம் நடத்தியவர் கூறுகிறார் ‘உன் அறிவால் தேர்ந்தெடுத்து நீ நன்றாக வாழ்வாயாக ‘ என்பதுதான் சுதந்திர ஹிந்து மதத்தின் ஆனி வேர் என்று.

‘உன்னை படைத்து, காத்து பரிபாலிக்கும் எனக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டும் ‘ என்ற இஸ்லாமிய இறைவேதம் இரனியக்குரலாக தெரிகிற மேதாவிக்கு, ‘நான் மட்டும்தான் தலையிலிருந்து படைக்கப்பட்டேன் அதனால் மற்ற பாகங்களிலிருந்து படைக்கப்பட்ட நீங்கலெல்லாம் எனக்கும் என் சாதிக்கும் அடிமையாகி சேவகம் செய்ய வேண்டும் ‘ என்கிற குரலுக்கு என்ன பெயர் சூட்டலாம் என்று சொல்லவேண்டும் ?

மலமும் மூத்திரமும் சுமக்கிறவர்களை, மனிதனுக்கே உரிய பசி, தாகம், உறக்கம், இறப்பு உள்ளவர்களை ‘நடமாடும் தெய்வங்களாக ‘ அழைக்கும் முன் எத்தனை அறிவியல் சோதனைகள் நடத்தப்பட்டன என்பதை இயன்றால் கூறலாம் ?

இறைநூலோடு – ஆரிய நூல்களை ஒப்பிடவேண்டும் என்று வாய்ச்சவடால் பேசுபவர்க்கே நன்றாக தெரியும், தான் சார்ந்தது ‘இனிமேல் தேறவே தேறாது ‘ என்று.

மாடனையும், முனீஸ்வரனையும் கோவிலுக்கு வெளியே, வெயிலிலும் – மழையிலும் நிற்க விட்டு காவல் தெய்வங்களாக்கி – கருவறையில் வசதியாக அமர்ந்துக் கொண்டு பாலிலும் – தேனிலும் குளிக்கும் ஆரிய தெய்வங்களின் ஆதிக்கம்தான் தொடர்கிறது என்ற உண்மையை அறியாதது போல் நடிக்கலாம்.

பல வேத மந்திரங்கள் பார்ப்பனரல்லாதவரால் கொடுக்கப்பட்டிருக்கலாம் – மறுக்கவில்லை. ஆனால், அவைகள் நடைமுறை என்ன ?

எண்ணிக்கை குறையாமல் போதும் என்று ஆளுக்கும் நேரத்திற்கும் தகுந்தாற்போல் வளைந்து – பணிந்து- கூட்டி- குறைத்து – முரன்பாடுகள் அனைத்தையும் பூசி மொழுகி ‘எது எடுத்தாலும் பத்து ரூபாய்தான் ‘ என்று சாலையோரங்களில் கூவி விற்பதைப்போல ‘எல்லாமே இஸ்லாம் தான் ‘ என்று கூறி எண்ணிக்கையை அதிகரிக்கும் மத வியாபாரத்தனம் இஸ்லாத்தில் இல்லை.

அயோத்தியில் பாப்ரி மஸ்ஜித் இருந்த இடத்தை இராம ஜென்ம பூமி என்று அழைத்து – பாப்ரி மஸ்ஜிதுக்கு அடியில் அன்னை சீதா பிராட்டியார் பயன்படுத்திய ‘குசினி ‘ இருந்ததாக பேசிய கும்பலை சேர்ந்த இவர் – இராமர் எங்கு பிறந்தார் என்பதல்ல கேள்வி என்று அதிசயக்கும் வண்ணம் அந்தர் பல்டி அடிக்கிறார்! உண்மையிலேயே, பாப்ரி மஸ்ஜித் – கோவிலை இடித்துவிட்டு கட்டப்பட்டதாக இருந்திருந்தால் – சமாதான பேச்சு – அமைதியான தீர்வு என்று அனுப்பிக்கொண்டிருப்பார்களா சங் பரிவாரத்தினர். ? சென்னை தியாகராய நகரில், பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் எவ்வாறு ‘திடார் பிள்ளையார் ‘ வந்ததோ அதே போலத்தான், பாப்ரி மஸ்ஜிதுக்குள் ‘ராமர் சிலை ‘ நுழைக்கப்பட்டது. உண்மை தெரிந்ததும் பிள்லையார் சிலையை தூக்கிக்கொண்டு எவ்வாறு ஓடினார்களோ அதே போல பாப்ரி மஸ்ஜிதிலிருந்து ஓடும் காலம் விரைவில் வரும்.

பாபா சாஹேப் அம்பேத்கார் எழுதிய ‘Riddle in Hinduism ‘ படிக்க தொடங்கியிருக்கிறேன் முடித்த பிறகு அவரின் இஸ்லாம் பற்றிய விமர்சனத்தை படித்து விட்டு கருத்து கூறுகிறேன்.

பிரிவினை கேட்ட ஜின்னா நீசராம் ஆனால் – I have no quarrel with Mr. Jinnah ‘s two nation theory. We Hindus are a nation by ourselves and it is a historical fact that Hindus and Muslims are two nations. ‘ என்று கூறி ஜின்னாவுக்கு ஒத்து ஊதிய சவர்கார் நேசராம்! வீரராம் (!) (URL: http://www.thehindu.com/2003/02/26/stories/ 2003022603861300.htm ). அம்னீஷியாவா ?.

அனைத்து சீக்கிய குரு பெயர்களும் இந்துப்பெயர்கள்தானாம். தம்பட்டம் அடித்துக்கொள்கிறார் . இருக்கட்டுமே பெயர் இருப்பதால் தங்களை இந்துக்கள் என்றா சீக்கியர்கள் அழைத்துக்கொள்கிறார்கள் ? அவர்களை இந்துக்கள் என்று அழைத்த சங் பரிவாரத்தை அவ்வாறு அழைக்கக்கூடாது என்று கண்டித்தது தெரியாதோ ?

மிகவும் பெருந்தன்மையாக, எனக்கு பூநூல் போட்டு அந்தனராக்குவதற்கு விடுத்த அழைப்புக்கு நன்றி. காலத்திற்கு ஏற்ற நிலைத்தன்மையில்லாமல், ஜெயேந்திரர் போன்ற நடமாடும் தெய்வங்களிலிருந்து – ஜெயலலிதா போன்ற அரசியல் வாதிகளின் கூட்டல் கழித்தல்களுக்கு ஆளாகி மாறிக்கொண்டு இருக்கின்ற இந்து மதத்தின் கொள்கை-கோட்பாடுகள் முதலில் முழுமை பெற்று – இந்து மதம் பூர்த்தி பெற்றதும் (!) எனக்கு சொல்லியனுப்பவும்..

எதிர் வினை இன்னும் தொடரும்…

say_tn@hotmail.com

Series Navigation

பிறைநதிபுரத்தான்

பிறைநதிபுரத்தான்

கடிதம் செப்டம்பர் 2, 2004

This entry is part [part not set] of 50 in the series 20040902_Issue

தம்மாம் பைசல்


சாவர்க்கரின் சாயம் வெளுத்தது

ஆகஸ்டு 10 (2003) குடியரசு தலைவர் மாளிகையின் தோட்டம் பரபரப்பாக இருந்தது. இந்திய சுதந்திரத்திற்காகப் போராடிய மாவீரர்களை அழைத்து விருந்தளித்து அவர்களை கெளரவப் படுத்தினார் குடியரசுத் தலைவர்.

கோல்கத்தாவிலிருந்து தினேஸ்தாஸ் குப்தா என்ற 92 வயது சுதந்திரப் போராட்ட வீரர் வந்திருந்தார். இவர் அந்தமான் சிறையில் 1933 முதல் 1938 வரை 5 ஆண்டுகள் சித்ரவதைப்பட்டவர். இவர் ஆங்கிலேயரின் சிட்டகாங்க் ஆயிதக்கிடங்கைக் கைப்பற்றிய குழுவில் இடம் பெற்றவர்.

இவர் சமீபத்தில் அந்தமான் சென்றிருந்தார். அங்கு போர்ட் பிளேரில் தியாகிகள் பூங்காவைப் பார்வையிட்ட அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அங்கு வைக்கப்பட்டிருந்த தியாகிகள் சிலைகளோடு சாவர்க்கரின் சிலையும் வைக்கப்பட்டிருந்ததுதான் அவரது அதிர்ச்சிக்குக் காரணம்.

“அங்கிருந்த 8 சிலைகளுக்குச் சொந்தக்காரர்களும் மிருகத்தனமான சித்திரவதைகளை அனுபவித்தனர். அவர்கள் கொண்ட கொள்கையில் உறுதியாக இருந்தனர். ஆங்கிலேயரிடம் அவர்கள் உயிர்ப்பிச்சைக் கேட்கவில்லை. மாறாக சாவைச் சலனமின்றி ஏற்றுக் கொண்டனர். ஆனால் சாவர்க்கரோ ஆங்கிலேயர்களுக்கு உதவுவதாக கbதம் எழுதிக் கொடுத்தார். அதனால் அவரை விடுதலை செய்தனர்” என்று கூறிய தினேஷ்தாஸ் குப்தா “அந்த தியாகச் சீலர்களோடு சாவர்க்கரின் சிலையை வைத்தது அவர்களையும் அவர்களது தியாகத்தையும் அவமதித்ததாகும்.” என்று காட்டமாக கூறினார்.

“நானும் சாவர்க்கரும் ஒன்றாகத்தான் சிறையில் அடைபட்டோம். நானும் விடுதலை செய்யப்பட்டேன். சாவர்க்கரும் விடுதலை செய்யப்பட்டார். இப்படியிருக்க சாவர்க்கர் எப்படி தியாகியாவார் ?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

கடந்த (2003) பிப்ரவரி மாதம் பாசிச பா.ஜ.க அரசு சாவர்க்கரின் உருவப் படத்தை பாராளுமன்றத்தில் வைத்தது. இந்த சிலையை வைத்ததற்கு ஒரு வகையில் உதவியாக இருந்த குடியரசு தலைவர் மேல் தினேஷ்தாஸ் குப்தாவுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது.

ஆனால் சமீபத்தில் அந்தமான் சென்றிருந்த பொழுது தியாகிகள் சிலைகளோடு சாவர்க்கரின் சிலையையும் பார்த்த பிறகுதான் குப்தாவுக்கு பொறுக்க முடியவில்லை. உடனே இதற்கு தான் ஏதாவது செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்தார்.

அந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார். அப்பொழுதுதான் குடியரசு தலைவரிடம் இருந்து விருந்துக்கான அழைப்பு வந்தது. விருந்துக்கு வந்த குப்தா குடியரசு தலைவரிடம் தனது மனக்குமுறல்களைக் கொட்டி தீர்த்தார்.

“என்னால் இதற்கெதிராக ஒன்றும் செய்ய முடியாது. ஏனெனில் என்னிடம் அதிகாரம் ஒன்றும் இல்லை. என்னால் முடிந்ததெல்லாம் குடியரசு தலைவரிடம் தெரிவிப்பதுதான். அதனை நான் செய்து விட்டேன்” என்று விரக்தியோடு கூறுகிறார் குப்தா.

அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரின் விமான நிலையத்திற்கு சாவர்க்கரின் பெயரைச் சூட்டியதையும் கவலையோடு குறிப்பிடும் இவர் “இப்படி செய்தால் பின்னால் வரும் தலைமுறையினருக்கு உண்மையில் என்ன நடந்தது என்று எப்படி தெரியும்” என்று அப்பாவித் தனமாக கேட்கிறார்.

(செய்தி ஆதாரம் : தி ஹிந்து 11-08-2003)

நீலகண்டன் சார்…. இது மட்டும் போதுமா ? இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா….

—-

தம்மாம் பைசல்

faiseldmm@hotmail.com

Series Navigation

தம்மாம் பைசல்

தம்மாம் பைசல்