மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் ஆண்டுவிழாப் போட்டிகள்

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

அறிவிப்பு


—-

இலக்கியத்தின்பால் ஆர்வமும் நேசமும் மிக்க நெஞ்சங்களால் நடத்தப்படும் இணையக் குழுமம் மரத்தடி. மனிதர்களை ஒன்றிணைக்கிற எந்த விஷயத்தைக் குறித்தும் நாங்கள் ஆரோக்கியமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்துவருகிறோம். எங்களில் பல புதிய எழுத்தாளர்கள் உருவாகி வருகிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தி.

வளர்ந்து வரும் எழுத்தாளர்களையும், நல்ல எழுத்தின் மீது ஆர்வம் உள்ளவர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு, ‘மரத்தடி ஆண்டு விழா – 2004 ‘ போட்டிகளை அறிவிக்கிறோம். இந்தப் போட்டி நான்கு பிரிவுகளை உள்ளடக்கியது:

1. சிறுகதை

2. கட்டுரை

3. மரபுக்கவிதை

4. புதுக்கவிதை

ஒவ்வொரு பிரிவிலும் மூன்று பரிசுகள், இந்திய ரூபாயில் வழங்க உள்ளோம்.

முதல் பரிசு ரூ. 2500

இரண்டாம் பரிசு ரூ. 1000

மூன்றாம் பரிசு ரூ. 500

ஒவ்வொரு போட்டிக்கும் பரிசுக்குரிய படைப்புகளைத் தேர்ந்தெடுக்க ஒரு நடுவர் என நான்கு நடுவர்கள் இசைந்துள்ளனர்.

அவர்கள்:

எஸ். ராமகிருஷ்ணன் – சிறுகதை

ஸ்ரீதரன் – கட்டுரை

இலந்தை ராமசாமி – மரபுக்கவிதை

மனுஷ்யபுத்திரன் – புதுக்கவிதை

போட்டி விதிகள்:

—-

1. மரத்தடி யாஹூ குழுமத்தில் உறுப்பினராக உள்ளவர்கள் மட்டுமே போட்டியில் கலந்து கொள்ள முடியும். மரத்தடி யாஹூ குழுமத்தில் இதுவரை உறுப்பினராக இல்லாதவர்கள், போட்டியின் இறுதிநாளுக்குள் (செப்டெம்பெர் 4, 2004) உறுப்பினராகி, போட்டியில் கலந்து கொள்ளலாம் (http://groups.yahoo.com/group/maraththadi). மரத்தடியின் உறுப்பினர்கள் அல்லாதவர்களின் படைப்புகள் எக்காரணம் கொண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டா.

2. பரிசுகள் காசோலைகளாக அனுப்பப்படும் என்பதால் போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களைக் குறித்த தனிப்பட்ட விவரங்களை குழுமத்தின் மட்டுறுத்துனரிடமோ அல்லது போட்டி ஒருங்கிணைப்பாளரிடமோ தரத் தயாராக இருக்கவேண்டும்.

3. போட்டிக்கு அனுப்பப்படும் எந்த ஒரு படைப்பையும் போட்டியின் முடிவுகள் தெரியும்வரை படைப்பாளிகள் வேறெங்கும் (இணையக் குழுக்கள், வலைப்பதிவுகளில் கூட) பிரசுரிக்க அனுப்பக்கூடாது. படைப்புகள் மரத்தடி.காம் இணையதளத்தில்(http://www.maraththadi.com) பிரசுரிக்கப்படும். போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் வேறு இடங்களில் பிரசுரிக்க படைப்பாளிகள் விரும்பினால் அனுப்பலாம்.

4. போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் ஆசிரியரின் சொந்தக் கற்பனையாக இருக்கவேண்டும்; மொழிபெயர்ப்பாகவோ தழுவலாகவோ இருக்கக்கூடாது.

5. படைப்புகள் போட்டிக்காகவென்றே எழுதப்பட்டிருக்க வேண்டும்; ஏற்கனவே பிரசுரமான (இணையக்குழுக்கள், வலைப்பதிவுகள் உள்ளிட்ட இடங்களில்) படைப்புகளை அனுப்பக் கூடாது.

6. கட்டுரைகள் எந்தத் தலைப்பிலும் இருக்கலாம். கட்டுரைகள் 10,000 சொற்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

7. படைப்புகள் திஸ்கி எழுத்துருவில் இருக்கவேண்டும். (எழுத்துருவில் சந்தேகங்கள், பிரச்சினைகள் உள்ளவர்கள்

m_meenaks (@) yahoo.com, iyappan_k (@) yahoo.com என்கிற மின்னஞ்சல் முகவரிகளைத் தொடர்புகொள்ளவும்.)

8. போட்டியில் பங்குபெறும் படைப்புகள் கீழே குறிப்பிட்டுள்ளவாறு தலைப்பை(Subject line) அமைத்து,

முழு படைப்பையும் ஒரே மடலில் மரத்தடிக் குழுமத்தில் பொதுவில் இடப்பட வேண்டும்.

aanduvizha pOtti-2004 siRukathai –

aanduvizha pOtti-2004 katturai –

aanduvizha pOtti-2004 marabukkavithai –

aanduvizha pOtti-2004 puthukkavithai –

9. போட்டிக்கான படைப்பு என்று தெளிவாகக் குறிப்பிடப்படாத படைப்புகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டா.

10. படைப்புகளைப் போட்டிக்கென மரத்தடிக் குழுமத்தில் பொதுவில் இட்ட பின்னர் அதைத் திருத்தம் செய்து மீண்டும் உள்ளிடவோ அல்லது முதலில் உள்ளிட்ட படைப்புகளுக்குப் பதிலாக வேறு படைப்புகளை உள்ளிடுவது அனுமதிக்கப்பட மாட்டாது.

11. ஒருவரே எல்லாப் பிரிவுப் போட்டிகளிலும் கலந்துகொள்ளலாம். ஆனால், ஒவ்வொரு பிரிவிலும் ஒருவர் அதிகபட்சமாய் ஒரு படைப்பை மட்டுமே அனுப்ப இயலும்.

12. போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: செப்டம்பர் 04, 2004 11:59 PM EST.

13. கடைசித் தேதிக்குப் பின்னர் வரும் படைப்புகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படமாட்டா.

14. போட்டி விதிகளைக் குறித்து ஒருங்கிணைப்பாளரின் கருத்தும், பரிசுக்குரியனவற்றைக் குறித்து நடுவரின் கருத்துமே இறுதியானவை.

15. போட்டியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுபவரின் குடும்பத்தினர் போட்டியில் பங்கேற்க இயலாது.

16. மரத்தடி குழுமத்தின் மட்டுறுத்துனர்களும், உரிமையாளரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

17. போட்டி முடிவுகள் செப்டம்பர் 30, 2004 அல்லது அதற்கு முன் அறிவிக்கப்படும்.

18. மேலும் விவரங்களுக்கு vizha@maraththadi.com என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளுங்கள்

மேற்கண்ட விதிகளுடன் மரபுக்கவிதைக்கான சிறப்பு விதிகள்:

—-

1. மரபில் எந்த வகை யாப்பில் வேண்டுமானாலும் இருக்கலாம்.

2. வெண்பா, கட்டளைக் கலித்துறை போன்ற இறுக்கமான வகைகள் என்றால், தளை தட்டாமலும், இலக்கண விதிகளை மீறாமலும் இருப்பது அவசியம். மரத்தடிக் குழுமம் இளைஞர்களையும் மரபில் அதிகம் பயிற்சி இல்லாத கவிஞர்களையும் கொண்டது என்பதனால் நடுவரின் கருத்துக்கிசைய சில விலக்குகள் பரிசீலிக்கப்படலாம்.

3. விருத்தங்கள், சிந்து போன்ற சந்தத்தால் இயங்கும் பா வகைகளில் சந்தம் தட்டாமல் இருப்பது நலம். ஒன்றிரண்டு இடங்களில் தவறியிருந்தாலும், நடுவர் கருத்தில் ஏற்கத் தக்கவையாயின் அவற்றை ஏற்கத் தடையில்லை. நடுவரின் கருத்தே இறுதியானது.

4. இயற்றுவதற்கு மிக எளிதான ஆசிரியப் பாக்களிலும் கவிதைகளை அனுப்பலாம்.

5. கருத்தாழம், நடையழகு, எடுத்துச் சொல்லும் விதம், உணர்வுகளின் வெளிப்பாடு போன்ற சிறப்புகளை வைத்தே பரிசுகள் தீர்மானிக்கப்படும். ஆகையால், கருத்தின் வெளிப்பாட்டிலும், சொல்ல வேண்டிய கருத்தைத் தெளிவாகப் புலப்படும்படியாக எடுத்து வைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

வளர்ந்து வருகிற, புதுமுக எழுத்தாளர்கள் அனைவரையும் இந்தப் போட்டியில் பங்குபெற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இங்கனம்,

நம்பி (ஒருங்கிணைப்பாளர், மரத்தடி ஆண்டுவிழா இலக்கியப் போட்டி 2004),

மதி கந்தசாமி (மட்டுறுத்துனர், மரத்தடி யாகூ குழுமம்)

ஹரன்பிரசன்னா (மட்டுறுத்துனர், மரத்தடி யாகூ குழுமம்)

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு

மரத்தடி இணையக் குழுமம் நடத்தும் சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகள்

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue


மரத்தடி இணைய இதழும் (http://www.maraththadi.com) மரத்தடி யாஹூ குழுமமும் (http://groups.yahoo.com/group/maraththadi) திண்ணை வாசகர்கள் அறிந்ததே. திண்ணை இணையதளத்தில் மரத்தடி இணையதளத்திற்கான முகவரியை இட்டு எங்களை வாழ்த்திய திண்ணை ஆசிரியர் குழுவுக்கு நன்றிகள். வாழ்வின்பாலும், வாழ்கின்ற சமூகத்தின்பாலும், விழுமியங்கள் சொல்கின்ற இலக்கியத்தின்பாலும் ஆர்வமும் நேசமும் மிக்க இன்றைய இளைஞர்களால் இளைஞர்களுக்காக நடத்தப்படும் குழுமம் மரத்தடியாகும். மனிதர்களைப் பிளவுபடுத்தாமல் ஒன்றிணைக்கிற எந்த விஷயத்தைக் குறித்தும் நாங்கள் அங்கு ஆரோக்கியமாகக் கருத்துப் பரிமாற்றம் செய்துவருகிறோம். எங்களிலே பல புதிய எழுத்தாளர்கள் உருவாகி வருகிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும். ஓர் ஆரோக்கியமான இணையக் குடும்பமாக ஆனால் விதவிதமான வண்ணங்களைப் போன்ற எண்ணங்களுடன் நாங்கள் மரத்தடியில் வாழ்ந்து வருகிறோம்.

வளர்ந்து வரும் எழுத்தாளர்களையும், நல்ல எழுத்தின் மீது ஆர்வம் உள்ளவர்களையும் ஊக்குவிக்கும் பொருட்டு, மரத்தடியில் ‘குளிர்கால சிறுகதை, புதுக்கவிதைப் போட்டிகளை ‘ அறிவித்திருக்கிறோம். முதல் பரிசு, இரண்டாம் பரிசு என்று தேர்ந்தெடுக்கப்படும் சிறுகதைக்கும், புதுக்கவிதைக்கும் தலா இரண்டு பரிசுகள் வழங்க இருக்கிறோம். முதல் பரிசாக இந்திய ரூபாய் 5000-ம், இரண்டாம் பரிசாக இந்திய ரூபாய் 2500-ம் வழங்க உள்ளோம். திண்ணை ஆசிரியர் குழுவின் மூத்த உறுப்பினர் திரு. கோபால் ராஜாராம் அவர்கள் பரிசுக்குரிய சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து உதவுகிற நடுவராகவும், எழுத்தாளர் திருமதி. காஞ்சனா தாமோதரன் அவர்கள் பரிசுக்குரிய புதுக்கவிதைகளைத் தேர்ந்தெடுத்து உதவுகிற நடுவராகவும் பணிபுரிய அன்புடன் இசைந்துள்ளார்கள்.

ஆறுதல் பரிசுகளும் உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளும் கவிதைகளும் ‘கணையாழி ‘ இலக்கிய இதழிலும் முக்கிய இணைய இதழ்களிலும் முதல் பிரசுரம் பெறும். காப்புரிமையும் மறுபிரசுர உரிமையும் எழுத்தாளருக்கே.

இலக்கியத்தின் மீது ஆர்வம் உடைய புதுமுக மற்றும் வளர்ந்து வரும் எழுத்தாளர்களை இந்தப் போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். போட்டிக்கான விதிகளை மரத்தடி யாஹூ குழுமச் செய்திகளில் காணலாம். திண்ணை வாசகர்களுக்காக அவற்றை மீண்டும் கீழே தந்திருக்கிறோம்.

1. மரத்தடி யாஹூ குழுமத்தில் உறுப்பினராக உள்ளவர்களே போட்டியில் பங்கெடுத்துக் கொள்ள முடியும். மரத்தடி யாஹூ குழுமத்தில் இதுவரை உறுப்பினராக இல்லாதவர்களூம்கூட, போட்டியின் இறுதிநாளுக்குள் (பிப்ரவரி 15, 2004 EST) உறுப்பினராகிப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

2. பரிசுகள் காசோலைகளாக அனுப்பப்படும் என்பதால் போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களைக் குறித்த தனிப்பட்ட விவரங்களைத் தரத் தயாராக இருக்கவேண்டும். தனிப்பட்ட விவரங்களைப் பொதுவில் பகிர்ந்து கொள்ளத் தயக்கமென்றால் அவற்றை குழுமத்தின் மட்டுறுத்துனரிடமோ போட்டியின் ஒருங்கிணைப்பாளருடனோ பகிர்ந்து கொள்ளலாம்.

3. போட்டிக்கு அனுப்பப்படும் எந்த ஒரு படைப்பையும் போட்டியின் முடிவுகள் தெரியும்வரை அவற்றின் ஆசிரியர்கள் வேறெங்கும் (இணையக் குழுக்கள், வலைப்பதிவுகளில் கூட) பிரசுரிக்க அனுப்பக்கூடாது. பரிசுக்குத் தெரிவான படைப்புகள் மரத்தடி இணையதளத்தில் பிரசுரிக்கப்படும். போட்டியில் வெல்கின்ற படைப்புகளை போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒரு மாதத்திற்குப் பின்னரே வேறிடங்களில் அவற்றின் ஆசிரியர்கள் பிரசுரிக்க விரும்பினால் அனுப்பலாம்.

4. பி.கே.சிவகுமார் இந்தப் போட்டியின் ஒருங்கிணைப்பாளராகச் செயல்படுவார். ஒருங்கிணைப்பாளரோ அவர் குடும்பத்தினரோ இந்தப் போட்டியில் பங்கேற்க இயலாது.

5. மரத்தடி குழுமத்தின் மட்டுறுத்துனர்கள் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.

6. போட்டியில் பங்குபெறும் படைப்புகளை ‘மரத்தடி குளிர்கால சிறுகதைப் போட்டி – <<கதையின் தலைப்பு>> ‘, ‘மரத்தடி குளிர்கால புதுக்கவிதைப் போட்டி – << புதுக்கவிதையின் தலைப்பு (தலைப்பு இருக்குமானால்)>> என்கிற ‘Subject ‘ உடன் மரத்தடி குழுமத்தில் பொதுவில் மடலிடுங்கள்.

7. போட்டியில் பங்குபெறும் படைப்புகள் போட்டிக்காகவென்றே எழுதப்பட்டிருக்க வேண்டும்; அதாவது, வேறெங்கும் (இணையக்குழுக்கள், வலைப்பதிவுகளில் கூட) முன்னமே பிரசுரமாகியிருக்கக் கூடாது.

8. போட்டியில் பங்குபெறும் படைப்புகள் ஆசிரியரின் சொந்தக் கற்பனையாக இருக்கவேண்டும்.

9. போட்டி விதிகளைக் குறித்து ஒருங்கிணைப்பாளரின் கருத்தும், பரிசுக்குரியனவற்றைக் குறித்து நடுவரின் கருத்துமே முடிவானவை; உறுதியானவை. போட்டிக்கு உதவலாம் என்கிற எண்ணத்துடனும், முரண்களையும் சர்ச்சைகளையும் தவிர்க்கும் நோக்குடனும், இந்தப் போட்டியின் விதிகளை மாற்றவோ, தளர்த்தவோ, கூட்டவோ ஒருங்கிணைப்பாளருக்கு உரிமை உண்டு.

10. போட்டிக்கான படைப்பு என்று தெளிவாகக் குறிப்பிடப்படாத படைப்புகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டா.

11. போட்டிக்கான படைப்புகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: பிப்ரவரி 15, 2004 11:59 PM EST.

12. போட்டியின் முடிவுகள் பிப்ரவரி 29, 2004 அல்லது அதற்கு முன் அறிவிக்கப்படும்.

13. ஒருவர் அதிகப்பட்சமாய் ஒரு சிறுகதையும், ஒரு புதுக்கவிதையும் மட்டுமே போட்டிக்கு அனுப்ப இயலும்.

14. மேலும் விவரங்களுக்கு mathygrps@yahoo.com அல்லது pksivakumar@att.net ஆகிய மின்னஞ்சல்களுக்கு மடலிடுங்கள்.

வளர்ந்து வருகிற, புதுமுக எழுத்தாளர்கள் அனைவரையும் இந்தப் போட்டியில் பங்குபெற்றுச் சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

– சந்திரமதி கந்தசாமி

(மரத்தடி யாஹூ குழும மட்டுறுத்துனர்கள் சார்பாக)

http://groups.yahoo.com/group/maraththadi

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு