கடிதம் ஜூலை 22, 2004

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

T.R.பட்டினம்-H.அப்துல் ஹலிம்-துபை


நான் தொடர்ந்து ‘திண்ணை ‘ படிக்கும் வாசகன்.இதில் நண்பர் இஸ்மாயில் அவர்களின் ஆக்கம் (நாகூர் ஹந்திரி) கண்டேன்.பல நெருடல்கள்.இதை அவரை தாக்குவதற்க்கு எழுதவில்லை.புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதுகிறேன். அவரது ஆக்கதில் அவரது நண்பர் ஏதோ தவறான வழியில் போய், பிறகு நேர் வழிக்கு வந்தது போல் எழுதி இருந்தார் .முதலில் ஒன்றை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.நாம் தொடர்ந்து ஒன்றை செய்வதுனாலேயோ,சமுதாயத்தில் தொடர்ந்து செய்யப்பட்டு வருவதுனாலேயோ அது இஸ்லாம் ஆகிவிடாது. ‘இஸ்லாம் மார்க்கம் ‘ என்ற பெயரில் ஒன்று செய்யப்பட்டால்,அது ஒன்று அல்லாஹ் ‘திருகுர்ஆனில் ‘ சொல்லபட்டு இருக்கனும்,அல்லது அவனது திருத்தூதர் நபி(ஸல்) சொன்ன

ஹதீஸாக இருக்கனும்.இல்லையெனில் நபி(ஸல்) அவர்கள் நவின்றது போல் ‘நான் அங்கீகரிக்காத ஒன்று யார் செய்தாலும் அது நிராகரிக்கபடும்.அது பித்அத்(புதுமை).எல்லா பித் அதும் வழிகேடு.எல்லா வழிகேடும் நரகில் கொண்டு சேர்க்கும் ‘ என்பதாக ஆகிவிடும்.மேலும், கப்ருகள் பூசப்படுவதையோ,அதற்கு மேல் கட்டிடம் போல கட்டுவதையோமார்க்கம் தடுக்கிறது.மேலும் கப்ரு செல்லும் பெண்களை நபி(ஸல்) அவர்கள் சபித்ததாக ஹதீஸ் கூறுகிறது.ஆண்கள் கப்ரு சென்று ஜியாரத் செய்யலாம்.ஏனெனில்,கப்ரு ஜியாரத் மெளத்தை ஞாபகப்படுத்தும் என்றார்கள்.ஆனால்,பொது கப்ருஸ்தானில் தான் இந்நிலை பொருந்தும்.தர்ஹாக்களில் நிச்சயம் மெளத்து ஞாபகம் வர வாய்ப்பில்லை.அதுவும் கூடு,சந்தனம் என ஏதும் இஸ்லாத்தில் இல்லை.அவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் நல்லடியார்கள்,இஸ்லாம் மார்க்கம் தழைக்க பாடுபட்டவர்கள். நல்லடியார்கள் யாவரும் கபுருகளில்,புது மாப்பிள்ளை போல

உறங்குவதாக மற்றோர் ஹதிஸ் கூறுகிறது.மேலும், 1400 ஆண்டுகளுக்கு முன்பே, இன்று

இம்மார்க்கம் முழுமை அடைந்தாக திருக்குர் ஆன் கூறுகிறது. ஆக, மார்க்கம் என எது செய்தாலும் திருக்குர் ஆன்,ஹதீஸுடன் உரசிப் பார்த்துதான் செய்யனும்.இப்போது, திருக்

குர்ஆன், புஹாரி,முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூல்களும் தமிழில் வந்து விட்டது.IFT போன்றவை வெளியிட்டு உள்ளன.இவைகளை பார்த்து தெளிந்து,தூய இஸ்லாத்தின் படி வாழ்ந்து இம்மை மற்றும் மறுமையிலும் வெற்றி பெற முயல வேண்டும்.இதை விடுத்து காலங்காலமாக

செய்து வருகிறோம் என நியாயப் படுத்தி மற்றவர்களையும் இது தான் சரி என தவறான

பாதையை காட்ட வேண்டாம்.மற்றபடி தாங்களின் சந்தேகங்களை, மாற்றுக்கருத்துக்கள் தெரிவித்தால் இன்ஷா அல்லாஹ் பதில் தருகிறேன்.

தாங்களின் நலன் விரும்பும்,

T.R.பட்டினம்-H.அப்துல் ஹலிம்-துபை.

halim555@yahoo.com

Series Navigation